search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SriReddy"

    பிரபலங்களின் ரகசிய வாழ்க்கை பற்றிய தகவலை திரட்டி வருவதாக கூறியுள்ள ஸ்ரீரெட்டி, அந்த கதவல் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தெலுங்கு நடிகர்கள் ராணாவின் தம்பி, நானி, ராஜசேகர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் குற்றசாட்டுகளை கூறினார். பின்னர் தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் புகார் கூறத் தொடங்கினார்.

    முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் சுந்தர்.சி, ஆதி என்று அவரது புகார் பட்டியல் நீண்டது. சென்னையிலேயே செட்டில் ஆன ஸ்ரீரெட்டி தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

    ஸ்ரீ ரெட்டி முகநூலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெரிய ஹீரோ தன்னை அழிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-


    “எனக்கு எவ்வளவு தகவல் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீக்கும் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் ரகசிய வாழ்க்கை முறை பற்றி அனைத்து தகவல்களும் தெரியும். பல பெண்களிடம் இருந்து இன்னும் தகவலை பெற்றுக் கொண்டிருக்கிறேன். திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும். பட வாய்ப்புக்காக பெண்கள் படுக்கைக்கு அழைக்கப்படுவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks

    சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று நடிகர் சித்தார்த்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். #Seeman #Siddharth
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மீ டூ’ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த், டுவிட்டரில் பதில் அளித்தார்.

    அதில் “மீ டூ இயக்கத்தின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சீமான் கூறுகிறார். இது ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சிக்கிறார். வெறுப்பாளர்களும், சின்ன மனதுக்காரர்களும் அரசியலில் எல்லா பக்கத்திலும் இருக்கிறார்கள் எனக்கு இப்போது புரிகிறது. சீமானின் கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அவரது கருத்து மரியாதைக் குறைவானது. போலித்தனமானது. கூடவே பெண் வெறுப்புத்தன்மையுடையது என்று கூறினார்.

    சித்தார்த்தின் கண்டனத்துக்கு சீமான் பதிலளித்துள்ளார். ‘‘இன்று சின்மயிக்காக குரல் கொடுப்பவர் ஸ்ரீரெட்டிக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது உங்கள் குரல்வளை எங்கிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., மீது தனது மகளை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்த தந்தை கொல்லப்பட்டார். அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. எல்லா கற்களும், அம்புகளும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்?” என கேட்டுள்ளார். #Seeman #Siddharth
    சண்டக்கோழி-2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பதிலுக்கு கீர்த்தி சுரேஷ் சிரித்தது கேவலமாக இருப்பதாக, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். #Sandakozhi2 #KeerthiSuresh #SriReddy
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். 

    பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது. 

    இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுகுறித்து சண்டக்கோழி-2 பட விழாவில் விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, 



    ‘‘ஸ்ரீரெட்டிக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை வரவேற்கிறேன். இந்த படத்தில் நடிக்கும்போது எல்லோரும் உஷாராக இருப்பார்கள். அவர் தனது பாதுகாப்புக்கு எல்லா இடத்திலும் கேமரா வைத்து இருப்பார்’’ என்றார். ஸ்ரீரெட்டி பற்றி விஷால் பேசியதை கேட்டு அருகில் இருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக கூறப்படுகிறது. இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டியை கோபப்படுத்தி உள்ளது. 

    கீர்த்தி சுரேசை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கண்டித்துள்ளார். ‘‘கீர்த்தி சுரேஷ் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுபவர்கள் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #Sandakozhi2 #KeerthiSuresh #SriReddy

    திரையுல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி நடிக்கும் அவரது வாழ்க்கைப் படத்திற்கு இயக்குநர் வாராகி எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். #SriReddy #Varaki
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.

    ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறிய அவர். தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.

    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிபடுத்துகிறார்கள்.



    இந்த படத்துக்கு தடைவிதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #Varaki

    சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், அவரது சாவலை ஸ்ரீரெட்டி ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். #SriReddy #RaghavaLawrence
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

    ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்விதமாக அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், நான் ஸ்ரீரெட்டிக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். என் மீது தவறாக குற்றம்சாட்டி இருந்தாலும், ஸ்ரீரெட்டி மீது பரிதாபப்படுகிறேன். ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாகவும், நடிப்பு திறமையை அவர் நிரூபித்து காட்டினால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து, இப்போதே சம்பள முன்பணம் கொடுப்பேன் என்றும் லாரன்ஸ் கூறினார். 



    லாரன்ஸின் சவாலை ஏற்பதாக ஸ்ரீரெட்டி, அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். நான் விசாரணைக்கு உட்கார்ந்தால் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நீங்கள் சரி என்றால் உங்கள் படத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு திறமை இருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் அதை நீக்கி விட்டார். #SriReddy #RaghavaLawrence

    சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.



    ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், நான் ஸ்ரீரெட்டிக்கு எந்த தீங்கும் செய்யவில்லை என்பது கடவுளுக்கும், எனக்கும் தெரியும். என் மீது தவறாக குற்றச்சாட்டி இருந்தாலும், ஸ்ரீரெட்டி மீத பரிதாபப்படுவதாக கூறிய லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் அதற்கு ஸ்ரீரெட்டி தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் தனது அடுத்த படத்தில் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தருவதாக லாரன்ஸ் கூறியிருந்தார். 


    லாரன்ஸின் இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது லாரன்ஸ் மாஸ்டருக்காக என்று அந்த வீடியோவுக்கு மேலே குறிப்பிட்டிருக்கிறார். #SriReddy #RaghavaLawrence

    தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறி, நடிகர் லாரன்ஸ் ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #SriReddy #RaghavaLawrence
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

    இந்த விவகாரத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். இயக்குநர் வாராகி ஸ்ரீரெட்டி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது, 



    என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் போராளி குறித்த கதையை இயக்கும் சமயத்தில், ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் நான் அந்த படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என்மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்? 

    நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் வந்ததாகவும், அங்குவைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறினார். மேலும் அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஓட்டல்களில் பூஜை செய்ய, ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும் என்பதை ஸ்ரீரெட்டியிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

    இதற்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை. உங்களது அனைத்து பேட்டிகளையும் பார்த்து உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனை தான் என்ன? வாய்ப்பு தருவதாக கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே? தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன். 



    நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரை தொடர்வு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்.

    உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன். அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். 

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். #SriReddy #RaghavaLawrence

    பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று இயக்குநர் வாராகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். #SriReddy #SriLeaks
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

    தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார் கூறி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குனரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    ஸ்ரீரெட்டியே தான் விரும்பி சிலருடன் பாலியலில் ஈடுபட்டதாக கூறியிருப்பதால் அவர் மீது விபசார பிரிவிலும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

    நான் பாலியல் தொழிலாளி இல்லை. பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று ஸ்ரீரெட்டி கூறினார். இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ஸ்ரீரெட்டி தன்னை விலைமாது என்று கூறிய இயக்குனர் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

    இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட அனைத்து மொழி பட உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. பட வாய்ப்பு கேட்பவர்களை படுக்கையில் பயன்படுத்துகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட பெண். இந்த பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போராடுகிறேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து இருக்கிறேன். எங்குமே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.



    நீதிக்காக போராடுகிறேன். இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றும் பயன் இல்லை. நான் விலைமாது என்றும் என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாராகி என்பவர் புகார் கூறி இருக்கிறார். அவரை யார் என்றே தெரியாது. என்னை விலைமாது என்கிறாரே? அவர் என்னிடம் வந்தாரா? எனக்கு பணம் கொடுத்தாரா?

    பெண்களுக்கு மரியாதை கொடுக்க அவருக்கு தெரியவில்லை. என்னை விலைமாது என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறேன். இந்த புகார் மீது உளவு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #Varaki

    சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டி, விபச்சாரம் செய்வதாக இயக்குநர் வாராகி கூறிய நிலையில், என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என்று வாராகிக்கு, ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். #SriReddy #Varaki
    பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றியதாக தெலுங்கு பட உலகினர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமா மீது புகார் கூறி வருகிறார். சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். 

    ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். 

    இதற்கிடையே இயக்குநர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.



    இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது,

    நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். #SriReddy #Varaki

    சிவா மனசுல புஷ்பா படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வாராகி, நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ஸ்ரீரெட்டி செய்வது விபச்சாரம் தான் என்று தாக்கிப் பேசினார். #Srireddy #Varaki
    வாராகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டதாக வாராகி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வாராகி, 

    படத்தின் பெயரை மாற்ற சொல்லி தணிக்கை குழு வற்புறுத்தியதாக கூறினார். சென்சார் போர்டு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. என் படத்தின் பெயரும், அதில் வரும் கதாபாத்திரங்களும் தான் பிரச்சனை என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று சென்சார் போர்டுக்கு கேள்வி எழுப்பினார். அந்த மாதிரி பெயராக இருந்தால் மாற்றலாம். பெயரை மாற்றுவதற்கான சரியான காரணமும் சொல்லவில்லை. 



    ஸ்ரீரெட்டி மீது புகார் கூறியது பற்றி கேட்டதற்கு வாராகி கூறியதாவது,

    சினிமா துறையே ரொம்ப நலிந்து கிடக்கிறது. சமூக சீர்த்திருத்த கருத்துக்களை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். லாரன்ஸ் யார் என்பது நமக்கு தெரியும், மக்களட, ஊனமுற்றோர் என லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் அனைத்திலும் உடன்பட்டு தான் சென்றிருக்கிறார். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏமாறி போயிருக்கலாம். பலமுறை ஏமாறினால் அதுக்கு பெயர் என்ன? அது விபச்சாரம் என்று தான் நான் சொல்கிறேன். அதனால் தான் விபச்சார வழக்கில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளேன். #Srireddy #Varaki

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும், விளம்பரத்துக்காக நடிகர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறுவதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். #SriReddy #BharathiRaja
    தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறினார்.

    இதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தெலுங்கு பட உலகில் இருந்து சென்னையில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் தமிழ் திரைஉலகினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.



    தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாரதிராஜா ஸ்ரீரெட்டி குறித்து கூறியதாவது:-

    ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது.

    அப்படி இருக்கும்போது அதனை வைத்து அவர் விளம்பரம் தேடிக் கொள்ளக்கூடாது. இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை குறை சொல்லக்கூடாது’.

    இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார். #SriReddy #BharathiRaja

    தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா மீது தொடர் குற்றங்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி, தான் பாலியல் சித்ரவதைக்கு ஆளனதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகில் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக போராட்டங்கள் நடத்திய ஸ்ரீரெட்டி சென்னைக்கு வந்து இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மீது மீண்டும் புகார் சொல்ல தொடங்கி இருக்கிறார். அவர் பேட்டி வருமாறு:-

    சென்னை வந்தது ஏன்?

    சில நாட்களுக்கு சென்னையில்தான் இருக்கப் போகிறேன். இங்குள்ள திரையுலகினரால் நான் சந்தித்த கசப்பான அனுபவங்களை மனம் திறந்து பேச இருக்கிறேன்.

    கேள்வி:- சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சுதான் உள்ளே வந்தீங்களா?”

    பதில்:- எல்லோருக்கும் தெரியுமே. எல்லோரும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையேனு நான் அதைப் பத்தி அவ்வளவா யோசிக்கலை. மீடியா துறை ரொம்ப ஸ்டிரிக்ட். யாரும் யாரையும் இந்த வி‌ஷயத்துக்காகக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா, சினிமாவுல அப்படி இல்லை. நேரடியாவே இந்த வி‌ஷயத்துக்காக அப்ரோச் பண்ணுவாங்க.”

    கேள்வி:- உங்களுக்கு இந்த பிரச்சினை முதல் முதலா எப்போது நடந்தது? அப்போது, எப்படி எதிர் கொண்டீங்க?”

    பதில்:- ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக கிராமத்துக்குப் போயிருந்தோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, நைட் டைம்ல அந்த டைரக்டர் என் ரூம் கதவைத் தட்டினார். அவர், என்னை அடையத்தான் முயற்சி பண்றார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். `இதைப் பத்தி முடிவெடுக்க எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்‘னு சொல்லிட்டேன். பிறகு, நல்லா நடிக்கலைனு எல்லோர் முன்னாடியும் திட்டுறது, ஒன் மோர், ரீடேக் எடுத்து டார்ச்சர் பண்றது என்று வேறவிதமா நடந்து கிட்டார். அந்த ரெண்டு நாளும் எனக்கு நரகமா இருந்தது. எனக்குக் கெட்ட பெயர் வந்திடுச்சுனா, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, நடிகை ஆக முடியாதுனு நானும் அதுக்கு `சரி’னு சொல்லிட்டேன்.

    கேள்வி:- இதை பற்றி பேச வேண்டும் என்று ஏன் முடிவு எடுத்தீர்கள்?

    பதில்:- இதில் நான் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் இதை பற்றி பேசி இருக்க மாட்டேன். ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக தான் குரல் கொடுக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.



    கேள்வி:- முன்னணி நடிகைகளை இழுத்தது ஏன்?

    பதில்:- எல்லா நடிகைகளுமே தொடக்கத்தில் இந்த கசப்பான அனுபவங்களை கடந்தே வருகிறார்கள். பிரபல நடிகை ஆகிவிட்டால் இந்த தொல்லை இருக்காது. அதன் பிறகு அவர்கள் விரும்புபவர்களுடன் மட்டும் செல்லலாம். உங்கள் தேதி அவர்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் எதுவும் தரவேண்டியதில்லை. உங்களுக்கு வாய்ப்பு தேவைப்பட்டால் கொடுக்க வேண்டி இருக்கும். நீங்கள் தராவிட்டால் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் கூட தர மாட்டார்கள். மோசமான ஆடைகளை கொடுத்து உடுத்த சொல்வார்கள். சில ஹீரோக்கள் ஹீரோயின்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தங்கள் மனைவியை நடிக்க அனுமதிப்பதில்லை. காரணம் இதுதான். முடியாது என்று சொல்லி இருந்தால் வீட்டிலேயே இருந்து இருக்க வேண்டியது தான். நடிகை ஆகி இருக்கவே முடியாது. நான் விரும்பி பகிரவில்லை.

    கேள்வி:- அரை நிர்வாண போராட்டம் நடத்தியது ஏன்?

    பதில்:- நிறைய பேர் என்னை நிர்வாணமாக பார்த்து இருக்கிறார்கள். அதனால் தான் அந்த போராட்டத்தை கையில் எடுத்தேன். ஒரு இந்திய பெண்ணாக நிர்வாணமாக நிற்க கூச்சப்பட்டேன். தேவைப்பட்டால் அப்படியும் போராட்டம் நடத்த தயார்.

    பதில்:- வாய்ப்புக்காகவோ பரபரப்புக்காகவோ இதை வெளிக்கொண்டு வரவில்லை. இந்த பரபரப்பு என்பது சில நாட்கள் தான். இன்னொரு பரபரப்பு வந்தால் இது மறக்கடிக்கப்படும். எனக்கு அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காது. இந்த வி‌ஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்பினேன்.

    கேள்வி:- உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா?

    பதில்:- இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளியிடுவேன். நான் தனியாக வசித்து வருவதால் என் மொபைலில் எதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

    கேள்வி:- உங்களை தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் இல்லையா?

    பதில்:- நான் மற்றவர்களுக்காக பிறக்கவில்லை. எனக்காக வாழ்பவள். எனவே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #SriLeaks
    ×