search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் உள்ள மெகுல் சோக்சி நிறுவனத்தில் ரூ.85 கோடி நகைகள் பறிமுதல்
    X

    துபாயில் உள்ள மெகுல் சோக்சி நிறுவனத்தில் ரூ.85 கோடி நகைகள் பறிமுதல்

    துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. #PNBScam #MehulChoksi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றனர். அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சி.பி.ஐ. மும்பை கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. அதே சமயம் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்கி, பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் துபாயில் இயங்கும் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நகைக்கடை நிறுவனத்தில் இருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 34 ஆயிரம் தங்க நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து கொண்டு வந்து இருப்பதாகவும், விரைவில் தாங்களும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வோம் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  #PNBScam #MehulChoksi
     
    Next Story
    ×