search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு - முதல்வர் அடிக்கல் நாட்டினார்
    X

    சென்னை கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு - முதல்வர் அடிக்கல் நாட்டினார்

    சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். #MGRCentenaryArch
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.



    அதன்படி காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். விழாவில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.  சிற்ப வேலைப்பாடுகளுடன் சுமார் 66 அடி அகலம் 52 அடி உயரத்தில் எம்ஜிஆர் வளைவு அமைக்கப்பட உள்ளது.

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமையும் இரண்டாவது வளைவு இதுவாகும். இதற்கு முன், 2013-ம் ஆண்டு சட்டப்பேரவை வைரவிழா வளைவு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது.  #MGRCentenaryArch
    Next Story
    ×