காஞ்சிபுரத்தில் பரவலாக மழை- போக்குவரத்து நெரிசல்

விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் பரவலாக மழை- போக்குவரத்து நெரிசல்
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பரவலாக மழை பெய்தது. காலை 7 மணி வரை விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டியது. பின்னர் சாரல் மழையாக நீடித்தது. இதேபோல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், சுங்குவார் சத்திரம், ஓரகடம், பாலு செட்டி சத்திரம், சாலவாக்கம், என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

திடீர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com