search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்யா"

    • தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
    • கலை இயக்குநர் பணியை எஸ்.ஜே. ராம் கவனிக்கிறார்.

    அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் 'ஒரு நொடி' படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா வெளியிட்டார். அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் டிரைலர் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'ஒரு நொடி' படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் நடித்துள்ளனர்.

     


    இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு பணிகளை கே.ஜி.ரத்தீஷ் மேற்கொள்ள, கலை இயக்குநர் பணியை எஸ்.ஜே. ராம் கவனிக்கிறார்.

    ஒரு நொடி படத்தின் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்
    • இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்

    பிரபல நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். சரத்குமார் மற்றும் கொளதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் ஆர்யா இன்று தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் தனது புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்.

    அந்த பதிவில்,ஆர்யா கூறி இருப்பதாவது :-

    எனது 'Mr.X' புதிய படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த படத்தை சகோதரர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

    மிஸ்டர் எக்ஸ்' படத்திற்கு. மார்ச் 2023 - ல் ஸ்கிரிப்ட் தயாரானது. புதிய உடல் தோற்ற பொலிவுக்கான வேலை ஏப்ரல் 2023-ல் தொடங்கியது. அதன் பின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கியது.



    இறுதியாக, நாங்கள் படத்தின் கடைசி ஷெட்யூலில் இருக்கிறோம். இலக்கை நோக்கி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது மார்ச் 2024-ல் இருக்கிறேன். எனது உடல்வாகு தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மனு ஆனந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி, சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.


    பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கச்சிதமான உடல் அமைப்பில் இருக்கும் ஆர்யா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    • குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.
    • சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


    1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.


    இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா, "பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் 'வடக்குப்பட்டி ராமசாமி' ஹிட்டாகும். இயக்குனர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும்.


    65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்" என்றார்.

    • விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து நடிகர் விஷால், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், "இந்த வீடு எனக்கு புதிதல்ல. நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக வெற்றி பெற்று இந்த வீட்டிற்கு வரும் போது பிரேமலதா அம்மா சொன்னது விஷயம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

    விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் பத்திரத்த மீட்டு வரும் பொழுது ஒரு குழந்தை போன்று லாக்கரில் உள்ள உன் நகைகளை எடு பத்திரத்தை வைக்க வேண்டும் என்று சொன்னது காதில் ஒலிக்கிறது. ஒரு நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதனாக பெயர் வாங்குவது கடினம். விஜயகாந்த் என்ற வார்த்தை அடி வயிற்றில் இருந்து ஒவ்வொருவரும் கூறுவார்கள். அந்த வயிற்றை நிரப்பும் சாமி விஜயகாந்த். எத்தனையோ லட்சம் பேருக்கு அவர் சாப்பாடு போட்டுள்ளார்" என்று பேசினார்.


    மேலும், விஜய் மீது செருப்பு வீசியது குறித்த கேள்விக்கு, "கூட்டம் இருக்கும் பொழுது யார் செருப்பை எடுத்து அடித்தார்கள் என்று நாம் யோசிக்க முடியாது. அதையும் தாண்டி ஒரு நடிகர் அவருக்கு பிடித்த நடிகர், கலைப்பயணத்தில் அவரின் முக்கியமான தூணாக இருந்த நடிகரை பார்க்க வந்திருக்கிறார். அதனால் அதை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன நடக்குது என்று யாருக்கும் தெரியாது" என்று பேசினார்.

    • விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "தமிழ் திரையுலகில் ஒரு மிக சிறந்த நடிகர். கலையுலகத்தில் மட்டுமல்ல பொது மக்களிடம் சிறந்த மனிதர் என்று பெயர் வாங்கிய ஒருவர். ஒரு நல்ல அரசியல்வாதி. விஜயகாந்தின் தைரியம், உழைப்பு ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்து தான் நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.


    விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் கேப்டன் (விஜயகாந்த்) மட்டும் தான். அவரது மறைவு அன்று நான் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரே ஒரு விஷயம் தான் நான் அவரை பார்த்து சொன்னேன் மன்னித்துவிடு சாமி. நான் அவரது கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை. விஜயகாந்த் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.

    • இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'.
    • கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வந்தது.

    நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'. ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப்தொடரில் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்த வெப்தொடர் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது. ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த வெப்தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த வெப்தொடர் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, "மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா? சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை பிரைமில் ஒகே செய்தார்கள். மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார். இதை எடுப்பது மிகக்கடினம். பிராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது.


    3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிசோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி" என்று பேசினார்.




    • இயக்குனர் மனு ஆனந்த்-இன் முந்தைய படமான எஃப்.ஐ.ஆர். நல்ல வரவேற்பை பெற்றது.
    • மிஸ்டர் எக்ஸ் படத்தில் கவுதம் கார்திக், மஞ்சிமா மோகன், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய, இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவுடன் கவுதம் கார்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

     

    பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் மிஸ்டர் எக்ஸ் படமும் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. திபு நினன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வின்சென்ட், கலை இயக்கம் ராஜீவன், படத்தொகுப்பை பிரசன்னா மேற்கொள்கின்றனர்.

    ஆர்யா மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் நடிக்கும் காட்சி இன்று படமாக்கப்பட்டது. வரும் வாரங்களில் இந்த படம் தொடர்பான இதர அறிவிப்புகள் வெளியாகலாம். மனு ஆனந்த் கடைசியாக இயக்கிய எஃப்.ஐ.ஆர். படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

    • நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.
    • இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

    பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சரத்குமார் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    • முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்திருந்தார்.

    மேலும் பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.



    இந்நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 7ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் திரைப்படம் மிஸ்டர்.எக்ஸ்.
    • இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.


    மிஸ்டர் எக்ஸ் படக்குழு

    பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.



    ×