search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddharth"

    • சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து டக்கர் படக்குழு மாலைமலர் நேர்யர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்தனர்.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.


    டக்கர்

    டக்கர்

    'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டக்கர் படத்திற்காக நடிகர் சித்தார்த், இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.


    டக்கர் படக்குழு
    டக்கர் படக்குழு

    அப்பொழுது நடிகர் சித்தார்த் பேசியதாவது, "இந்த படம் தியேட்டர்ல பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். இது ஜனரஞ்சகமான கமர்ஷியல் படம். ஒரு சில படங்களில் மக்கள் இந்த கருத்தை ஏற்று கொள்வார்களா? இதில் பேசியிருக்கும் நீதி அநீதியை ஏற்று கொள்வார்களா? என்ற எண்ணம் இருக்கும். டக்கர் படம் மக்களோட அறியாமையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது, நல்ல மனிதனை தூண்டி வெளியே கொண்டு வரும் நோக்கம் கிடையாது. ஜாலியாக படத்தை வந்து தியேட்டர்ல சந்தோஷமாக பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். எனவே அனைவரும் டக்கர் படத்தை தியேட்டர்ல வந்து பாருங்கள்" என்றார்.



    • சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நிரா’ என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.


    டக்கர்

    டக்கர்

    இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தொடர்சியான அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டக்கர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நிரா' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • நடிகர் சித்தார் 'டக்கர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.


    டக்கர்

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சித்தார்த்திடம் டுவிட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் கேட்கப்பட்டத்து. அதற்கு அவர், "சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை ஆனால், நான் எப்போதும் உண்மையை பேசியுள்ளேன். ஒரு நடிகனாக நான் இதை வருடம் முழுவதும் செய்கிறேன். ஆனால், என் உடன் பணியாற்றும் எந்த நடிகரும் நடிகையும் யாரும் இதை செய்வதில்லை. அவர்கள் ஏன் பேசவில்லை, நான் மட்டும் ஏன் பேசுகிறேன் என்று யாரும் அவர்களிடம் கேட்டதில்லை.


    சித்தார்த்

    உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க நான் சூப்பர் ஹீரோ அல்ல. இது எனக்கு பிடிக்கவில்லை. பல இயக்குனர்கள் என் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தேன். 'இவர் உண்மையைப் பேசுபவர்' என்று மக்களுக்கு அறிமுகம் செய்துவிட்டேன். இனி 'இவர்தான் சிறந்த நடிகர்' என்று அறிமுகப்படுத்த விரும்பினேன்" என்று கூறினார்.

    • சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.
    • தற்போது இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     

    சித்தார்த்-அதிதி ராவ்

    சித்தார்த்-அதிதி ராவ்


    சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. அதிதிராவ் பிறந்த நாளையொட்டி "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு சித்தார்த் வாழ்த்து தெரிவித்திருந்தது இவர்களின் காதலை உறுதிப் படுத்துவதாக பலரும் பதிவிட்டு வந்தனர்.

     


    சித்தார்த்-அதிதி ராவ்

    சித்தார்த்-அதிதி ராவ்

    இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார்.
    • இவருக்கு ஆதரவு தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.


    சித்தார்த் பதிவு

    அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.


    சித்தார்த்

    இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    • சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.
    • தற்போது சித்தார்த்தின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

    நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    சித்தார்த் - அதிதி ராவ்

    சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில், அதிதிராவ் பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    அதிதி ராவ்- சித்தார்த்

    அந்த பதிவில், "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர்.

    சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சித்தார்த்.
    • இவர் காவியத் தலைவன் படத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றார்.

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (04-09-2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.


    சித்தார்த்

    இதில், நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதனிடையே நடிகர் சித்தார்த் 2014-ஆம் ஆண்டு வெளியான 'காவியத் தலைவன்' என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார்.

    அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "உண்மையான கலைக்கான பாராட்டும், விருதும் உரிய தருணத்தில் வர வேண்டும். அது இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. 8 வருடம் கழித்து எங்களின் உழைப்பிற்கும் பார்த்த கனவுகளுக்கும் சேர்ந்து அனுபவித்த கலைக்கும் இந்த மாதிரி ஒரு விருது கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. காவியத்தலைவன் படக்குழுவிற்கு நன்றி. ஒரு அரசாங்கத்திடம் சிறந்த நடிகருக்கான விருது வாங்குவது என்பது மிக பெரிய விஷயம். அதுவும் 8 ஆண்டுகள் கழித்து வாங்குவது அதிசயம் மட்டுமின்றி அற்புதமும் கூட. இந்த அற்புதத்திற்கு நன்றி" என்று பேசினார்.


    காவியத் தலைவன்

    பின்பு வெளியேறிய சித்தார்த்தை ரசிகர்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்டனர். அப்போது லிஃப்ட்டுக்குள் சென்ற சித்தார்த்திடம் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அவரிடம் இருந்து செல்போனை நடிகர் சித்தார்த் பறித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



    கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் - திரிஷா இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Siddharth #Trisha
    சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் தற்போது, இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இருந்தனர்.

    இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. ராதிகா ஆப்தே, தபு நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. கடந்த 3-ந் தேதி சீனாவில் இந்த படம் ‘பியானே பிளேயர்’ என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியது.



    இந்த நிலையில், அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே வேடத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #Andhadhun #Siddharth #Trisha

    சசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அக்காள்-தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. #SivappuManjalPachai
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் சசி மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பயணித்தது இனிமையானது. அருமையான கதை. என்று குறிப்பிட்டுள்ளார்.


    அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.

    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol

    அருவம் படத்தின் வேலைகளில் இருக்கும் சித்தார்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Siddharth
    புதுமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கும் அருவம் படத்தில் தற்போது சித்தார்த் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார். திகில் படமாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

    சமீபத்தில் இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ‘நானே சுட்டேன்’ என்ற படத்தில் சித்தார்த் நடிக்க உள்ளதாக சில வதந்திகள் வெளியாகின. இதே படத்தில் சிம்புவும், சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற வதந்தி காட்டுத்தீ போல பரவி எப்படியோ சித்தார்த்தையே எட்டிவிட்டது. 



    இந்த வதந்திக்கு விளக்கமளித்துள்ள சித்தார்த், “இந்த செய்தி எல்லாம் யாரோ வடை சுட்ட மாதிரி இருக்கிறது. ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ? இதுல நெருங்கிய வட்டம் வேற. நடத்துங்க” என்று கூறியுள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Indian2 #KamalHaasan
    கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இந்த படம் கமல்-‌ஷங்கர் இணைந்து பணியாற்றிய ஒரே படம்.

    தற்போது 22 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடல் அமைப்பை மாற்றி அமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஐதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்து இருந்தது. எழுத்தாளர்கள் ஜெய மோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதி உள்ளனர்.



    படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

    அந்த காட்சிகளை பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

    ‘இந்தியன் 2’ படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்தில் இளைஞர் படை மூலம் கமல்ஹாசன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #Arya
    கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    ‌ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக படக்குழுவினர் தெரிவித்த கருத்து:- ‘இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஒரு வேடமா, 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது. ஆனால் கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதிபதி வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.



    முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே வந்து இளைஞர்கள் படையை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆர்யாவிடம் பேசி உள்ளோம்.

    படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்பதை முறையாக அறிவிப்போம். வில்லனாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது”

    இவ்வாறு கூறினர்.

    கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார் இணைந்து ‘இந்தியன் 2’ படத்துக்கான வசனங்களை எழுதி உள்ளனர். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Siddharth #Arya 

    ×