கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா

ரூ.12.40 கோடி செலவில் கட்டப்பட உள்ளது அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா
Published on

ஆலங்குடி,

கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக் கோரிக் கையின் போது ஆலங்குடி தொகுதிக்கு அரசு இருபாலர் கலை அறி வியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே ஆலங்குடி நகரில் உள்ள தனியார் கட்டடத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட தொடங்கியது. அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடமா னது ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சியில் தேர்வு செய்ய ப்பட்டது. புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக அடிக் கல் நாட்டும் விழா இன்று கீழாத்தூர் சமத்துவபுரம் அருகே நடைபெ ற்றது. இந்த விழாவில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நா டு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் கலந்துகொ ண்டு புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி கல்லூரி காண வரைபடத் தையும் பார்வையிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com