search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddharth"

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு தைவான் செல்லவிருக்கிறது. #Indian2 #KamalHaasan #Siddharth
    கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.

    படத்தில், கமல்ஹாசனின் மகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதி, சந்துரு என இரண்டு கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்த நிலையில், சந்துரு கதாபாத்திரத்தின் மகனாக சித்தார்த் வருவதாக கூறுகிறார்கள்.



    காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் படக்குழுவில் இணைந்திருக்கிறார்கள். அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய காட்சிகளுக்காக படக்குழு தைவான் செல்லவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #Siddharth #KajalAggarwal

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் கமலுடன் இணைகிறார். #Indian2 #KamalHaasan #DelhiGanesh
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் படத்தில் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    அபிஷேக் பச்சன் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



    கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல் படத்தில் டெல்லி கணேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். #Indian2 #KamalHaasan #DelhiGanesh

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan #AkshayKumar
    ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 

    கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாகவும், சித்தார்த் ஜோடியாக காஜல் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    அத்துடன் வில்லனாக அபிஷேக் பச்சனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வில்லன் கதாபாத்திரத்திற்கு அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அக்‌ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அக்‌ஷய் குமார் சில நிபந்தனைகளை விதிக்க, அபிஷேக் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஓரிரு வாரத்தில் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #AbhishekBachchan 

    சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வித்தியாசமாக `அருவம்' என தலைப்பு வைத்துள்ளனர். #Aruvam #Siddharth
    சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது,

    அருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும் என்றார்.

    கபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Aruvam #Siddharth 

    சாதி பெயர்கள் கொண்டு உருவாகும் புதிய படங்களுக்கு பிரபல நடிகர் சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #Siddharth
    கவிஞர் வைரமுத்து–பாடகி சின்மயி விவகாரத்தில் பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள மாரிமுத்து கருத்து தெரிவிக்கும்போது, ‘‘அவர் பெண்ணைத்தானே கூப்பிட்டார். ஆணை அழைத்தால்தான் தவறு’’ என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்தார். இப்போது மீண்டும் டுவிட்டரில் சித்தார்த் கூறியிருப்பதாவது:–

    ‘‘மாரிமுத்து குறுகிய மனம் கொண்டவர். ஏமாற்றம் தரக்கூடிய மனிதாராகவும் இருக்கிறார். அவரது கருத்து என்னை காயப்படுத்தியது. பரியேறும் பெருமாள் எனக்கு பிடித்த படம். அதில் அவர் நடித்து இருக்க கூடாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடித்து விட்டார். சமத்துவம் மற்றும் மாற்றத்துக்கான படமாக அது அமைந்தது. 

    சாதி ஆணவத்தை பற்றி பேசும் படங்களுக்கு எதிராக தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பேசும் பட தலைப்புகளுக்கும் கதை மற்றும் வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாபம். அனைவரும் ஒன்று சேர்ந்து அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

    நான் ஒரு அமானுஷ்ய படம் எடுத்தபோது சமூகத்தில் நாங்கள் இதுபோன்ற நம்பிக்கைகளை ஊக்குவிக்கவில்லை என்று தணிக்கை குழுவினர் அறிவிக்கும்படி கூறினார்கள். இதே முறையை சாதி ரீதியிலான படங்களிலும் தணிக்கை குழுவினர் பின்பற்றலாம்.’’

    இவ்வாறு சித்தார்த் கூறினார்.
    சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று நடிகர் சித்தார்த்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். #Seeman #Siddharth
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மீ டூ’ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், டுவிட்டரில் பதில் அளித்தார்.

    அதில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார். வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது. கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது என்று கூறினார்.

    சித்தார்த்தின் கண்டனத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார். ‘‘இன்று சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது உங்கள் குரல்வளை எங்கிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்த தந்தை கொல்லப்பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எல்லா கற்களும், அம்புகளும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்?” என கேட்டுள்ளார். #Seeman #Siddharth
    தீபா மேத்தா இயக்கும் புதிய இணைய தொடருக்காக ரஜினி பட நடிகையுடன் ஜோடி சேர இருக்கிறார் நடிகர் சித்தார்த். #Siddharth
    காலா படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையாகி விட்டார் ஹூமா குரேசி. பாலிவுட்டை சேர்ந்த இயக்குனரான தீபா மேத்தா வித்தியாசமான கதைகளை படமாக்கும் இயக்குனர்களில் ஒருவர்.

    இவர் அடுத்ததாக புதிய இணைய தொடர் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடரில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சித்தார்த் ஏற்கெனவே தீபா மேத்தா இயக்கிய ’மிட் நைட்ஸ் சில்ரன்’ படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளைத் தவிர்த்து இணையதளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.



    இந்நிலையில் தீபா மேத்தா இயக்கும் புதிய தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஹூமா குரேசியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் கம்மார சம்பவம் படத்தில் நடித்த சித்தார்த் தற்போது இயக்குநர் சசி இயக்கும் புதிய படம், கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கும் சைத்தான் கே பச்சா, சாய் சேகர் இயக்கும் படம் ஆகிய மூன்று படங்களில் நடித்துவருகிறார்.
    வங்கியில் கடன் பெற்றுக் கொண்டு திருப்பி செலுத்தாமல் ஊரை விட்டு சென்ற குஜராத் தொழில் அதிபர் பற்றி சித்தார்த் கருத்து தெரிவித்திருக்கிறார். #Siddharth
    இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு ஓடினார். சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும் பஞ்சாப் வங்கியில் பெற்ற ரூ.12 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். மெகுல் சோக்சியும் வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளார்.

    இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் சந்தேசராவும் இப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருக்கிறார். இவர் பல்வேறு வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். வங்கி கடன் பெறுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும் பினாமி பெயரில் உள்ள நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார்.

    இவர் நைஜீரியாவுக்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடியை நடிகர் சித்தார்த் கண்டித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், ‘‘இன்னொரு குஜராத்தி சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். நீங்கள் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதாகத்தானே சொன்னீர்கள். ஆனால் இப்போது அதற்கு எதிர்மறையாக நடந்து வருகிறது. இங்கு சாதாரண இந்திய குடிமகனின் பண மதிப்பு நீக்கம் செய்யப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். 

    நிரவ் மோடியும் குஜராத்காரர் என்பதால் சித்தார்த் இன்னொரு குஜராத்தி என்று நிதின் சந்தேசராவை டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் பற்றி அவதூறாக பேசிய நிலையில், நடிகர் சித்தார்த் எச்.ராஜாவை தாக்கி கருத்து பதிவிட்டுள்ளார். #HRaja #Siddharth
    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

    இதுகுறித்து பதில் அளித்த எச்.ராஜா, தான் நீதிமன்றம் குறித்து தவறாக பேசவில்லை என்றும், பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து எச்.ராஜாவை தாக்கி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது,

    ` போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீசார், நீதிமன்றம், போலீஸ் மற்றும் சிறுபான்மையினர் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கின்றனர். இந்த இந்துத்துவா பயங்கரவாதி எச்.ராஜா சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பார்க்கிறார். இது வெட்கக்கேடானது ' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, எச். ராஜா உள்பட 8 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. #HRaja #Siddharth

    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Siddharth
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சித்தார்த் தன் பங்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நான் உனக்கு தைரியம் தருகிறேன், நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன்! என்று குறிப்பிட்டு (#KeralaDonationChallenge) என்ற ஹேஷ்டேக்கில் நீங்களும் கேரளாவுக்கு உதவலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகை ரோஹிணி உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Siddharth

    தமிழ் சினிமாவில் பிசியான நாயகர்களாக வலம் வரும் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் சசி இயக்கத்தில் மாமன், மச்சானாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Siddharth #GVPrakash
    சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். குடும்ப பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருக்கிறது.

    இந்த படத்துக்கு ரெட்டைக்கொம்பு என்று பெயரிடப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. குடும்பக்கதையாக உருவாகும் இதில் இருவரும் மாமன் மச்சானாக நடிக்கிறார்கள். சித்தார்த் டிராபிக் போலீசாகவும், ஜிவி.பிரகாஷ் பைக் ரேஸ் வீரராகவும் நடிக்கிறார்கள். முதலில் இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது வேறு ஒருவர் தயாரிக்க இருக்கிறார்.



    சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். #Siddharth #GVPrakash

    அமெரிக்கா - ஈரான் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்தை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார். #DonaldTrump #Siddharth
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சித்தார்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாக இருக்கும் சித்தார்த் அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும், கிண்டல் செய்தும் வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபருக்கு விடுத்த எச்சரிக்கையை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப்பை, சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

    ஈரான் அதிபர் ரவுகானிக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும். வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தின் பெரிய (கேப்பிட்டல்) எழுத்துகளில் பதிவிட்டிருந்தார். 

    டிரம்ப்பின் அந்த ட்விட்டை குறிப்பிட்டு கருத்து பதிவு செய்த சித்தார்த், ‘உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறது’ என்று கிண்டல் செய்தார். #DonaldTrump #Siddharth

    ×