search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியின் போது யானை சிலை கண்டெடுப்பு
    X

    கண்டெடுக்கப்பட்ட யானை சிலை.

    சாலை பணியின் போது யானை சிலை கண்டெடுப்பு

    • திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது.
    • சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் கும்பகோணம் அருகே கடந்த சில மாதங்களாக சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று மாலை திருபுவனம் கடைவீதியில் பொக்லின் எந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது.

    யானை சிலை கண்டெடுப்பு அப்போது அந்த பள்ளத்தில் யானை சிலை கிடைத்தது.

    கருங்கல்லினால் ஆன இந்த யானை சிலையை பார்த்ததும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சிலையை பார்த்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த யானை சிலையை பொக்லின் எந்திரம் மூலம் திருவிடைமருதூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அந்த யானை சிலையை தாசில்தார் சுசீலாவிடம் ஒப்படைத்தனர்.

    அந்த சிலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×