என் மலர்
நீங்கள் தேடியது "Sasi"
- ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார்.
- இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவில்லை. இவர்களின் கூட்டணி மீண்டும் இணையுமா? என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
படத்தின் தலைப்பிற்கு ஏற்ப கதைகளும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது பிச்சைக்காரன் திரைப்படம்.
- விஜய் ஆண்டனி தற்பொழுது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது பிச்சைக்காரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியது.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்பொழுது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்பொழுது விஜய் ஆண்டனியுடன் தன் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
அக்கதை இரண்டு ஹீரோ கதை எனவும், விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷன் நடிக்க இருப்பதாக கூறினார். இந்த வெற்றி கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
It’s a wrap for director Sasi’s #sivappumanjalpachai lovely journey with Director Sasi and @Actor_Siddharth ... a superb script .. #சிவப்புமஞ்சள்பச்சை .. pic.twitter.com/k4ry28DFvH
— G.V.Prakash Kumar (@gvprakash) March 25, 2019







