search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 lane"

    • சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • புதிய 6 வழிச் சாலைக்கான டெண்டர்களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் புறநகர் பகுதிகளில் இருப்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.

    இதனால் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நகர எல்லைக்குள் கனரக வாகனமோ, கார், வேன் போன்ற வாகனமோ செல்லாமல் சுற்று வட்டச் சாலையை பயன்படுத்தி கடந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு முன்னேற்ற கழகம் சார்பாக வெளிவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை வெளிவட்ட சுற்று சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கை 2017-ல் சமர்பிக்கப்பட்டது. இந்திய ரோடு காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் இரண்டு வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையும், ஒரகடம், தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    133 கி.மீ. நீளமுள்ள சென்னை வெளிவட்ட சுற்று சாலை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் தொடங்கி சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம் தச்சூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகம் வழியாக எண்ணூர் துறைமுகம் வரை ரூ.15,626 கோடியில் அமைகிறது. 5 பிரிவுகளாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான 25.50 கி.மீ. தூரமும், தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள தச்சசூரில் இருந்து திருவள்ளூர் புறவழிச் சாலை தொடங்கும் வரை 26.25 கி.மீ. மூன்றாவதாக 29.55 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் புறவழிச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையும் அமைகிறது. ஸ்ரீபெரும்புதூ ரில் இருந்து சிங்க பெருமாள் கோவில் வரை உள்ள 24.85 கி.மீ. தூரத்திற்கு 4-வது பிரிவு அமைகிறது. 5-வது பிரிவு சிங்க பெருமாள் கோவிலில் இருந்து மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் 27.50 கி.மீ. தூரம் இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் -சிங்க பெருமாள் கோவில் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்க ஒரு ஆலோகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 6 வழிச்சாலை அமைக்கப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் பிரிவு பணிகளின் ஒரு பகுதியாக திருவள்ளூர் பைபாஸ்- வெங்கத்தூர் மற்றும் வெங்கத்தூர் செங்காடு வரையிலான புதிய 6 வழிச்சாலைக்கான டெண்டர் களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்ட பின்னர் நீட்டிப்புகளுக்கான புதிய டெண்டர் அமைக்கப்பட்டுள்ளன என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
    • 2024 - ம் ஆண்டு மே மாதத்திற்குள் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கன்னடிகுப்பம் ,அய்யனூர் ரெயில்வே மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத் துறையால் ரூ .27.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . அந்தப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சுமார் 10 ஆண்டு காலம் நில எடுப்புப் பணிகள் நடைபெறாமல் இந்த திட்டம் நிலுவையில் இருந்தது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ் டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் மேம்பாலப் பணிகள் நடைபெறாமல் உள்ளன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு , அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிறகு பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, கன்ன டிகுப்பம் அய்யனூர் ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . அந்தப் பணியை தற்போது ஆய்வு செய்துள்ளேன். 2024 - ம் ஆண்டு மே மாதம் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்.

    இந்த பாலத்தால் வெள்ளக்குட்டை மற்றும் மலைப் பகுதிகளில் இருந்து விளைவிக் கக்கூடிய விவசாய பொருள்கள் உரிய நேரத்தில் நகர்ப் பகுதிக்கு கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்கும் , வேலைக்கு செல்லும் பணியாளர்கள் , தொழிலாளர்கள் , பள்ளி , கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் , வியாபாரிகள் பயன்பெறுவார்கள் . ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது .

    இதைத் தடுக்க விரைவில் திருப் பத்தூரில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் . அதேபோல நெடுஞ் சாலைத் துறை சார்பில் , மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்கான நிகழ்ச்சிகள் நடத் தப்படும் . வாணியம்பாடி நியுடவுன் ரெயில்வே மேம்பாலப் பணிக்காக நிலம் எடுக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    அந்தப் பணி நிறைவடைந்த உடன் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் , எம் எல்ஏ - க்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர் , கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர்கள் சுந்தர், முரளி, உதவி கோட்டப் பொறியாளர்கள் யாகூப், பாபு, உதவி செயற் பொறியாளர்கள் ஜலாலுதீன், சிலம்பரசன், தாசில்தார் மகாலட்சுமி, ஆம்பூர் நகராட்சி கமிஷ்னர் ஷகிலா, பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×