search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கல்"

    • ரூ.306 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் நடைபெற்ற முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வ தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். இன்று காலை கோரிப்பாளையம் சந்திப் பில் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    அதன்பின்னர் மதுரை மேலமடை சந்திப்பு பகுதியி ல் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண் டார். இதில் கோரிப்பாளை யம் சந்திப்பில் அமைய உள்ள மேம்பாலம், மேல மடை சந்திப்பில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் ஆகிய 2 பாலங்கள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மதுரையின் மிக முக்கிய கோரிப்பாளையம் சந்திப் பில் பாலம் கட்டுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது தான் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    குறிப்பாக மதுரை மாநக ரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்கு வரத்து நெரிசலை கட்டுப்ப டுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வா கமும் மேற்கொண்டு வரு கின்றனர்.

    அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோரிப்பா ளையம், அண்ணா பஸ் நிலைய பகுதிகள் உள்ளன. இந்த சாலைகளில் சாதாரண நேரங்களில் கூட போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோரிப் பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள் ளது. இந்த பாலத்தை 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்க திட்டமி டப்பட்டிருந்தது. சித்திரை திருவிழாவின் போது அழ கர் எழுந்தருளும் திருக்கண் மண்டபகாரர்கள் எதிர்ப்பை அடுத்து நீளம் 1.3 கி.மீ. ஆக குறைக்கபட்டுள்ளது.

    பாலத்திற்கு அடியில் சென்று பீ.பி.குளம் செல் லும் வகையில் அமைப்பு இருக்கும் என தெரிகிறது. மேலும் 5 பகுதிகளை இணைக்கும் வகையில் பால மானது அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற் கேற்ற வகையில் கோரிப்பா ளையம், அண்ணா சிலை, யானைக்கல், பீ.பி.குளம், தல்லாகுளம் ஆகிய 5 சந் திப்புகள் விரிவாக்கம் செய் யப்பட உள்ளன.

    கோரிப்பாளையம் சந்திப் பில் அமைய உள்ள பாலத் தின் நீளம் குறைக்கப்பட்ட தையடுத்து பாலத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.172 கோடி யில் இருந்து ரூ.156 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி-சிவகங்கை சாலையில் அண்ணா பஸ் நிலையம் முதல் மேலமடை சந்திப்பு வரையிலான 2.5 கி.மீ. தூரத் துக்கு போக்குவரத்து நெரி சல் அதிகமாக உள்ளது.

    அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக் னல்களில் சந்திக்கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட் டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

    இதனால் அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சந்திப் புகளிலும், அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சீரான போக்குவரத்து வச தியை ஏற்படுத்துவதற்கா கவும் ஆவின் முதல் கோமதிபுரம் 6-வது மெயின் ரோடு வரையில் 1.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.150.28 கோடி யில் உயர் மட்டப் பாலம் அமைக்கவும், 3 சந்திப்பு பகுதிகளையும் அகலப் படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள் ளனர்.

    இதற்காக நிலம் கைய கப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறையி னர் நிறைவு செய்து விட்ட தாகவும் தகவல்கள் தெரிய வருகிறது. அத்துடன் மேல மடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழ்பாடியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., கழக செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் பெரு மாள், துரைமுருகன், பாரதி தாசன், அசோக் குமார், ரிஷிவந்தியம் ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணா துரை, கே.அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், அமிர்தம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைக்க மத்திய மந்திரி அடிக்கல் நட்டார்.
    • ஆண்டுதோறும் 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்,வழமாவூரில் மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடல்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி முருகன் முன்னிலை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமை தாங்கி ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் அமைய வுள்ள பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி மீன்வளத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கி பொருளாதார முன்னேற்றம் பெரும் துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சாகர் பரிக்ரமா கடல்பயணம் திட்டம் துவங்கப்பட்டு கடல் மார்க்கம் வழியாக மீனவ மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றும் வகையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ராமேசுவரம் கடற்கரை ஒட்டிய மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா துவங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் துவங்கப்பட்டுள்ளது.என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    மேலும் மீன்வளத் துறையின் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி நலத் திட்டங்கள் வழங்கப்பட் டுள்ளது.

    விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு பயன் பாட்டில் உள்ளது போல் மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 374 பேர் இத்திட்டத்தில் பதிவு செய்து அவர்களுக்கு ரூ.4,71,000/- நிதியுதவி வழங்கப்பட்டு பயன்பெற்று வருகிறார்கள்.இதை மேலும் விரிவுபடுத்தி ஆண்டுதோறும் 1000 நபர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை மத்திய அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை இணைச்செயலாளர் நீத்துப்பிரசாத்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய ரயில்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குமரி மாவட்ட மக்கள்
    • தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம், குழித்துறை ரெயில் நிலை யத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் ரெயில் நிலையத்தின் முன் பகுதி மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப் பட உள்ளன. இந்த பணிகளுக்கான தொடக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த நேரத்தில் குமரி மாவட்டத் திற்கு புதிய ரெயில்களுக்கான அறிவிப்பு வருமா? என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியா குமரி மாவட்டத்திற்கு புதிய ெரயில்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தியாவின் கடைசி எல்லையான குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு ெரயில் இயக்கப்பட்டால் அது,தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்க ளுக்கு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ தூரம் தான். இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும்.

    திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த மார்க்கத்தில் புதிய ெரயில்களை இயக்க தொடர்ந்து மறுத்து வரு கிறார்கள். ஆகவே தமிழகம் மார்க்கம் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர்கள், சில ரெயில்களை நீட்டித்து இயக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

    தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆகவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ெரயில்களை, தமிழகத்தின் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக தாம்பரம் - ஐதராபாத் தினசரி ெரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-டெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களையும் திருச்சி, மதுரை வழியாக கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழி யாக தாம்பரத்துக்கு தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டு மல்லாமல் நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்.

    கன்னியாகுமரியில் இருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ெரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ெரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் (16347-16348) இரவு நேர ெரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    வேளாங்கண்ணி மாதா கோவி லுக்கு செல்பவர்கள் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை-புனலூர் தினசரி ெரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதியில் சாலை வசதி , குடிநீர் வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    இன்று காலைகடலூர் மாநகராட்சி 8-வது வார்டில் ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், மண்டல குழு தலைவர் சங்கீதா, பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு 500 தென்னங்கன்றுகளை வழங்கிய ராஜா எம்.எல்.ஏ. தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே தலைவன் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணா நிதியின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    500 தென்னங்கன்று

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூசைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தின ராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 500 தென்னங்கன்று களை பொது மக்களுக்கு வழங்கி, தென்னை மரத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டி யனின் ஒன்றிய நிதியில் இருந்து ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே ரூ.20 லட்சம் மதிப் பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி களுக்கான பூமிபூஜை ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணி சாமி, வடமலாபுரம் அன்பு செல்வம்,

    நகரம் முருகானந்தம், நவநீத கிருஷ்ணன், பச்சேரி சக்தி, ஊராட்சிமன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், அனைத்து வார்டு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 11 யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினர்.
    • பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கூடுதல் தலைமை செயலர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா, மேலாண்மை இயக்குநர்(குடிநீர் வடிகால் வாரியம்) தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா,

    எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜ பாளையம் தங்கப் பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களை் சேர்ந்த 1,286 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியங்களைச் சேர்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ.1387.73 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    ரூ.48.39 கோடியில் சாத்தூர் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்க டைத் திட்டம், ரூ.251.20 கோடியில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களையும் அமைச் சர்கள் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் ராஜபா ளையம், ஸ்ரீவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி, சா த்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி யூனியனை சேர்ந்த 1,286 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகில் தாமிரபரணி ஆற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட உள்ளது. நீர் சேகரிப்பு கிணற்றின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக வடக்கு குருவிக்குளம் நகர் கிராமத்தில் அமையவுள்ள 17.90 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள உயர்மட்ட மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 2 பொது தரைமட்ட நீர் உந்து நிலையம் மற்றும் 163 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி களுக்கு 2519.29 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

    சாத்தூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் ரூ.48.39 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் சாத்தூர் நகராட்சி 3 மண்டலங்கலாக பிரிக்கப்பட்டு, நகரத்தில் உற்பத்தியாகும் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்ட த்தின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இதில் 6 ஆயிரத்து 500 வீடுகளின் மூலம் உருவாக கூடிய கழிவுநீர் 26.958 கி.மீ. நீளமுள்ள கழிவு நீர் குழாய்கள், 1102 எந்திரங்களை இறக்கும் குழிகள் மற்றும் 3 கழிவு நீரேற்று நிலையங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, இருக்கன்குடி ரோட்டில், நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    ராஜபாளையம் பாதாள சாக்கடை திட்டத்தில் 38,586 வீட்டு இணைப்புகள் மூலம், 5,865 எந்திரத்தை இறக்கும் குழிகளில் இருந்து, கழிவு நீர் உந்து குழாய்கள் மூலம் பெறப்படும் கழிவு நீர், 3 நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 4 கழிவு நீர் உந்து எந்திரத்தை இறக்கும் குழிகள் மூலமாக உந்தப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், குழாய்கள் மூலம் கொத்தன்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப் பணித்துறை குளத்தில் சேர்க்கப்படும்.

    இந்த பாதாளச் சாக்கடைத்திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் நிலங்கள் அசுத்தம் அடை யாமல் பாதுகாப்பான தாகவும், தூய்மையாகவும் அமையும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தலைமைப் பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், மதுரை) ரகுபதி, மேற்பார்வை பொறியாளர் (குடிநீர் வடிகால் வாரியம், கோவில்பட்டி) செந்தூர்பாண்டி, நகர்மன்றத் தலைவர்கள் குருசாமி(சாத்தூர்), பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

    பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்ததாலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பஸ் நிலையத்தை முழுவது மாக இடித்துவிட்டு புதிய நவீன பஸ் நிலையம் கட்டு வதற்கு முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிகள் முழு வடிவம் பெறும்போது பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி, நவீன கழிவறை, பொது மக்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் அமையும்.

    நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளன. வைகை அணையில் இருந்து கிடைக்கும் குடிநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையம் கட்டங்குடியில் அமைய உள்ளது.

    புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை அடையும் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் பெறப் பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். நவீன முறையில் புதிய மார்க்கெட், கூடுதல் மின் தகன மேடை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது. தீவிர முயற்சி எடுத்த மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள், நல்ல நிர்வாகத்தை வழங்கி கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இல்லாமல் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு இது அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப் பிரகாசம், நகர் மன்ற துணை தலைவர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் முரளி,

    தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலா ளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர், சோலையப்பன், கவுன்சிலர்கள் மணி முருகன், இளங்கோ, டுவிங்ளின் ஞான பிரபாகரன், கலைவாணி, இளங்கோ, ஜெய கவிதா சிவகாமி, அல்லிராணி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • அவரது சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற பேரவை நிறுவனர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்

    தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்ட பாலம் ரவுண்டானா பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பரமக்குடி 5 முக்கு ரோட்டில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

    ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் பரமக்குடி ஒட்டப்பாலம் ரவுண்டானா பகுதியில் தடையை மீறி தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற எஸ்.ஆர்.பாண்டி யன் தலைமையில் அணி வகுத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

    மண்டல செயலாளர் மங்களராஜ், செயலாளர் மருதகுமார் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்ட துரை பழனி, மாவட்ட செயலாளர் தவஅஜித், தமிழக தேசிய கழக மாநில இளைஞரணி செயலாளர் சண்முக பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வனங்கை பாலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் மகாலில் வைத்தனர்.

    • இங்கு, பஸ் நிலையம் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    • புதிய பஸ் நிலையம் அமைக்க, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார்,

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், ஆணையர் பானுமதி, நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு, மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட முதுநகர் பகுதிகளில் உள்ள 36, 37, 38, 39, 41, 42, 45 ஆகிய வார்டு களில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.41 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மற்றும் 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், கவிதா ரகு ராமன், தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் மற்றும் வெங்கடேசன், செந்தில், ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- 

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில்கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்காக 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று( 15- ந்தேதி) மாலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதில் கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல். ஏ, அரசு மருத்துவமனை இணை இயக்குனர், சுகாதார துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள

    ×