search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்த"

    • நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 5-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக உரையும், இரவு திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நாட்டிய குழுவினரின் பரதநாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை, கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும் போது கோவில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிர கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது.

    6-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பிலும் காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சார்பிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்த னக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
    • அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 3 குழந்தைகளுடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
    • எனவே என் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 3 குழந்தைகளுடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். அப்போது பையில் மன்னனை வைத்திருந்தார். அதை அவர் எடுக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் கூறுகையில் எனது மாமனார் அப்பகுதி பள்ளிக்கு இலவசமாக கொடுத்த 13 செண்ட் நிலத்தை தி.மு.க. பிரமுகர் அபகரிக்கும் நோக்கில் எங்களை மிரட்டி வருகிறார். மேலும் அடியாட்களுடன் வந்து வீட்டிலிருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு உடனடியாக வீட்டை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக அச்சுறுத்துகிறார். எனவே என் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர். 

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×