search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager"

    • அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். திடீரென்று சிறுமியை காணவில்லை. அதிர்ச்சிடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • பரமசிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர்.
    • வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு ராஜா என்ற ராஜேந்திரன், கிருஷ்ணன், அசோக்ராஜ், தர்மராஜ் என்ற 4 மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனை தவிர மற்று 3 பேரும் பரமசிவத்திடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது மூத்த மகன் ராஜேந்திரன் பின்னர் பார்ப்போம் என்று கூறி வந்தார். இந்நிலையில் கடைசி மகனான தர்மராஜ் மீண்டும் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மகன் மற்றும் கும்பலுடன் சேர்ந்து மோட்டார் சைக்களில் சென்ற தர்மராஜ் அவனது அண்ணன் அசோக்ராஜ்சை வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அண்ணன் தம்பியை தாக்கிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் தொட ர்புடைய ராஜேந்திரனின் மகன் சக்திவேல் திட்டக்குடி அடுத்த இளமங்களம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ராஜேந்திரன் மற்றும் மற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
    • அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜி தகாத வார்த்தைகளால் திட்டி தனுஷ் குமாரை தடியால் தாக்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    காட்டேரிக்குப்பம் அருகே சந்தை புதுக்குப்பம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சுதர்சன் இவரது மகன் தனுஷ் குமார் (வயது 18) இவருக்கும் தமிழக பகுதியான தொள்ளாமூரை சேர்ந்த ராஜீ என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனுஷ் குமார் சந்தை புதுக்குப்பத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உள்ள மைதானத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த ராஜி தகாத வார்த்தைகளால் திட்டி தனுஷ் குமாரை தடியால் தாக்கினார்.

    மேலும் இனிமேல் எங்களிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் வெட்டிக் கொலை செய்து விடுவேன் என்று தனுஷ் குமாரை மிரட்டி விட்டு சென்றார். இந்த தாக்குதலில் காயமடைந்த தனுஷ் குமார் காட்டேரி குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தனுஷ் குமாரின் தாய் மஞ்சுமாலா காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கீர்த்திகா
    • ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ள கீர்த்திகா அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கஜேந்தி ரன் (27) என்பவரை காத லித்து கடந்த ஆண்டு திரு மணம் செய்து கொண்டார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கீர்த்திகா (23).

    பட்டதாரி

    ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்துள்ள கீர்த்திகா அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கஜேந்தி ரன் (27) என்பவரை காத லித்து கடந்த ஆண்டு திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கீர்த்திகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்த கஜேந்திரன் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    2-வது திருமணம்

    இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஜேந்தி ரன் வேறு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீர்த்திகா தனது தந்தையுடன் கஜேந்திரன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.

    சிறையில் அடைப்பு

    அப்போது கீர்த்திகா மற்றும் அவரது தந்தையை கஜேந்திரன் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கீர்த்திகா தார மங்கலம் போலீஸ் நிலை யத்தில் கஜேந்திரன் மீது புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
    • கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.

    பல்லடம்

    பல்லடம் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள பேன்சி கடை, மற்றும் கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து வியாபாரிகள் பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும் திருடன் சிக்கவில்லை. இதையடுத்து கடைக்காரர்கள் கடைகளுக்கு முன்னும் பின்னும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். சம்பவத்தன்று இரவு பேன்சி கடை, துணிக்கடை உள்ளிட்ட கடைகளில் சுமார் ரூ.2.500 மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது.

    கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது, அதில் ஒரு வாலிபர் கடைகளில் புகுந்து திருடுவது தெரிய வந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் பல்லடம் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவத்தை கடைக்காரர்களின் செல்போனுக்கு சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்தனர்.

    இதற்கிடையே நேற்று இரவு கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் கொண்ட நபர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார்.

    அவரை வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது அவர் கடைகளில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து பேன்சி கடை நடத்தி வரும் நாகராஜன் (வயது59) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அவன் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி புத்தி பதார் என்பவரது மகன் ராஜு என்கிற சிந்தாமணி (வயது 28) என்பது தெரிய வந்தது.

    அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணிமாறன் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் அவர் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யத்தை அடுத்த கொள்ளுதீவை சேர்ந்தவர் பாலு மகன் மணிமாறன் (வயது 21). மாற்றுத்திறனாளி.

    இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியன்பள்ளியை நோக்கி வந்த டெமு ரெயில் மணிமாறன் மீது மோதியது.

    இதில் மணிமாறன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வானூர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
    • ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.

    விழுப்புரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துராம் (வயது 40). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் தங்கியுள்ளார். வீடு வீடாக சென்று நகை பாலீஷ் போடும் தொழில் செய்கிறார். இவர் வானூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.

    அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (வயது 36), கைகளில் அணியும் தங்க வளையலுக்கு பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்தார். இதனை வாங்கிய பிந்துராம், தான் வைத்திருந்த ஒரு திரவத்தில் தங்க வளையலை போட்டு எடுத்தார்.வெளியில் எடுத்தபோது தங்க வளையல் 3 துண்டுகளாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பிந்துராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன பிந்துராம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார்.

    சந்தேகமடைந்த பொதுமக்கள் பிந்துராமை பிடித்து சென்று வானூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிந்துராம், நகை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிந்துராமை கைது செய்த வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில வாலிபர் தங்க நகையை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எனக்காக வைத்திருந்த மது எங்கே என விமலிடம் கேட்ட பொழுது, அஜய் தூங்கியவுடன் எல்லா மதுவையும் குடித்து விட்டதாக விமல் கூறியுள்ளார்.
    • கோட்டக்குப்பம் போலீசார் அஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பெரியக்கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ் மகன் விமல் (வயது 20). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் அஜய் (வயது 20). இருவரும் உறவினர்கள். சம்பவத்தன்று இரவு இருவரும் அங்குள்ள தென்னந்தோப்பில் விடிய விடிய, மது அருந்தி உள்ளனர்.

    மறுநாள் விடிந்து இருவருக்கும் போதை கலைந்த நிலையில் அஜய் எழுந்து மீதமிருந்த மது பாட்டிலை பார்த்த பொழுது அதில் மது இல்லை. எனக்காக வைத்திருந்த மது எங்கே என விமலிடம் கேட்ட பொழுது, அஜய் தூங்கியவுடன் எல்லா மதுவையும் குடித்து விட்டதாக விமல் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஜய் மறைத்து வைத்திருந்த கத்தியால் விமலை சரமாரியாக குத்தி உள்ளார்.

    இதில் காயமடைந்த விமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விமல் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் அஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • தலைக்கேறிய போதையால் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • கணவரின் உடலை பார்த்து காதல் மனைவி கதறி அழுதார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதி–யைச் சேர்ந்தவர் புலியூர்சாமி மகன் பாண்டித்துரை (வயது 30). கூலி வேலை பார்த்து வந்த இவர் மலைவாழ் மக் கள் இனத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திரு–ம–ணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    வேலைக்கு சென்று கிடைக்கும் சம்பள பணத் தின் பெரும் பகுதியை பாண்டித்துரை குடித்தே அழித்து வந்தார். இதனால் குடும்பம் நடத்தவும், குழந் தையை வளர்க்கவும் அவ–ரது மனைவி ஐஸ்வர்யா மிகவும் சிரமப்பட்டு வந்தார். பலமுறை கண்டித்தும், அறி–வுரை கூறியும் அவர் திருந்த–வில்லை. இதனால் கடந்த இரண்டு தினங்களாக கண–வன், மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாண்டித்துரை நேற்று, ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருகே இருந்த கிணற்றின் மேட்டு பகுதியில் அமர்ந்து குடித்தார். அள–வுக்கு அதிகமான போதை–யில் இருந்த அவர் எழுந்து வீட்டுக்கு செல்ல முயன்ற–போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந் தார்.

    இதைப்பார்த்த அங்கிருந் த–வர்கள் கிணற்றுக்குள் இறங்கி அவரது கையைப் பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் தலைக் கேறிய போதையில் இருந்த அவரால் கிணற்றுக்குள் இருந்து எழுந்து வரமுடிய–வில்லை. தொடர்ந்து போராடியும் பலனளிக்கா–மல் போனது. ஒரு சில விநாடிகளில் அவர் தண்ணீ–ரில் மூழ்கினார்.

    உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தக–வல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீய–ணைப்பு வீரர்கள் உடலை தேடும் பணி ஈடுபட்டனர். ஒரு வழியாக 12 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் பாண்டித்துரையின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து ராஜபாளை–யம் தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதை–யால் உயிரை விட்ட கண–வரின் உடலை பார்த்து அவரது காதல் மனைவி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    • எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×