search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atikal"

    • புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

    பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்ததாலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பஸ் நிலையத்தை முழுவது மாக இடித்துவிட்டு புதிய நவீன பஸ் நிலையம் கட்டு வதற்கு முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிகள் முழு வடிவம் பெறும்போது பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி, நவீன கழிவறை, பொது மக்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் அமையும்.

    நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளன. வைகை அணையில் இருந்து கிடைக்கும் குடிநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையம் கட்டங்குடியில் அமைய உள்ளது.

    புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை அடையும் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் பெறப் பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். நவீன முறையில் புதிய மார்க்கெட், கூடுதல் மின் தகன மேடை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது. தீவிர முயற்சி எடுத்த மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள், நல்ல நிர்வாகத்தை வழங்கி கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இல்லாமல் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு இது அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப் பிரகாசம், நகர் மன்ற துணை தலைவர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் முரளி,

    தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலா ளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர், சோலையப்பன், கவுன்சிலர்கள் மணி முருகன், இளங்கோ, டுவிங்ளின் ஞான பிரபாகரன், கலைவாணி, இளங்கோ, ஜெய கவிதா சிவகாமி, அல்லிராணி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இங்கு, பஸ் நிலையம் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
    • புதிய பஸ் நிலையம் அமைக்க, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார்,

    கடலூர்:

    வடலூர் நகராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி புதிய பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா, வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், ஆணையர் பானுமதி, நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு, மற்றும் நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.10.50 கோடியில் பிரசவ சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.
    • ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சராசரியாக மாதந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்த வளாகத்தில் மருத்துவக் கட்டிடம் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்.

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை, சங்கராபுரம், வேலங்குடி ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கென நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக சங்கராபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு தற்போது ஆணை வரப்பெற்றுள்ளது.

    இதுதவிர அனைத்து நகர்ப்புறப்பகுதிகளிலும் சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் மூலம் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகராட்சிப் பகுதி களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமை ப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    மேற்கண்ட 3 நகராட்சிகளிலும் தலா ரூ.25லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் நல மையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.1.25கோடி மதிப்பீட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்ப தற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    சுகாதார கட்டமைப்பில் வட்டார அளவில் தலா ரூ.50லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆய்வகங்கள் அமைப்பதற்காக பிரான்மலை, முத்தனேந்தல் ஆகியப்பகுதிகளில் அதற்கான கட்டிடங்கள் அமைக்கப்ப டவும் நடவடிக்கை கள் எடுக்க ப்பட்டுள்ளது.

    துணை சுகாதார நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் மானாமதுரை ஆவரங்காடு பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) தர்மர், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன்(சுகாதாரப்பணிகள்), யோகவதி (குடும்ப நலம்), கவிதாராணி (தொழுநோய்), ராஜசேகரன் (காச நோய்), ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), சரவணமெய்யப்பன் (கண்ணங்குடி) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×