search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Reddy"

    சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறியுள்ளார். #SriReddy
    பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உண்மை சம்பவங்களை படத்தில் கொண்டு வருவதால் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களும், இயக்குனர்களும் கலக்கத்தில் உள்ளனர். படத்தை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ராமமோகன்ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் நடிகை சுப்ரியா, இயக்குனர் நந்தினிரெட்டி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதனை வரவேற்று ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-



    “எனது கனவுகள் இப்போது நிஜமாகி இருக்கிறது. சினிமாவில் கதாநாயகர்களாக தோன்றுபவர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லை. ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். இதுவரை மோசமாக அழைக்கப்பட்டு வந்த நான் இந்த அறிவிப்பு மூலம் கதாநாயகி ஆகிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலியும், வேதனையும் இப்போது பறந்து விட்டது. எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராடுவேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #PollachiRapist #SriReddy
    பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.



    விரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

    அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
    தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி தற்போது, திரிஷா - ராணா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ராணாவை சாடியுள்ளார். #SriReddy #RanaDaggupati #AbhiramDaggupati
    தெலுங்கு திரையுலகில் நடிகர், இயக்குனர் என திரையுலகை சேர்ந்த பலரும் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. நிர்வாண போராட்டமும் நடத்தினார். இவரது பாலியல் குற்றச்சாட்டில் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கினர்.

    தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தவறாக நடந்ததாகவும் குற்றம்சாட்டினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் புகார் கூறினார். ஐதராபாத்தில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததால் தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.


    இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் திரிஷாவுடன் ராணா நெருக்கமாக இருந்து கன்னத்தில் முத்தமிடும் படத்தையும், அவரது தம்பி அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் படத்தையும் தற்போது வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த படங்களின் கீழே “ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். ஆனால் அவருக்கு தனது மகன்கள் ராணா, அபிராமை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை. ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் இருந்தார். அவரைப்போன்று பேரன்களும் உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

    திரிஷாவும், ராணாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திரிஷாவை காதலிக்கவில்லை என்று ராணா மறுத்து வந்தார். இந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #SriReddy #RanaDaggupati #AbhiramDaggupati #Trisha

    ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறி வந்த ஸ்ரீ ரெட்டிக்கு, தற்போது முன் பணம் கொடுத்து அடுத்த படத்தில் நடிக்க அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். #SriReddy
    தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

    தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி இருந்தார். இதில் ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்கள் என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எனக்கு பட வாய்ப்பு கொடுத்திருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘எனது நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன். நான் லாரன்சை நேரில் சந்தித்தேன். என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டார். அவருடன் குழந்தைகளும் இருந்தார்கள். அவர்கள் எனக்காக பிராத்தனை செய்தார்கள். அதன்பின் அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறி முன் பணம் கொடுத்தார் லாரன்ஸ். இந்த பணத்தை சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுலம் பகுதி மக்களுக்கு கொடுக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார். 
    தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #SriReddy
    தெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

    தெலுங்கு பட உலகினர் மீது மட்டுமின்றி தமிழ் திரை உலகினர் மீது அவர் பாலியல் புகார்களை கூறி இருந்தார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் அவரே நடிக்கிறார்.

    இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் “மீ டூ” என்ற ஹேஸ்டேக்கில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதில் தான் ஸ்ரீரெட்டியும் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவருக்கு பின்னால் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.

    மேலும் பல பெண்களை வரவழைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்தார். நாங்கள்தான் அரசாங்கம். நாங்கள் நினைத்தால் எந்த முன்னணி நடிகரையும் எனது படத்தில் நடிக்க வைக்க முடியும் என்றார். அவர் என்னிடம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் கூறினார். நான் மேலும் பலரது பெயர்களை ‘மீ டூ’ வில் வெளியிட இருக்கிறேன்.

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

    ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டை டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும் போது “ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை சந்தித்ததோ அல்லது பேசியதோ கிடையாது. சரியான நேரத்தில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்குவேன். தற்போது இதற்கு மேல் எதுவும் கூற இயலாது” என்றார்.
    ஸ்ரீரெட்டிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த தெலுங்கு நடிகை ஹேமாவுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவு செய்துள்ள ஸ்ரீரெட்டி முதலில் உங்களது ஆபாச வீடியோவை நீக்குங்கள் என்று கூறியுள்ளார். #SriReddy #Hema
    சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதாகவும், தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டனர்.

    சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தெலுங்கு நடிகை ஹேமா குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். 



    பாலியல் புகார் கூறியிருந்த ஸ்ரீரெட்டியை நடிகை ஹேமா ஏற்கனவே விமர்சித்து இருந்தார். அவர் கூறும்போது, ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது நல்லது அல்ல. இயக்குனர் தனது பார்வைக்கேற்ப நடிகர், நடிகைகளுக்கு கதைக்கேற்ற கதாபாத்திரத்தை கொடுப்பார். யாருடைய பரிந்துரையிலும் வாய்ப்புகள் கொடுப்பது இல்லை. ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றார்.



    இதனால் கோபமான ஸ்ரீரெட்டி, ஹேமாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், “ஹேமா நீங்கள், கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சையிடம் சொல்லி உங்களுடையை ஆபாச வீடியோவை நீக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மக்கள் மத்தியில் நான் ஆடையை கழற்றியது பற்றி பேசுங்கள். உங்கள் கருப்பு பக்கத்தை பார்க்காமல் எனது போராட்டத்தை பற்றி பேசாதீர்கள். என்னைப் பற்றி தெரியாமல் நீங்கள் கருத்து சொன்னால், நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எனது அதிரடியை பார்க்க வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார். இந்த மோதல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriReddy #Hema

    தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த ஸ்ரீரெட்டி, தற்போது இயக்குனர் ஒரு மீது பாலியல் புகார் வைத்துள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.

    தனது முகநூல் பக்கத்தில் அவர்கள் பெயர் விவரங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த புகாரில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள்.

    இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆந்திராவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இனிமேல் சென்னையில்தான் வசிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். 

    சில நாட்கள் பாலியல் புகார்களை நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது சாடியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு ‘‘இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார். 



    தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதான ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சினிமா உலகில் பாலியல் புகார்களை கூறி வரும் ஸ்ரீ ரெட்டி, அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அறிந்த செய்திக்கு ஆவேசமாக பேசியிருக்கிறார். #SriReddy
    நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 

    அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். 
    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்போவதாகவும் ஸ்ரீரெட்டி அறிவித்து உள்ளார். 

    செக்ஸ் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், அலுவலக மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பினார். அதற்கு ஸ்ரீரெட்டி, ‘‘பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
    சென்னையில் அழகு நிலையம் ஒன்றை திறந்துவைத்த பிறகு நிரூபர்களை சந்தித்த நடிகை ப்ரியா பவானிசங்கர், பாலியல் துன்புறுத்தல் பற்றி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறியது சரியல்ல என்று கூறினார். #PriyaBhavaniShankar #SriReddy
    மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார். இதில் வில்லன் நடிகர் சாம் பாலும் கலந்து கொண்டார்.

    பின்னர் நடிகை பிரியா பவானி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. அனைத்து துறைகளிலும் பாலியல் வன்கொடுமைகளும், துன்புறுத்தலும் இருக்கிறது. அதனை ஏற்றுகொள்வதும், மறுப்பதும் நம் கையில் தான் உள்ளது.



    திரைத்துறையில் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். ஒரு தவறை செய்துவிட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல. என்னை பொறுத்த வரை குடும்பபாங்கான கதைகளில் மட்டும் நடிக்கப் போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PriyaBhavaniShankar #SriReddy

    சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்து அவர்கள் மூலம் பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சி செய்கிறார் என்று வாராகி குற்றம் சாட்டியுள்ளார். #SriReddy
    சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. 

    இதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார். 

    இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுபற்றி வாராகி கூறும்போது,

    "சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார். 

    கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார். 

    ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இதிலிருந்தே சிலரை மிரட்டி பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. 

    தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீ ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும். ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்துதான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.



    ராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர். இந்த சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.

    அப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது என தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு  வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும். 

    நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும். அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள். 

    இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும். எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்" 

    என வாராகி இவ்வாறு கூறியுள்ளார்.
    தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட அதிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது குறை சொல்லி வரும் நிலையில், தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார். #SriReddy #ReddyDairy
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

    இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க இருக்கிறார். தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.



    அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க இருக்கிறார்கள். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.
    தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, ஸ்ரீரெட்டியின் கேள்விக்கும் பதில் அளித்தார். இதையடுத்து சிம்புவுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். #SriReddy #STR #Simbu
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். 

    அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த சிம்பு, ‘‘ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.

    ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக, தான் செய்ய வேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.


    அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

    பெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப் போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். #SriReddy #STR #Simbu #AskSTR

    ×