search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி ஊருக்குள் வராமல் புறவழிசாலையில் செல்லும் அரசு- தனியார் பஸ்கள் :பொது மக்கள் தவிப்பு
    X

    புவனகிரி ஊருக்குள் வராமல் புறவழிசாலையில் செல்லும் அரசு- தனியார் பஸ்கள் :பொது மக்கள் தவிப்பு

    • பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதற்கும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது.
    • வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    கடலூர்:

    புவனகிரியை சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்வதும் பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மற்றும் மருத்துவமனைக்கு செல்வதற்கும் இதுபோன்று பல்வேறு அரசு பணிகளுக்கு செல்வதும் காலையில் பஸ்கள்வருவது கிடையாது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கின்றனர்.

    இதேபோல் இரவு நேரங்களில் திரும்பி வருவதற்கும் பஸ்கள் புவனகிரி வழியாக வருவது கிடையாது. அனைத்து தனியார் மற்றும அரசு பஸ்கள் சி .முட்லூர் புறவழிச்சாலை வழியாக செல்கிறது. குறிப்பாக புறவழிச் சாலையில் தான் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புவனகிரி மற்றும் புவனகிரி சுற்றியுள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தலைமையில் விரைவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர்.

    Next Story
    ×