search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PNB scam"

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஜாமீன் மனு மீது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. #NiravModi #PNBFraud
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி விடுத்த வேண்டுகோளின்பேரில், அவர் சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 29-ந் தேதிவரை (நாளை) காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு, 29-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனால், சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை சேர்ந்த இணை இயக்குனர் அந்தஸ்து கொண்ட தலா ஒரு அதிகாரி, நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர்.

    நிரவ் மோடி மனைவி அமிக்கு எதிராக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும் இதர ஆதாரங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். லண்டனில் அவர்கள் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை எடுத்துரைக்க உள்ளனர்.
    வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #NiravModi #PNBScam
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.  #NiravModi #PNBScam 
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன்பெற்று தலைமறைவான ஊழல் வழக்கில் நிரவ் மோடியின் தங்கை புர்வி மோடியை கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேவேளையில், இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் தங்கை புர்வி தீபக் மோடியும் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார்.



    இந்நிலையில், இந்திய அரசின் நடவடிக்கையின் பேரில் பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவரான புர்வி மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் கைது உத்தரவை சர்வதேச காவல்துறையான ‘இன்டர்போல்’ இன்று வெளியிட்டுள்ளது.

    சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் புர்வி தீபக் மோடி(44) எந்த நாட்டில் காணப்பட்டாலும் உடனடியாக கைது செய்யுமாறு சர்வதேச காவல்துறையினரை இந்த நோட்டீஸ் அறிவுறுத்தியுள்ளது. #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi

    வங்கிக்கடன் மோசடியில் சிக்கி ஆண்டிகுவாவில் தற்போது வசிக்கும் மெஹுல் சோஸ்கியை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா அந்நாட்டு அரசிடம் முறைப்படி கோரிக்கை சமர்பித்துள்ளது. #MehulChoksi
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

    மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் இந்திய விசாரணை அமைப்புகள் மெஹுல் சோஸ்கிக்கு உதவியதால் ஆண்டிகுவா அரசு குடியுரிமை வழங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. 

    இதற்கிடையே, சோஸ்கியை இந்தியா கொண்டு வருவதற்கு சிபிஐ உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி கோரிக்கை விடுத்தது. உள்துறை அமைச்சகம் இதற்கான கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பியது. 

    இந்நிலையில், சோஸ்கியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆண்டிகுவா அரசுக்கு முறைப்படி மத்திய அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மெஹுல் சோஸ்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகள் கேட்டுக்கொண்டதாக ஆண்டிகுவா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி கடந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு ஆண்டிகுவா அரசு பதில் தெரிவித்தது. 

    இந்நிலையில், மெஹுல் சோஸ்கிக்கு குடியுரிமை வழங்கப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களை டெய்லி அப்சர்வர் என்ற அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில், பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


    2018 ஏப்ரலில் ஆண்டிகுவா பிரதமரை சந்தித்த மோடி

    அதாவது, இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிஎன்பி மோசடி குறித்த புகார் சிபிஐ.யில் அளிக்கப்படுகிறது. ஆனால், 4-ம் தேதியே மெஹுல் சோஸ்கி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15-ம் தேதி ஆண்டிகுவா நாட்டின் குடிமகனாக அவர் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே மெஹுல் சோஸ்கிக்கான குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் மெஹுல் சோஸ்கி மற்றும் அவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பெங்களூரை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு விரிவான புகார் அளித்துள்ளார். 

    ஹரி பிரசாத் புகார் அளித்த மூன்று மாதங்கள் கழித்து மெஹுல் சோஸ்கிக்கு ஆண்டிகுவா அரசு குடியுரிமை அளித்துள்ளது. மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் சோஸ்கி ஆண்டிகுவா சென்று பாஸ்போர் வரை பெற்ற பின்னரே வெளியே கசிய தொடங்கியது.

    ஆண்டிகுவாவில் சோஸ்கி குடியேறினாலும், அவர் மீது பாதகமான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என இந்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை கேட்டுக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி பெற்று மோசடி செய்த மெஹுல் சோஸ்கி அமெரிக்காவில் இருந்து ஆன்டிகுவா சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. #MehulChoksi #PNBScam
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். 

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை மும்பை சிறப்பு கோர்ட் பிறப்பித்துள்ளது. மேலும், இண்டெர்போல் அமைப்பு இருவருக்கும் எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த மெஹுல் சோஸ்கி இந்த மாத தொடக்கத்தில் கரீபியன் தீவான ஆன்டிகுவாவுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அந்த நாட்டின் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாகவும் இண்டெர்போல் அளித்த நோட்டீசுக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட நிரவ்மோடி ஹாங்காங்கில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
    ரூ.13,000 கோடி கடன் மோசடியில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி தன்மீதான கைது உத்தரவுக்கு எதிராக மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
    மும்பை:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

    இதைத்தொடர்ந்து மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது.

    இந்நிலையில், தன்மீதான கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MehulChoksi #nonbailablewarrant
    நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் எப்போதும் ஒத்துழைப்போம் என பெல்ஜியம் நாட்டு தலைமை தூதர் ஜான் லுயுக்ஸ் தெரிவித்துள்ளார். #NiravModi
    கொல்கத்தா:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தனது நகைக்கடையின் மாடியில் உள்ள வீட்டில் குடியிருந்த நிரவ் மோடி, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பியோடி அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் அரசுகளுக்கு இந்திய பொருளாதார அமலாக்கத்துறை வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தலைமை தூதர் இன்று தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா நகரில் நடைபெற்ற வர்த்தக சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தலைமை தூதர் ஜான் லுயுக்ஸ், தேடப்படும் நபர்களை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா - பெல்ஜியம் இடையே ஏற்படுத்தப்பட்ட பழைய உடன்படிக்கை இன்றும் உயிரிப்புடன் உள்ளது. எங்கள் நாடு உடன்படிக்கைகளை மதிக்கும். பெல்ஜியத்தில் எப்போதுமே சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் எப்போதும் ஒத்துழைப்போம். எனினும், இவ்விவகாரத்தில் சில சட்ட நடைமுறைகள் உள்ளதால் அதை எல்லாம் கடந்துவர வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #Belgiumcooperation #NiravModiextradition #NiravModi
    வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நிரவ் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி லண்டனில் இருந்து பிரசல்ஸ் நகருக்கு சென்றது தெரியவந்துள்ளது. #NiravModi #PNBFraud #Indian Passports #NiravInBrussels
    புதுடெல்லி:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. நிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.



    ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை மாற்றி வருகிறார். தற்போது அவர் பெல்ஜியத்தில் இருப்பதாக உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

    இந்த நிலையில், நிரவ் மோடியிடம் இப்போது 6 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருப்பது தெரிய வந்து உள்ளது. அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4 பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. நிரவ் மோடியால் பயன்படுத்தப்பட்டு வருகிற 2 பாஸ்போர்ட்டுகளில் ஒன்றில், அவரது முழுப்பெயர் உள்ளது. மற்றொன்றில் முழுப்பெயரின் முதல் பாதி பெயர் உள்ளது.

    இந்த பாஸ்போர்ட், இங்கிலாந்து நாட்டின் 40 மாத விசாவுடன் கூடியது ஆகும். இதை பயன்படுத்தித்தான் அனேகமாக அவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருவதாக நம்பப்படுகிறது.

    இந்நிலையில் நிரவ் மோடி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சமீபத்தில் ஜூன் 12-ம் தேதி பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து யூரோஸ்டார் அதிவேக ரெயில் மூலம் பிரசல்ஸ் நகருக்குச் சென்றுள்ளார். லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்றால் பிடிபட்டுவிடுவோம் என்று நினைத்த அவர், ரெயில் பயணத்தை தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவர் பயணம் மேற்கொண்டபோது ஐரோப்பிய குடியேற்ற அதிகாரிகள் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை பெற்றுள்ளனர். இந்த விவரங்களை இந்திய அதிகாரிகள் சரிபார்த்தபோது நிரவ் மோடியின் பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    நிரவ் மோடியின் பாஸ்போர்ட் பிப்ரவரி 24-ம் தேதியே ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் அவர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதாவது ஜூன் 11-ம் தேதிதான் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட தகவல் சர்வதேச போலீசின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு சென்றுள்ளது. அதுவும் ஒரே சீரான சர்வதேச வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்ய முடியவில்லை.

    எனவே அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் வழியாகவும் பயணங்கள் செய்கிறார். அவரது பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்த உத்தரவுகள், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்டு அல்லது சர்வதேச தேடல் நோட்டீஸ் பிறப்பிக்க கோரும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #NiravModi #PNBFraud #Indian Passports #NiravInBrussels
    வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வினியோகிக்க சர்வதேச போலிசை சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. #NiravModi
    புதுடெல்லி:

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வினியோகிக்க சர்வதேச போலிசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும் என்பதாகும். 
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் விடுக்க இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 



    நிரவ் மோடி, சோக்சி உள்ளிட்டோரின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை ஏற்கனவே சிபிஐ நாடியது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க, மீண்டும் இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படும் பட்சத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பதுங்கியுள்ள நாட்டிலேயே கைது செய்யப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #NiravModi #CBI #PNBScam #Interpol #redcornernotice
    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi #ED #PNBScam

    புதுடெல்லி:

    மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் அளித்த நிலையில் நிரவ் மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டு தப்பிச்சென்று விட்டனர். 

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நிரவ் மோடி அவருடைய குடும்பத்தினர் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4 உயர் அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்ட இருந்தன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வழக்கமான அறிக்கை தாக்கல் செய்தது.

    அதில், “நிரவ் மோடி வங்கிக்கு செலுத்தவேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை ரூ.14,356 கோடி ஆகும். வங்கி உறுதியளிப்பு கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளிலும் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதில் நிரவ் மோடியின் ஆபரண நிறுவனமும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் ஈடுபட்டு உள்ளனர்” என்று கூறப்பட்டு இருக்கிறது. 

    இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பாஸ்போர்ட் மூலம் லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியம் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அண்ட்வெர்ப் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NiravModi #ED #PNBScam
    ×