search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enthusiastic"

    • ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது.
    • சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    கோவை,

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. இதனையொட்டி கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி கோவையில் உள்ள ராகவேந்திரா கோவில் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு கிராஸ்கட் ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஏராளமானோர் படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.படம் முடிந்ததும் தியேட்டர் முன்பு கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் 25 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் ராஜேஷ் குமார், பாபு, செந்தில் குமார், பாலாஜி, குபேரன் சுரேஷ், நாகராஜ், செந்தில், ரஜினி குணா, ஸ்ரீனிவாசன் மணிவண்ணன், பட்டணம் ரவி, வெங்கடாசலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் மத்திய அரசின் வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரே ஷ்வர் பாட்டீல் ராமநாதபுரம் வந்திருந்தார்.

    மத்திய அமைச்சரை வரவேற்கும் வகையில் ராமநாதபுரம் பா.ஜ.க. தலைவர் இ.எம்.டி. கதிரவன் தலைமையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக பிரமுகருமான சண்முகநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு பாஜக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹேமா மாலினி, தேசிய பொதுக்குழு உறுப்பி னர் மற்றும் சிவகங்கை மாவட்ட பார்வை யாளர் சண்முகராஜா, பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்தி, மாவட்ட துணை தலைவர் விஜய ராணி கருணாநிதி, மாவட்ட செயலாளர் கலை யரசி அசோக், மாவட்ட துணைத் தலைவர் சங்கீதா, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கலைவாணி, மண்டபம் ஒன்றிய தலைவர் விக்ராத் சந்துரு, மண்டபம் ஒன்றிய செயலாளர் இளசு என்ற இளையராஜா, வெளிநாடு வாழ் தமிழ்மக்கள் பிரிவு மாவட்ட தலைவர் சரண்யன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் சண்முகநாத சேதுபதி, தங்கச்சிமடம் பேக்கரும்பு சந்திரகுமார் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் மத்திய அமைச்சருக்கு மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

    • உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.
    • பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.

    மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.‌ 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலிருந்து காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார். இதில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள், திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென் இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்து காட்சி படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அறுசுவை அரசி என்ற பட்டமும், பரிசும் வழங்கப்பட உள்ளது.

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×