search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brought"

    • திருமங்கலம் அருகே விதிகளை மீறி லாரியில் கொண்டுவந்த 43 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உரிமையாளர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    திருமங்கலம், ஆக.14-

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையிலிருந்து லாரியில் 43 மாடுகளை ஏற்றப்பட்டு மதுரை மாவ ட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஒரே லாரியில் இடை வெளி யின்றி ஏராளமான மாடுகள் ஏற்றி வருவதாக விருதுநகர் மாவட்ட பிராணிகள் நலவாரிய அமைப்பான பிப்பீள் பார் அனிமல்ஸ் அமைப்பின் செயலர் சுனிதாகிறிஸ்டிக்கு புகார் வந்தது.

    தொடர்ந்து திருமங்கலம் வந்த அவர் நேற்று இரவு கப்பலூர் மேம்பாலத்தில் மாடுகளுடன் வந்த லாரியை மறித்தார். பின்னர் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியை மாடுகளுடன் பறிமுதல் செய்தனர்.

    லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடை யநல்லூர் மேல திருவேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் மனோகரன், டிரைவர் முத்துபாண்டி(32) என்பது தெரியவந்தது.

    சுனிதா கொடுத்த புகாரில் போதுமான இடை வெளியின்றி மாடுகளை அடைத்து கொண்டும், போதுமான உணவு, தண்ணீர் கொடு க்காமல் நீண்டதூரம் லாரி யில் நிற்கவைத்து கொண்டு வந்ததாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 43 மாடுகளை விருதுநகரில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர். 

    துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. #PNBScam #MehulChoksi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சி.பி.ஐ. மும்பை கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. அதே சமயம் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்கி, பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து கொண்டு வந்து இருப்பதாகவும், விரைவில் தாங்களும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PNBScam #MehulChoksi
     
    ×