என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Siddharth"
- சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து டக்கர் படக்குழு மாலைமலர் நேர்யர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்தனர்.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டக்கர் படத்திற்காக நடிகர் சித்தார்த், இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்பொழுது நடிகர் சித்தார்த் பேசியதாவது, "இந்த படம் தியேட்டர்ல பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். இது ஜனரஞ்சகமான கமர்ஷியல் படம். ஒரு சில படங்களில் மக்கள் இந்த கருத்தை ஏற்று கொள்வார்களா? இதில் பேசியிருக்கும் நீதி அநீதியை ஏற்று கொள்வார்களா? என்ற எண்ணம் இருக்கும். டக்கர் படம் மக்களோட அறியாமையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது, நல்ல மனிதனை தூண்டி வெளியே கொண்டு வரும் நோக்கம் கிடையாது. ஜாலியாக படத்தை வந்து தியேட்டர்ல சந்தோஷமாக பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். எனவே அனைவரும் டக்கர் படத்தை தியேட்டர்ல வந்து பாருங்கள்" என்றார்.
- சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நிரா’ என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தொடர்சியான அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டக்கர் படத்தில் இடம்பெற்றுள்ள 'நிரா' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் சித்தார் 'டக்கர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
டக்கர்
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் சித்தார்த்திடம் டுவிட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் கேட்கப்பட்டத்து. அதற்கு அவர், "சமூக சேவகன் என்பது வேடிக்கையான வார்த்தை ஆனால், நான் எப்போதும் உண்மையை பேசியுள்ளேன். ஒரு நடிகனாக நான் இதை வருடம் முழுவதும் செய்கிறேன். ஆனால், என் உடன் பணியாற்றும் எந்த நடிகரும் நடிகையும் யாரும் இதை செய்வதில்லை. அவர்கள் ஏன் பேசவில்லை, நான் மட்டும் ஏன் பேசுகிறேன் என்று யாரும் அவர்களிடம் கேட்டதில்லை.
சித்தார்த்
உலகத்தில் உள்ள அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக குரல் கொடுக்க நான் சூப்பர் ஹீரோ அல்ல. இது எனக்கு பிடிக்கவில்லை. பல இயக்குனர்கள் என் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தேன். 'இவர் உண்மையைப் பேசுபவர்' என்று மக்களுக்கு அறிமுகம் செய்துவிட்டேன். இனி 'இவர்தான் சிறந்த நடிகர்' என்று அறிமுகப்படுத்த விரும்பினேன்" என்று கூறினார்.
- சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.
- தற்போது இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. அதிதிராவ் பிறந்த நாளையொட்டி "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு சித்தார்த் வாழ்த்து தெரிவித்திருந்தது இவர்களின் காதலை உறுதிப் படுத்துவதாக பலரும் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து விஷாலின் எனிமி படத்தில் இடம்பெற்ற மாலை டம் டம் பாடலுக்கு நடிகை அதிதி ராவ் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார்.
- இவருக்கு ஆதரவு தெரிவித்து சு. வெங்கடேசன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை விமான நிலையம் வந்த வயதான தனது பெற்றோரின் உடைமையை சி.ஐ.எஸ்.எப் வீரர்கள், சோதனை செய்ததாக கூறியுள்ளார்.
சித்தார்த் பதிவு
அப்போது அவரது பெற்றோர் ஆங்கிலத்தில் பேச முற்பட்டபோது, தங்களிடம் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதாகவும், கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் வரை தனது பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவருக்கு ஆதரவு தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது இணையப் பக்கத்தில், "மதுரை விமானநிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.
சித்தார்த்
இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
- சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதல் செய்து வருவதாக கிசுகிசு பரவி வந்தது.
- தற்போது சித்தார்த்தின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்தார்த் - அதிதி ராவ்
சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில், அதிதிராவ் பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதிதி ராவ்- சித்தார்த்
அந்த பதிவில், "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார். அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர்.
சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சித்தார்த்.
- இவர் காவியத் தலைவன் படத்திற்காக தமிழ்நாடு அரசின் விருதினை பெற்றார்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (04-09-2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
சித்தார்த்
இதில், நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதனிடையே நடிகர் சித்தார்த் 2014-ஆம் ஆண்டு வெளியான 'காவியத் தலைவன்' என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "உண்மையான கலைக்கான பாராட்டும், விருதும் உரிய தருணத்தில் வர வேண்டும். அது இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. 8 வருடம் கழித்து எங்களின் உழைப்பிற்கும் பார்த்த கனவுகளுக்கும் சேர்ந்து அனுபவித்த கலைக்கும் இந்த மாதிரி ஒரு விருது கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. காவியத்தலைவன் படக்குழுவிற்கு நன்றி. ஒரு அரசாங்கத்திடம் சிறந்த நடிகருக்கான விருது வாங்குவது என்பது மிக பெரிய விஷயம். அதுவும் 8 ஆண்டுகள் கழித்து வாங்குவது அதிசயம் மட்டுமின்றி அற்புதமும் கூட. இந்த அற்புதத்திற்கு நன்றி" என்று பேசினார்.
காவியத் தலைவன்
பின்பு வெளியேறிய சித்தார்த்தை ரசிகர்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்டனர். அப்போது லிஃப்ட்டுக்குள் சென்ற சித்தார்த்திடம் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அவரிடம் இருந்து செல்போனை நடிகர் சித்தார்த் பறித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
It’s a wrap for director Sasi’s #sivappumanjalpachai lovely journey with Director Sasi and @Actor_Siddharth ... a superb script .. #சிவப்புமஞ்சள்பச்சை .. pic.twitter.com/k4ry28DFvH
— G.V.Prakash Kumar (@gvprakash) March 25, 2019
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்