search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல்
    X

    பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 

    புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல்

    • புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

    பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்ததாலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பஸ் நிலையத்தை முழுவது மாக இடித்துவிட்டு புதிய நவீன பஸ் நிலையம் கட்டு வதற்கு முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிகள் முழு வடிவம் பெறும்போது பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி, நவீன கழிவறை, பொது மக்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் அமையும்.

    நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளன. வைகை அணையில் இருந்து கிடைக்கும் குடிநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையம் கட்டங்குடியில் அமைய உள்ளது.

    புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை அடையும் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் பெறப் பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். நவீன முறையில் புதிய மார்க்கெட், கூடுதல் மின் தகன மேடை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது. தீவிர முயற்சி எடுத்த மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள், நல்ல நிர்வாகத்தை வழங்கி கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இல்லாமல் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு இது அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப் பிரகாசம், நகர் மன்ற துணை தலைவர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் முரளி,

    தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலா ளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர், சோலையப்பன், கவுன்சிலர்கள் மணி முருகன், இளங்கோ, டுவிங்ளின் ஞான பிரபாகரன், கலைவாணி, இளங்கோ, ஜெய கவிதா சிவகாமி, அல்லிராணி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×