search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvaiyar"

    • கலியுகத்தில் ராம நாமத்தின் சிறப்பை தியாகராஜ சுவாமிகள் வெளிப்படுத்தினார்.
    • காக்கர் லா வம்சத்தில் ராம பிரம்மம் என்ற மகான் பிறந்தார்.

    `நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

    இம்மையே இராமவென்

    றிரண்டெழுத்தினால்'

    கம்பர் இவ்வாறு ராமனின் பெருமையை, ராம நாமத்தின் சிறப்பினைக் கூறுகிறார். கலியுகத்தில் ராம நாமத்தின் சிறப்பை, மும்முர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் எனப்படும் தியாகராஜ சுவாமிகள் வெளிப்படுத்தினார்.

    ஒரு சமயம் ஒரு தீட்சிதர், தியாகராஜ சுவாமிகளை பார்த்து `பஜனை, நாத, உபாசனை சாமானியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அந்தணர்கள் அனைவரும் யாகங்களும், பூஜைகளும் செய்துதான் மோட்சத்தை அடைய வேண்டும்' என்று கூறினார்.

    அதைக் கேட்ட தியாக பிரம்மமோ நாம சங்கீர்த்தனமே மோட்சத்தை தரும் என்ற வகையில், `யக்ஞாதுலு ஸுகமனு வாரிகி ஸமுலக்ஞானுலு கலரா-ஓ மனஸா' என்று கூறினார். அதாவது, `ராம பஜனையை தவிர்த்து விட்டு, யாகம் முதலியவைகளே சிறந்ததென்று சொல்கிறவர்களுக்கு சமமான அஞ்ஞானிகளும் உலகில் உண்டோ' என்பது இதன் பொருள்.

    தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த இல்லம்

    தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த இல்லம்

     தியாகராஜர் அவதாரம்

    ஒரு சமயம் ஆந்திர தேசத்தில் இருந்து பல குடும்பங்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தன. அந்த குடும்பத்தில் காக்கர் லா வம்சத்தில் ராம பிரம்மம் என்ற மகான் பிறந்தார். அவர் சிறந்த ஞானியாகவும், வைராக்கியம் மற்றும் ராம பக்தி உள்ளவராகவும் திகழ்ந்தார். இவர் பாகவத சம்பிரதாயத்தில் விருப்பம் உள்ளவராக திகழ்ந்த ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சுவாமிகள் என்ற பெரிய மகானிடம், ராம நாம உபதேசம் பெற்று, தாரக நாமத்தை ஜெபம் செய்து வந்தார்.

    ராம பிரம்மத்திற்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன. மூத்தவன் ஜப்பியேசன். மூன்றாவது குழந்தையான தியாகராஜர், 1767-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி, சர்வஜித் வருடம் சித்திரை மாதம் பூச நட்சத்திரம் கடக ராசியில் அவதரித்தார். நடுவில் உள்ள பிள்ளையை பற்றிய தகவல் இல்லை. தியாகராஜருக்கு அவரது அன்னை, புரந்தரதாசரின் கீர்த்தனங்களை சொல்லிக் கொடுத்தார். மகான் தியாகராஜர் வேதாந்த சாஸ்திரத்திலும், வியாகரணத் திலும் பண்டிதராக திகழ்ந்தார்.

    மண வாழ்க்கை

    தியாக பிரம்மம் தன் தகப்பனார், தாயார் சொல்படி பார்வதி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில வருடத்தில் பார்வதி அம்மாள் கடும் நோய்க்கு ஆளானார். அந்த நேரத்தில் மனைவி இறந்து விடுவாள் என்பதை அறிந்துகொண்ட தியாக பிரம்மம், தன் மனைவியின் இறப்புக்குப் பின் சன்னியாசம் பெற்றுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்.

    ஆனால் அவரது எண்ணத்தை அறிந்த பார்வதி அம்மாள், "நான் விரைவில் இறந்துவிடுவேன். தங்களை ஒரு வால்மீகிபோல் பார்க்கிறேன். நான் உங்களுடன் வாழ்ந்தது ஐந்து வருட காலமே. தாங்கள் தனியாக இருக்க வேண்டாம். சன்னியாசியாக வேண்டாம். என் சகோதரி கமலாம்பாளை திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பார்வதி அம்மாள் இறந்த பிறகு அவரது சகோதரியான கமலாம்பாளை, தியாக பிரம்மம் திருமணம் செய்து கொண்டார்.

    ராமர் தரிசனம்

    தியாக பிரம்மம், ராமபிரான் மீது பல கீர்த்தனைகள் பாடி ஆனந்தமாக இருந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர் என்ற ஒரு மகா சன்னியாசி, தியாக பிரம்மத்தை தேடி வந்தார். அவரை தன் இல்லத்திலேயே உணவருந்தும்படி தியாக பிரம்மம் வேண்டிக் கொண்டார். சன்னியாசியும் அதற்கு ஒப்புக்கொண்டு `தங்களுக்கு இவ்வளவு ராம பக்தி இருக்கிறதே, ராமபிரானின் மந்திரம் உபதேசம் ஏதாவது தங்களுக்கு உள்ளதா?" எனக் கேட்டார்.

    அதற்கு தியாகராஜர், `என் தகப்பனாரிடம் நான் பெற்ற ராம நாம ஜபம் தவிர, வேறு மந்திர உபதேசம் என்று இதுவரை யாரும் எனக்கு செய்யவில்லை' என்றார். அதற்கு சன்னியாசி `ராம தரிசனம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான 'ராம ஷடாட்சரி' மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன்" என கூறி, தியாக பிரம்மத்திற்கு மந்திர உபதேசம் செய்து வைத்தார்.

    பின்னர், "இதை பக்தி சிரத்தையுடன் 96 கோடி முறை ஜெபம் செய். அப்போது உனக்கு ராம தரிசனம் கிட்டும்' எனக் கூறி சென்றுவிட்டார்.

    தியாகராஜர், ராம ஷடாட்சரி மந்திரத்தை தினமும் பல லட்சங்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் 'இவ்வளவு ராம நாமத்தை ஜெபித்தும் ராம தரிசனம் கிடைக்கவில்லையே' என வருந்தினார். அப்போதுதான் அவருக்கு, 96 கோடி ஜபம் முடிந்திருந்தது. ஆனால் தியாக பிரம்மம் இதை அறியவில்லை. அன்று இரவு அவரது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்க்கையில், ராம -லட்சுமணர் தரிசனம் கிடைத்தது.

    உள்ளம் சிலிர்க்க பக்தி பரவசமானார். ராமபிரான் அவரிடம் 'என்ன வரம் வேண்டும்' என கேட்க, 'இதுவரை நீ செய்த அனுக்கிரகமே பெரியது. அதற்கே நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை' எனக் கூறி 'வராலாந்து கொம்மனி நாயந்து வஞ்சனஸேய நியாயமா, ஸுராஸுரவினுத ராம நாமன ஸுஸுபக்தினி கோரி யுண்டகனனு' என்னும் கீர்த்தனையைப் பாடினார்.

    இப்படி தன் வாழ்நாளில் மூன்று முறை தியாகராஜர், ராமபிரானின் தரிசனத்தைப் பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஸ்ரீராமபிரான், தியாகராஜரின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இவர் எவ்வளவோ மந்திர சித்திகள் பெற்றும், கடைசிவரை உஞ்சவிருத்தி மூலமாகவே வாழ்க்கை நடத்தி வந்தார். ராம நாமத்தை பாடியபடி தெருக்களில் நடந்து செல்வார். அப்போது மற்றவர்கள் கொடுக்கும் அரிசியை வாங்கிக்கொள்வார். பணம், பொன், பொருள் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார்.

     ஜீவசமாதி

    தியாக பிரம்மம் ராம பக்தியில் திளைத்து வாழ்ந்த காலத்தில், அவரது இறுதி முடிவை அவர் அறிந்தார். அப்போது ராமன் அவர் கனவில் வந்து, சன்னியாசம் ஏற்றுக்கொள்ளச் சொன்னதாக சொல்கிறார்கள். தியாகராஜர் ஒரு ஏகாதசி அன்று அனைவரையும் கூப்பிட்டு "இன்னும் பத்து நாட்களில் நான் ஜீவசமாதி அடையப்போகிறேன்" என்றார்.

    இவருக்கு பரமஹம்சர் நந்தேந்திர சுவாமிகள் என்பவர், சன்னியாச தீட்சை அளித்தார். `நாத ப்ரம்மானந்தர்' என்ற பெயரையும் தியாகராஜருக்கு சூட்டினார். 6.1.1847 அன்று புஷ்ய பகுள பஞ்சமி நாளில், தியாக பிரம்மம் தன் சிரசில் கபாலம் வெடித்து ஜீவசமாதி அடைந்தார். கலியுகத்தில் கபால மோட்சம் அடைந்தவர்கள், மிக மிக அரிது. இவர், "நான் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, என் பெருமையை உலகம் அறியும்" என்று கூறி மறைந்தார்.

    அதன்படி 1907-ம் ஆண்டு முதல், தியாகராஜ ஆராதனை விழா சிறப்பாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். இவர் ஜீவ சமாதி அடைந்த தினத்தை ஆராதனையாக வருடா வருடம் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். திருவையாறில் இன்றும் இவரது ஆராதனை விழா அன்று, ஏராளமான சங்கீத வித்வான்கள் கூடி, பாடல்கள் பாடி, பலவிதமான இசைக் கருவிகளுடன் கர்நாடக சங்கீதத்தை இசைத்து ஆனந்தமாக கொண்டாடி வருகிறார்கள்.

    வால்மீகி முனிவரே, தியாகராஜராக அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. வால்மீகி முனிவர் 2,400 சுலோகங்களில் ராமாயணத்தை இயற்றினார். அதே போல் தியாகராஜரும், 2,400 கீர்த்தனைகளில் ராமாயணத்தை பாடியிருப்பதாக கூறப்படுகிறது. தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி, இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    • திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.
    • நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ள கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் கிராம விவசாயிகள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள், சப்இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர் மற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதி கீழத்திருப்பூந்துருத்தி சுகுமார் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாய சங்க பிரதிநிதி சுகுமார் பேசும்போது திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.

    மேலும் நில எடுப்புக்கு நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் பேசும்போது நில எடுப்பு சட்டத்தின்படியே நிலத்திற்கான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழங்கிட இயலும் என தெரிவிக்கப்பட்டது.

    சுகுமாறன் தலைமையில் கலந்துகொண்ட விவசாயிகள் நில எடுப்பு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்பில் உள்ள நில எடுப்பு செய்த உத்தரவின் நகல் தேவை என்றும், அதன் பின்னரே விவசாயிகள் தரப்பில் உரிய முடிவு எடுத்திட இயலும் என்று தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் வருவாய் கோட்ட அலுவலரிடம் கலந்துபேசி இதற்கான முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்து. எதிர்வரும் 23-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    திருவையாறில் வீட்டு பராமரிப்பு பணியின்போது தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு காமராஜ் நகரை சேர்ந்தவர் திலகர். இவரது வீட்டு கட்டுமானப்பணியில் சடையாண்டிதோப்புவை சேர்ந்த முருகன் (வயது 25). இவர் வெல்டிங் வேலை செய்துள்ளார். அப்போது சாளரம் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் அருகில் வேலை செய்த காமராஜர் நகரை சேர்ந்த சிவக்குமார் (31) என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

    ×