search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery fraud"

    • வானூர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
    • ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.

    விழுப்புரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துராம் (வயது 40). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் தங்கியுள்ளார். வீடு வீடாக சென்று நகை பாலீஷ் போடும் தொழில் செய்கிறார். இவர் வானூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.

    அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (வயது 36), கைகளில் அணியும் தங்க வளையலுக்கு பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்தார். இதனை வாங்கிய பிந்துராம், தான் வைத்திருந்த ஒரு திரவத்தில் தங்க வளையலை போட்டு எடுத்தார்.வெளியில் எடுத்தபோது தங்க வளையல் 3 துண்டுகளாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பிந்துராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன பிந்துராம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார்.

    சந்தேகமடைந்த பொதுமக்கள் பிந்துராமை பிடித்து சென்று வானூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிந்துராம், நகை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிந்துராமை கைது செய்த வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில வாலிபர் தங்க நகையை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரியை சேர்ந்த குழந்தை இல்லாத பெண்ணிடம் பரிகாரம் என்ற பெயரில் 13 பவுன் நகையை மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    கன்னியாகுமரி மாவட்டம் கோவில் விளையைச் சேர்ந்தவர் அனீஷ். இவரது மனைவி ஜாஸ்மின் ஆஷா (வயது 30) இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான், கடந்த மாதம் (ஏப்ரல் 26-ந்தேதி) சாத்தூரில் உள்ள பெந்தே கோஸ்தே சபைக்கு வந்திருந்தேன். அப்போது ராஜ்குமார் (28) மற்றும் அடையாளம் தெரியக்கூடிய நபர் அறிமுகமானார்கள்.

    அவர்கள் எனக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்து அந்த பகுதியில் உள்ள சின்னப்பன் குருசரடி ஆலயத்தில் நகைகளை வைத்து பரிகார பூஜை நடத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றனர். அதனை நம்பி 13 பவுன் நகைகளை கொடுத்தேன். அதனை வாங்கிச் சென்றவர்கள் நகையோடு மாயமாகி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்குமார், ஏற்கனவே நகை திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருப் பது தெரியவந்தது. மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×