நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை கண்டித்து தீக்குளிக்க வந்த பெண்

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 3 குழந்தைகளுடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். எனவே என் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தீக்குளிக்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
தீக்குளிக்க வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 3 குழந்தைகளுடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தார். அப்போது பையில் மன்னனை வைத்திருந்தார். அதை அவர் எடுக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் கூறுகையில் எனது மாமனார் அப்பகுதி பள்ளிக்கு இலவசமாக கொடுத்த 13 செண்ட் நிலத்தை தி.மு.க. பிரமுகர் அபகரிக்கும் நோக்கில் எங்களை மிரட்டி வருகிறார். மேலும் அடியாட்களுடன் வந்து வீட்டிலிருந்த வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு உடனடியாக வீட்டை காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக அச்சுறுத்துகிறார். எனவே என் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து நிலத்தை அபகரிக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com