search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Statue"

    • முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரம்பலூரில் சிலை வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது
    • பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நான்குமேம்பாலம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாய்பாய்க்கு சிலை வைக்கவேண்டும் என நகர பாஜக வலியுறுத்தியுள்ளது.

    பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நான்கு ரோடு கட்சி கொடிகம்பம் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் -யின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு நகர தலைவர் சுரேஷ் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சைமுத்து, மாவட்ட பொது செயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ஜெயபால், ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், மாவட்ட தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் உதயகுமார் ,வர்த்தக அணி மாவட்ட தலைவர் அருள், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் தங்க நாற்கரச்சாலை கொண்டு வந்த முன்னாள் பிரதமர் வாய்பாய்-க்கு பெரம்பலூர் நான்குரோடு மேம்பாலம் பகுதியில் உருவ சிலை அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அரியலூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி,காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகளும் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் செட்டிஏரிக்கரையிலுள்ள மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நகர காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னதாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பின்னர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.பி. எஸ்.பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர்கள் செந்தில்வேல் ,பொன் முத்துக்குமரன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் சிமென்ட் ஆலையில், ஹெச்.எம்.எஸ் தொழிற்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அச்சங்க தலைவர் மா.மு.சிவகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தொழிற்சங்க பொறுப்பாளர்கள் தென்னரசு, நாகராஜன், ஆனந்தன், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம் கிச்சிப்பாளையத்தில் தேசிய புனரமைப்பு காலனி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் முனியப்பன் கோவில் அருகே இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் முனியப்பன் கோவில் எதிரில் உள்ள காவல் தெய்வம் சிலை மற்றும் நாய் சிலைகள் உடைக்கப்பட்டன.மேலும் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் குடிநீர் பைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இரவு நேரங்களில் கத்தி, பைப், ராடுகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றி வருகிறார்கள்.இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிச்சிபாளையம் போலீஸ் நிலையத்திலும் அந்த பகுதியினர் மனு கொடுத்துள்ளனர். கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன.
    • கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படுகிறது. 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், 3 தளங்களாக கோவில் அமைகிறது. கோவில் கட்டுமானத்தில் மார்பிள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    மகாராஷ்டிரா தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 152 தூண்களில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. தூண்களை செதுக்கும் பணியில் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் 24 விக்ரகங்கள் செதுக்கப்படுகின்றன. 5 வயதான குழந்தை வடிவ ராமர் சிலை, முதல் தளத்தில் நிறுவப்படும்.

    கர்ப்பகிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கருவறையில் 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில் வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் ராமர் சிலை அமைய உள்ளது.

    கருவறையில் வைக்கப்படும் சிலை என்பதால் எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களை பயன்படுத்த சிற்பிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே ராமர் சிலை வடிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் தேர்வு செய்யப்பட்டன.

    நேபாளத்தின் காளி கண்டகி ஆற்றில் இருந்து சுமார் 7 அடி நீளமும், 350 டன் எடையும் கொண்ட 2 சாளக்கிராம கற்கள் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் ராமர் சிலை வடிக்க முதலில் திட்டமிடப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ண சிலா எனப்படும் அரியவகை கருங்கல்லும் கொண்டு வரப்பட்டு உள்ளது. சாளக்கிராம கல்லை முதலில் தேர்வு செய்த சிற்பிகள் தற்போது அதை தவிர்த்து கிருஷ்ணசிலா கருங்கல்லில் சிலை வடிக்க உள்ளனர்.

    ராமர் சிலைக்கான கருங்கல் கர்நாடகாவின் நெல்லிகரு கிராமத்தில் இருந்து கடந்த மாதம் அயோத்திக்கு எடுத்து செல்லப்பட்டது. நெல்லிக்கருங்கல் என்று அழைக்கப்படும் இந்த பாறை , தனித்துவமான பண்புகளைக் கொண்டது. பல பிரபலமான சிற்பங்கள் இதில் வடிக்கப்பட்டு உள்ளன. அவை துங்கபத்ரா ஆற்றின் கரையில் உள்ள ஒரு சிறிய மலையில் இருந்து நிபுணர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ராமர் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண்யோகிராஜ் வடிக்கிறார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். சிற்பி அருண் யோகிராஜ் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்பிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் அமர்ந்த நிலையில் ஆதிகுரு சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலை, இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 30 அடி உயர சிலை போன்ற சிலைகளை வடித்தவர்.

    மைசூரில் உள்ள சிற்பக் குடும்பத்தைச் சேர்ந்த அருண் யோகிராஜின் தந்தை யோகிராஜ் மற்றும் அவரது தாத்தா பசவண்ண ஷில்பி ஆகியோர் புகழ்பெற்ற சிற்பிகள். அவர்கள் மைசூர் அரண்மனை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிலைகளை செதுக்கினர். அருண் யோகிராஜ் தனது படைப்புகளுக்காக 10-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2 அடி நீள சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
    • சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் கும்பகோணம் அருகே கடந்த சில மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று மாலை திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.

    யானை சிலை கண்டெடுப்பு அப்போது அந்த பள்ளத்தில் யானை சிலை கிடைத்தது.

    கருங்கல்லினால் ஆன இந்த யானை சிலையை பார்த்ததும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சிலையை பார்த்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த யானை சிலையை பொக்லின் எந்திரம் மூலம் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அந்த யானை சிலையை தாசில்தார் சுசீலாவிடம் ஒப்படைத்தனர்.

    அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    • பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.
    • யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார்.

    மேலச்சொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என போராட்டம் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கேரளவனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் சிக்னல் காலர் ஐடி பொருத்தி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து லோயர்கேம்ப் வழியாக படிப்படியாக முன்னேறிய அரிசிக்கொம்பன் கடந்த மாதம் 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்பு கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டவனப்பகுதியில் விடப்பட்டது.

    ஆனால் மூணாறு பகுதி மக்கள் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டு வந்து விடவேண்டும் என தொடர் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்ததாக அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் இதேபகுதிக்கு கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். அவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அரிசிக்கொம்பன் யானைக்கு ரசிகர் மன்றமும் தொடங்கப்பட்டது. மேலும் பூப்பாறையில் அரிசிக்கொம்பன் பிரண்ட்ஸ் என்ற பெயரில் தேனீர் கடையும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மூணாறு அருகே கஞ்சிக்குழி ஊராட்சிக்குட்பட்ட தல்லக்காணம் பகுதியை சேர்ந்த வியாபாரி பாபு என்பவர் அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார். சிறுவயது முதலே யானை மற்றும் வனவிலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இவர் அரிசிக்கொம்பன் யானைமீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்து வந்தார். தற்போது அந்த யானை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மனம் உருகி கண்கலங்கினார். அரிசிக்கொம்பன் யானை வடிவில் ரூ.2 லட்சம் செலவில் அமைத்துள்ள சிலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொதுமக்கள் அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    • தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார்.
    • உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 30). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தந்தை வாசு. தாயார் மணி (54). ஜீவா என்கிற தங்கை உள்ளார். பிரபு மற்றும் அவரது தங்கை ஜீவா ஆகியோர் சிறுவயதில் இருந்தபோதே தந்தை வாசு இறந்து விட்டார்.

    தாயார் மணி தனது குழந்தைகளை பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வளர்த்து உள்ளார். இதனால் பிரபுவுக்கு உயிருடன் உள்ள தனது தாயாருக்கு சிலை வடித்து கோவில் கட்ட வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசையாக இருந்து உள்ளது.

    தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள தாயாரை பெருமைபடுத்தும் வகையிலும், நன்றி கடன் செலுத்தும் வகையிலும் தனது வீட்டிற்கு அருகே 1,200 சதுர அடி நிலம் வாங்கி, கோவில் போன்று கட்டி அதில் 3 அடி உயரத்தில் தனது தாயாருக்கு சிலை வைத்து உள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இது குறித்து பிரபு கூறியதாவது:-

    நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். பல்வேறு கஷ்டங்களை சந்தித்து என்னை வளர்த்த தாயாரை கவுரவப்படுத்த நான் எண்ணினேன். இறந்த பின்னர் பிண்டம் வைத்து திதி கொடுப்பதை விட, உயிருடன் இருக்கும் எனது தாயாருக்கு சிலை வைத்து அவரை கவுரவப்படுத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது.

    இத்தாலியன் மார்பிள்ஸ் கல் மூலம் ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெள்ளை நிறத்தில் செதுக்கப்பட்டு உள்ள இந்த சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுவாக இறந்தவர்களுக்கு தான் சிலை வைப்பார்கள். ஆனால் உயிருள்ள ஒருவருக்கு சிலை வைத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாயின் சிலையை அப்பகுதியை சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

    உயிருடன் இருக்கும் எனக்கு மகன் சிலை வைத்து இருப்பது பெருமையாகவும், நெகிழ்வாகவும் இருப்பதாக பிரபுவின் தாயார் மணி கூறினார்.

    • அனுமன் சிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செந்துறை வந்தது
    • பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று வழிபாடு செய்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி பல கோடி மதிப்புள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து அப்போது கோவில் தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் செந்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    இந்த வழக்கை தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜாராமன் இணையதளம் மூலம் இந்த சிலை ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அப்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமன் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் ஒப்படைத்தார்.

    10 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட இந்த சிலையை உடனடியாக மீட்டு தங்களது கிராமத்திற்கு கொண்டு வந்து கோவிலில் வைத்து வழிபாடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெள்ளூர் கிராமத்திற்கு வந்த சிலைத்தடுப்பு பிரிவு போலீசார் கோவிலை ஆய்வு செய்து விட்டு சிலையை கும்பகோணம் சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் கிராம மக்களிடம் ஒப்படைத்தார்.பின்னர் கிராம மக்கள் சிலையை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து புனித நீரால் அபிஷேகம் செய்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சைஷேஸ்குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஆஞ்சிநேயர் சிலை இன்று சொந்த ஊரில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டது.

    இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டான விஜய பேரரசு காலத்தை சேர்ந்தது. இச்சிலை ஐம்பொன் சிலை ஆகும். இது 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (41 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இன்று அச்சிலை பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை தொடர்ந்து கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்படும். இதனுடன் கடத்தப்பட்ட மற்ற 3 சிலைகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு கடத்தப்பட்ட 23 சிலைகள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 64 சிலைகள் மீட்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் உள்ள 15 சிலைகளை மீட்க இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒப்பந்த சட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள சிலைகள் உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. அதனையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, சிலை கடத்தல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இருந்தனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • அவரது சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற பேரவை நிறுவனர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்

    தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்ட பாலம் ரவுண்டானா பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பரமக்குடி 5 முக்கு ரோட்டில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

    ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் பரமக்குடி ஒட்டப்பாலம் ரவுண்டானா பகுதியில் தடையை மீறி தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற எஸ்.ஆர்.பாண்டி யன் தலைமையில் அணி வகுத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

    மண்டல செயலாளர் மங்களராஜ், செயலாளர் மருதகுமார் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்ட துரை பழனி, மாவட்ட செயலாளர் தவஅஜித், தமிழக தேசிய கழக மாநில இளைஞரணி செயலாளர் சண்முக பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வனங்கை பாலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் மகாலில் வைத்தனர்.

    • ராமநாதபுரத்தில் அம்பேத்கர்-பெரியார் சிலை அமைக்க வேண்டும்.
    • தெருமுனை பிரசார கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரண் மனை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்பில் அம்பேத்க ரின் 132-வது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

    ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா முன்னிலை வகித்தார். இந்திய இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார்.

    பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன், ஐந்திணை மக்கள் கட்சி மாநில ஒருங்கி ணைப்பாளர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாத புரத்தில் அம்பேத்கர், பெரியார் சிலைகளை அமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம்,கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிசை படு கொலை ெசய்ததை வன்மையாக கண்டிக்கி றோம். அவரை கொலை செய்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பிர சாரத்தில் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையத்தில் பாரதியார் சிலை திறப்புக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    கடையம்:

    கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமணநாள் விழா சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி அன்று கடையத்தில் பாரதியார் -செல்லம்மாள் சிலைத் திறப்புடன் நடைபெற உள்ளது.

    நூலகம் ஒன்று கட்டப்பட்டு அதில் பாரதியார் சிலையும், செல்லம்மா - பாரதி கற்றல் மையம் சேவாலயா சார்பில் 27-ந்தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடையம் பழைய கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கல்யாணி சிவகாமி நாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக கீழ கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், தெற்கு கடையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் புளி கணேசன் , மாரி குமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் லயன்ஸ் கிளப் குமரேசன், ஆசிரியர் கோபால், சேது ராமலிங்கம், சோமசுந்தரம்,சுரேஷ், பாலன் கவியரசன்,சேவாலயா சார்பில் மருத்துவர் கோகுலகிருஷ்ணன், கிங்ஸ்டன், காஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டனர் . சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் நன்றி கூறினார்.
    சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது.
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

    சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது.

    மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள பிரமாண்டமான விதானத்தின் கீழ் நிறுவப்படும் சுவாஷ் சந்திர போஸின் 30 அடி சிலையை செதுக்கவுள்ளார்.

    கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்டின் இயக்குநர் ஜெனரல் அத்வைதா கடநாயக் தலைமையிலான குழுவால் சிலையின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    நாளை டெல்லி வரும் யோகிராஜ், சிலையின் முக அம்சங்களை செதுக்க தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலாச்சார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. குரங்கு அம்மை எதிரொலி- தமிழக விமான நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு
    ×