என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீரெட்டி"
- சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன்.
- படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன்.
நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சினிமாவில் முன்னேற, செய்ய வேண்டியதை செய்துதான் வரவேண்டியது இருக்கிறது. நான் 'மீ டூ' புகார் பற்றி பேசும்போது, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் கூட குரல் கொடுக்கவில்லை. போதைப்பொருள் வழக்கில் கூட வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தொழிலும், பணமும், பேரும், புகழும்தான் முக்கியம். 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, லேடிஸ் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை?
புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, பெரிய ஆட்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்சனைகள் குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள்.
"சினிமாவில் நடக்கும் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி என்னை நானே பலியிட்டு கொண்டேன். படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யூடியூப்' சேனல் தொடங்கினேன். கவர்ச்சியை காட்டி சமையல் செய்து கவனம் ஈர்க்கிறேன். சமையலுக்கு எதுக்கு கவர்ச்சி என்று யோசிக்கலாம். வாய்ப்புகள் இல்லாமல் கிடக்கும் எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யூடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் இப்போது எனக்கு கைகொடுக்கிறது" என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போதை வழக்கில் நடிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
- ஒரு 'பார்ட்டி'யில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள்.
பாலியல் தொல்லைகள் தரும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்ட நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சினிமாவில் அரங்கேறும் பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். தற்போது போதை வழக்கில் நடிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு 'பார்ட்டி'யில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய இடம். ஆனால் அவர்களை பற்றி பெரியளவில் எனக்கு தெரியாது.
மது மற்றும் போதைப்பொருளின் பிடியில் நடிகர்கள் தாண்டி நடிகைகளும் சிக்கி இருக்கிறார்கள். சருமம் மிளிர வேண்டும் என்பதற்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், பசி-சோர்வு வரக்கூடாது என்பதற்காகவும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்வார்கள். நான் அப்படி இல்லை. எப்போது கூப்பிட்டாலும் ரத்த பரிசோதனைக்கு வருவேன்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை 'கர்மா' இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலருக்கும் அது நடக்கும். அதையும் கண்கூடாக பார்ப்பேன் என்றார்.
- தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.
- ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும்.
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
அப்போது உங்கள் மீதே ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தாரே என்கிற கேள்வி கேட்டதும், சிரித்துக்கொண்டே பதிலளித்த விஷால், ஸ்ரீரெட்டி யாருன்னே எனக்கு தெரியாது, அவங்க செஞ்ச சேட்டைகள் தான் எனக்கு தெரியும் என கூறினார்.
விஷாலின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம் உமனைசரான நீ பேசலாமா? ஒரு பெண்ணை பற்றி பேசும் போது உன்னுடைய நாக்கு ரொம்பவே கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். உலகத்துக்கே தெரியும் நீ எவ்ளோ பெரிய ஃபிராடு என்று ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் போது உன் உடல் ஏன் நடுங்குது, நீயெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போறியா, அதெல்லாம் சரி உன்னுடன் இருந்த பெண்கள் எல்லாம் உன்னை ஏன் விட்டுச் சென்றனர்.
உன்னுடைய நிச்சயதார்த்தம் ஏன் நின்றுப் போனது, இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறை பதில் சொல். நீ எந்த பதவியில் இருந்தாலும் எனக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. கர்மா ஏற்கனவே உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வருகிறது. மேலும், என் வீட்டில் நிறைய வித விதமான செருப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அவதூறு வீடியோக்கள் தொடர்பாக ஆந்திர போலீசார் ஸ்ரீரெட்டி மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை.
பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, நடிகர்களும்-இயக்குனர்களும் தனக்கு பட வாய்ப்பு தருவதாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்ததும், அரை நிர்வாண போராட்டம் நடத்தியதும் பரபரப்பானது.
மேலும் அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீதும் அவதூறாக பேசி வீடியோக்கள் வெளியிட்டார்.
சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாகவும், பவன் கல்யாண் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான அவதூறு வீடியோக்கள் தொடர்பாக ஆந்திர போலீசார் ஸ்ரீரெட்டி மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் அவர் கைதாகலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திராபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "நான் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இனிமேல் போலீஸ் வழக்கு, கைது என்று மானத்தை வாங்காதே என்று குடும்பத்தினர் கெஞ்சுகிறார்கள். இனிமேல் உங்களை பற்றி அவதூறாக பேசமாட்டேன்'' என்று வீடியோவில் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






