search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foundation stone"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.
    • பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரை.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (20-ந் தேதி) ஜம்மு செல்கிறார். அங்கு காலை 11-30 மணியளவில், ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சுகாதாரம், கல்வி, ரெயில், சாலை, விமானப்போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பலதுறைகளுடன் தொடர்புடைய திட்டப்பணிகள் இதில் அடங்கும்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1500 பேருக்கு புதிய பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

    மேலும், விக்சித் பாரத் விக்சித் ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்.

    • ரூ.306 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் னில் நடைபெற்ற முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வ தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். இன்று காலை கோரிப்பாளையம் சந்திப் பில் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    அதன்பின்னர் மதுரை மேலமடை சந்திப்பு பகுதியி ல் நடந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண் டார். இதில் கோரிப்பாளை யம் சந்திப்பில் அமைய உள்ள மேம்பாலம், மேல மடை சந்திப்பில் அமைய உள்ள உயர்மட்ட பாலம் ஆகிய 2 பாலங்கள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மதுரையின் மிக முக்கிய கோரிப்பாளையம் சந்திப் பில் பாலம் கட்டுவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. இருப்பினும் தற்போது தான் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது.

    குறிப்பாக மதுரை மாநக ரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்கு வரத்து நெரிசலை கட்டுப்ப டுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வா கமும் மேற்கொண்டு வரு கின்றனர்.

    அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக கோரிப்பா ளையம், அண்ணா பஸ் நிலைய பகுதிகள் உள்ளன. இந்த சாலைகளில் சாதாரண நேரங்களில் கூட போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோரிப் பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள் ளது. இந்த பாலத்தை 2 கி.மீ. நீளத்துக்கு அமைக்க திட்டமி டப்பட்டிருந்தது. சித்திரை திருவிழாவின் போது அழ கர் எழுந்தருளும் திருக்கண் மண்டபகாரர்கள் எதிர்ப்பை அடுத்து நீளம் 1.3 கி.மீ. ஆக குறைக்கபட்டுள்ளது.

    பாலத்திற்கு அடியில் சென்று பீ.பி.குளம் செல் லும் வகையில் அமைப்பு இருக்கும் என தெரிகிறது. மேலும் 5 பகுதிகளை இணைக்கும் வகையில் பால மானது அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற் கேற்ற வகையில் கோரிப்பா ளையம், அண்ணா சிலை, யானைக்கல், பீ.பி.குளம், தல்லாகுளம் ஆகிய 5 சந் திப்புகள் விரிவாக்கம் செய் யப்பட உள்ளன.

    கோரிப்பாளையம் சந்திப் பில் அமைய உள்ள பாலத் தின் நீளம் குறைக்கப்பட்ட தையடுத்து பாலத்துக்கான திட்ட மதிப்பீடு ரூ.172 கோடி யில் இருந்து ரூ.156 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி-சிவகங்கை சாலையில் அண்ணா பஸ் நிலையம் முதல் மேலமடை சந்திப்பு வரையிலான 2.5 கி.மீ. தூரத் துக்கு போக்குவரத்து நெரி சல் அதிகமாக உள்ளது.

    அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக் னல்களில் சந்திக்கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட் டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

    இதனால் அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சந்திப் புகளிலும், அரசு ஆஸ்பத்திரி பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சீரான போக்குவரத்து வச தியை ஏற்படுத்துவதற்கா கவும் ஆவின் முதல் கோமதிபுரம் 6-வது மெயின் ரோடு வரையில் 1.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.150.28 கோடி யில் உயர் மட்டப் பாலம் அமைக்கவும், 3 சந்திப்பு பகுதிகளையும் அகலப் படுத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள் ளனர்.

    இதற்காக நிலம் கைய கப்படுத்தும் பணிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருவாய்த் துறையி னர் நிறைவு செய்து விட்ட தாகவும் தகவல்கள் தெரிய வருகிறது. அத்துடன் மேல மடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதனால் மதுரையின் இரண்டு முக்கிய சாலை களில் போக்குவரத்து நெரி சல் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    • ராதாபுரம் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் தொடங்கப்பட்டது.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பி லான தார்ச்சாலை பணி களை நெல்லை மாவட்ட பஞ்சா யத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    பணிகள் தொடக்கம்

    அதன்படி முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்ததில் குமாரபுரம் பஞ்சாயத்து நாங்குநேரி -இடையன்குடி சாலையில் இருந்து நாலந்து லா செல்லும் சாலை, ராதாபுரம் பஞ்சாயத்து வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் பாப்பான் குளம் செல்லும் சாலை, வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் பாப்பான் குளம் வழியாக பாவிரித்தோட்டம் செல்லு ம் சாலை மற்றும் வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் சுப்பிர மணிய பேரி வழி யாக சவுந்திர பாண்டிய புரம் செல்லும் சாலை ஆகிய தார்ச்சா லை களுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது.

    போக்குவரத்து அதிக மாக மக்கள் பெரிதும் பயன் படுத்தும் சாலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப் பட்டு பணிகள் தொடங்கப் பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சி லர்கள் ஜான்ஸ் ரூபா, லிங்க சாந்தி, ஒன்றிய கவுன்சி லர்கள் இசக்கி பாபு, ஜெஸி, படையப்பா முருகன், பரிமளம், மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர் முரளி, ராதா புரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், முருகேசன், மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் புளோரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர் சிவ பிராகசம், ஊராட்சிமன்ற துணை தலைவர் அனிதா பயாஸ், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ராஜன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கஸ்தூரி ரெங்கபுரம் பாலன், அகஸ்டின், ராமையா, புளியடி குமார், முத்து, முருகேஷ், சதிஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • அவரது சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற பேரவை நிறுவனர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்

    தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்ட பாலம் ரவுண்டானா பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பரமக்குடி 5 முக்கு ரோட்டில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.

    ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் பரமக்குடி ஒட்டப்பாலம் ரவுண்டானா பகுதியில் தடையை மீறி தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற எஸ்.ஆர்.பாண்டி யன் தலைமையில் அணி வகுத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

    மண்டல செயலாளர் மங்களராஜ், செயலாளர் மருதகுமார் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்ட துரை பழனி, மாவட்ட செயலாளர் தவஅஜித், தமிழக தேசிய கழக மாநில இளைஞரணி செயலாளர் சண்முக பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வனங்கை பாலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் மகாலில் வைத்தனர்.

    • தேவிபட்டணம் ஊராட்சியில் தையல் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தையல் கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் முருகன், ஊராட்சி செயலர் பொன் செந்தில்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராமராஜ், ஆர்.தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமணி, பொன்ராஜ், நிர்வாகிகள் பரமேஸ்வரன், பொன்னுச்சாமி, பால்துரை, டேவிட், வைரசாமி, பாலகிருஷ்ணன், தங்கராஜ், இசக்கிமுத்து, மகாலிங்கம், விஜய்குட்டி, சின்னப்பராஜ், உள்ளார் விக்கி மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

    இதன் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் இருந்தது.

    இப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருதார்.

    அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது ரூ1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவை தலைவர் நெடுஞ்செழியன், எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்–செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.

    ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, தினகர், மங்கை.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் பழனிவேல் நன்றி கூறினார்.

    • பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
    • விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    தஞ்சாவூர்:

    ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் நிறுவனரும் ஓம் ஸ்ரீ நாகம்மாள் அறக்கட்டளை, அகில இந்திய சாதுக்கள் இயக்கம் மாநிலத் தலைவருமான டாக்டர் ஸ்ரீராம ரெங்கசாமி சுவாமிகள் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-

    தரணி போற்றும் தஞ்சாவூரில் விரைவில் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.

    அனைவருக்கும் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். #PMModi #AIIMS #Madurai
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. விஜயகுமார், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில் சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர் டி.ஐ.ஜி.க்கள், 15 எஸ்.பி.க்கள், 40 டி.எஸ்.பி.க்கள் உள்பட சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    விழா நடைபெறும் பகுதியில் பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுவார்கள். இதற்காக மெட்டல் டிடெக்டர் கருவியுடன் கூடிய வாசல்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு பின்னர் வரும் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சி நடைபெறும் மண்டேலாநகர், மதுரை விமான நிலையம் அருகே இருப்பதால் பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை 2 மணி நேரம் மதுரையில் விமானம் பறக்க தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மண்டேலா நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி பா.ஜனதாவினர் அந்த பகுதி முழுவதும் அலங்கார வளைவுகள், தோரண வாயில்கள் அமைத்துள்ளனர். பிரதமர் பங்கேற்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.  #PMModi #AIIMS #Madurai
     
    சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். #MGRCentenaryArch
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.



    அதன்படி காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலம் 52 அடி உயரத்தில் எம்ஜிஆர் வளைவு அமைக்கப்பட உள்ளது.

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமையும் இரண்டாவது வளைவு இதுவாகும். இதற்கு முன், 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை வைரவிழா வளைவு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.  #MGRCentenaryArch
    ×