search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Leaks"

    தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிவந்த ஸ்ரீரெட்டி, தற்போது இயக்குனர் ஒரு மீது பாலியல் புகார் வைத்துள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றி விட்டதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறி பட உலகில் அதிர்வை ஏற்படுத்தினார்.

    தனது முகநூல் பக்கத்தில் அவர்கள் பெயர் விவரங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த புகாரில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள்.

    இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆந்திராவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இனிமேல் சென்னையில்தான் வசிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். 

    சில நாட்கள் பாலியல் புகார்களை நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது தெலுங்கு இயக்குனர் ராம்கி மீது சாடியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில், இயக்குனர் ராம்கியின் வாட்ஸ் அப் உரையாடலை வெளியிட்டு ‘‘இதனை எனக்கு எஸ்.எம். என்பவர் அனுப்பி வைத்தார். பாலியல் தேவைக்கு இளம் பெண்களை ராம்கி கேட்டு இருக்கிறார். அவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று கண்டித்து கருத்து பதிவிட்டுள்ளார். 



    தெலுங்கு டி.வி விவாதங்களில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ராம்கி ஆரம்பத்தில் இருந்தே எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்கி மீதான ஸ்ரீரெட்டியின் புகார் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சினிமா உலகில் பாலியல் புகார்களை கூறி வரும் ஸ்ரீ ரெட்டி, அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக அறிந்த செய்திக்கு ஆவேசமாக பேசியிருக்கிறார். #SriReddy
    நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 

    அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். 
    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்போவதாகவும் ஸ்ரீரெட்டி அறிவித்து உள்ளார். 

    செக்ஸ் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண், அலுவலக மேலாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று ஸ்ரீரெட்டிக்கு தகவல் அனுப்பினார். அதற்கு ஸ்ரீரெட்டி, ‘‘பாலியல் தொல்லை கொடுத்த அந்த மேலாளருக்கு சென்னை பெண்கள் செருப்படி கொடுக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
    சினிமா உலகில் உள்ள தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு மிரட்டல் விடுத்து அவர்கள் மூலம் பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சி செய்கிறார் என்று வாராகி குற்றம் சாட்டியுள்ளார். #SriReddy
    சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. 

    இதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார். 

    இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். இதுபற்றி வாராகி கூறும்போது,

    "சினிமா துறையில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தில் ஸ்ரீ ரெட்டி புதுவிதமான முயற்சி எடுத்திருக்கிறார். அதாவது சமூகத்தில் பிரபலமாக உள்ளவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி, அதன்மூலம் மிரட்டி வாய்ப்பு தேடுவது என்கிற தவறான முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியுள்ளார். 

    கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன் தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார். 

    ஆனால் இதுவரை அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இதிலிருந்தே சிலரை மிரட்டி பணம் பறிப்பது, அல்லது வாய்ப்பு கேட்பது தான் அவரது நோக்கமாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. 

    தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரீ ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும். ஆனால் லாரன்ஸின் பெருந்தன்மையான செயலை முழுமனதாக ஏற்காமல் லாரன்ஸையே விமர்சித்துதான் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.



    ராகவா லாரன்ஸ் மிகவும் நேர்மையானவர். இந்த சமுதாயத்தில் சமூக சிந்தனையுடன் செயல்படக்கூடியவர். நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி மக்களால் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடிகராகவும் இருக்கிறார்.

    அப்படிப்பட்ட ராகவா லாரன்ஸ், தனது பெருந்தன்மையை புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கும் ஸ்ரீரெட்டி போன்ற தவறான நபர்களுக்கு வாய்ப்பு தருவதை தவிர்க்கவேண்டும் என அவரிடம் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஆந்திராவில் பலர் மீது குற்றச்சாட்டுக்களை வீசிய ஸ்ரீ ரெட்டி, இனி அங்கே தனது பருப்பு வேகாது என தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு  வாய்ப்பு கொடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு தவறான உதாரணத்தை உருவாக்கிவிடும். 

    நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, இது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும். அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை தயவுசெய்து புறக்கணியுங்கள். 

    இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள் பார்க்கவேண்டும். எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்" 

    என வாராகி இவ்வாறு கூறியுள்ளார்.
    தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி, பட அதிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது குறை சொல்லி வரும் நிலையில், தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார். #SriReddy #ReddyDairy
    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழைத்தவர்களுடன் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

    இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படமாக எடுக்க இருக்கிறார். தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன், ரங்கீலா என்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.



    அலாவுதீன் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். 70 சதவிகிதம் ரகசிய கேமரா மூலம் படமாக்க இருக்கிறார்கள். ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெற இருப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறியிருக்கிறார்.
    தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, ஸ்ரீரெட்டியின் கேள்விக்கும் பதில் அளித்தார். இதையடுத்து சிம்புவுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். #SriReddy #STR #Simbu
    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். 

    அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த சிம்பு, ‘‘ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.

    ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக, தான் செய்ய வேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.


    அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

    பெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப் போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். #SriReddy #STR #Simbu #AskSTR

    நடிகை திரிஷாவிடம் ‘ஸ்ரீ ரெட்டி உங்களையும் இழுத்துள்ளாரே?’ என்று கேட்டதற்கு அவர் யார் என்றே தெரியாது என்று கூறியிருக்கிறார். #Trisha #SriReddy
    தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி வருகிறார்.

    சென்னைக்கு வந்து தங்கி இருக்கும் அவர் தற்போது தமிழ் சினிமா பிரபலங்களின் மீது புகார் கூறி வருகிறார். சுந்தர்.சி, ஆதி என்று அவரது புகார் பட்டியல் நீள்கிறது. நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் கேட்டால் அவர்களே இதுபற்றி சொல்வார்கள் என்று முன்னணி நடிகைகளையும் இதில் இழுத்துள்ளார்.

    இந்த நிலையில் நடிகை லதா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஈரோடு சென்றார். அங்கு ஸ்ரீ ரெட்டி தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை லதா கூறியதாவது:-

    “நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து வெளிப்படுத்துவதே தவறு. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கு அடுத்தடுத்து செல்கின்றனர்? எல்லாத் துறைகளிலும் நல்லது கெட்டது என இரண்டுமே இருக்கும். திரைப்படத் துறையில் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள்”

    இவ்வாறு அவர் கூறினார்.



    நடிகை திரிஷாவிடம் ‘ஸ்ரீ ரெட்டி உங்களையும் இழுத்துள்ளாரே?’ என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், ‘இதற்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவரை பெரிய ஆளாக்க வேண்டாம்’ என்றார்.

    மூத்த நடிகைகள் மட்டும் அல்லாது அர்த்தனா பினு, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட இளம் நடிகைகளும் ஸ்ரீ ரெட்டி மீது பாய்ந்துள்ளனர். அவர்கள் கூறும்போது ‘தவறான கண்ணோட்டத்தில் அழைத்தால் முடியாது என்று சொல்லி பழக வேண்டும். சரியான நபர்களுடன் பயணித்தால் இந்த பிரச்சினை வராது’ என்று கூறியுள்ளனர்.

    பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SriReddy
    தெலுங்கு சினிமா உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி முன்னணி இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறி இருந்தார்.

    சென்னையில் தங்கி இருக்கும் அவர் டைரக்டர் சுந்தர்.சி, நடிகர் ஆதி ஆகியோர் மீதும் புகார்களை கூறி உள்ளார்.

    இந்த நிலையில் ஸ்ரீரெட்டி மீது நடிகர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திராவில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் அளித்து பணம் பறித்துள்ளார். சென்னையில் அது போன்று திரை உலகை சேர்ந்தவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார்.



    பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெண்களை இழிவுபடுத்துவது போல் உள்ளது. அவரது பேட்டி விபச்சாரத்தை ஒப்புக் கொண்டது போல் உள்ளது. எனவே விபச்சார சட்ட பிரிவின் கீழ் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    திரைத்துறையினரை பற்றி புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, நடிகைகளை அனுபவிக்கத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SriReddy #TamilLeaks
    தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி  குற்றஞ்சாட்டினார். அதன்பிறகு அவரது பார்வை தமிழ்த்திரைத்துறை பக்கமும் திரும்பி, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்தார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி விளக்கியுள்ளார். 

    நடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குநர்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜென்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக கூறியுள்ளார்.

    உனக்கு நல்ல வாய்ப்பை வழங்கி, திரைப்படத்துறையில் உன்னை பெரிய ஆளாக்குகிறேன், ஆனால் நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்பார்கள். இது தான், நடிகைகளை திரைப்படத்துறையினர் படுக்கைக்கு அழைக்கும் தொழில்நுட்பம் என விளக்குகிறார் ஸ்ரீரெட்டி.

    ஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் சாதுர்யம் என்றும், ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குண்டைத் தூக்கிப் போடுகிறார்.



    ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

    தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஐதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி விவரித்துள்ளார்.
    தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா மீது தொடர் குற்றங்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி, தான் பாலியல் சித்ரவதைக்கு ஆளனதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks
    தெலுங்கு பட உலகில் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக போராட்டங்கள் நடத்திய ஸ்ரீரெட்டி சென்னைக்கு வந்து இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மீது மீண்டும் புகார் சொல்ல தொடங்கி இருக்கிறார். அவர் பேட்டி வருமாறு:-

    சென்னை வந்தது ஏன்?

    சில நாட்களுக்கு சென்னையில்தான் இருக்கப் போகிறேன். இங்குள்ள திரையுலகினரால் நான் சந்தித்த கசப்பான அனுபவங்களை மனம் திறந்து பேச இருக்கிறேன்.

    கேள்வி:- சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சுதான் உள்ளே வந்தீங்களா?”

    பதில்:- எல்லோருக்கும் தெரியுமே. எல்லோரும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையேனு நான் அதைப் பத்தி அவ்வளவா யோசிக்கலை. மீடியா துறை ரொம்ப ஸ்டிரிக்ட். யாரும் யாரையும் இந்த வி‌ஷயத்துக்காகக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா, சினிமாவுல அப்படி இல்லை. நேரடியாவே இந்த வி‌ஷயத்துக்காக அப்ரோச் பண்ணுவாங்க.”

    கேள்வி:- உங்களுக்கு இந்த பிரச்சினை முதல் முதலா எப்போது நடந்தது? அப்போது, எப்படி எதிர் கொண்டீங்க?”

    பதில்:- ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக கிராமத்துக்குப் போயிருந்தோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, நைட் டைம்ல அந்த டைரக்டர் என் ரூம் கதவைத் தட்டினார். அவர், என்னை அடையத்தான் முயற்சி பண்றார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். `இதைப் பத்தி முடிவெடுக்க எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்‘னு சொல்லிட்டேன். பிறகு, நல்லா நடிக்கலைனு எல்லோர் முன்னாடியும் திட்டுறது, ஒன் மோர், ரீடேக் எடுத்து டார்ச்சர் பண்றது என்று வேறவிதமா நடந்து கிட்டார். அந்த ரெண்டு நாளும் எனக்கு நரகமா இருந்தது. எனக்குக் கெட்ட பெயர் வந்திடுச்சுனா, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, நடிகை ஆக முடியாதுனு நானும் அதுக்கு `சரி’னு சொல்லிட்டேன்.

    கேள்வி:- இதை பற்றி பேச வேண்டும் என்று ஏன் முடிவு எடுத்தீர்கள்?

    பதில்:- இதில் நான் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் இதை பற்றி பேசி இருக்க மாட்டேன். ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக தான் குரல் கொடுக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.



    கேள்வி:- முன்னணி நடிகைகளை இழுத்தது ஏன்?

    பதில்:- எல்லா நடிகைகளுமே தொடக்கத்தில் இந்த கசப்பான அனுபவங்களை கடந்தே வருகிறார்கள். பிரபல நடிகை ஆகிவிட்டால் இந்த தொல்லை இருக்காது. அதன் பிறகு அவர்கள் விரும்புபவர்களுடன் மட்டும் செல்லலாம். உங்கள் தேதி அவர்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் எதுவும் தரவேண்டியதில்லை. உங்களுக்கு வாய்ப்பு தேவைப்பட்டால் கொடுக்க வேண்டி இருக்கும். நீங்கள் தராவிட்டால் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் கூட தர மாட்டார்கள். மோசமான ஆடைகளை கொடுத்து உடுத்த சொல்வார்கள். சில ஹீரோக்கள் ஹீரோயின்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தங்கள் மனைவியை நடிக்க அனுமதிப்பதில்லை. காரணம் இதுதான். முடியாது என்று சொல்லி இருந்தால் வீட்டிலேயே இருந்து இருக்க வேண்டியது தான். நடிகை ஆகி இருக்கவே முடியாது. நான் விரும்பி பகிரவில்லை.

    கேள்வி:- அரை நிர்வாண போராட்டம் நடத்தியது ஏன்?

    பதில்:- நிறைய பேர் என்னை நிர்வாணமாக பார்த்து இருக்கிறார்கள். அதனால் தான் அந்த போராட்டத்தை கையில் எடுத்தேன். ஒரு இந்திய பெண்ணாக நிர்வாணமாக நிற்க கூச்சப்பட்டேன். தேவைப்பட்டால் அப்படியும் போராட்டம் நடத்த தயார்.

    பதில்:- வாய்ப்புக்காகவோ பரபரப்புக்காகவோ இதை வெளிக்கொண்டு வரவில்லை. இந்த பரபரப்பு என்பது சில நாட்கள் தான். இன்னொரு பரபரப்பு வந்தால் இது மறக்கடிக்கப்படும். எனக்கு அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காது. இந்த வி‌ஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்பினேன்.

    கேள்வி:- உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா?

    பதில்:- இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளியிடுவேன். நான் தனியாக வசித்து வருவதால் என் மொபைலில் எதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

    கேள்வி:- உங்களை தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் இல்லையா?

    பதில்:- நான் மற்றவர்களுக்காக பிறக்கவில்லை. எனக்காக வாழ்பவள். எனவே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #SriLeaks
    அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். #SriReddy #SriLeaks #SundarC
    தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.

    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியதால் தமிழ் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது. 

    ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார். 



    தற்போது  நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

    ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

    ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.
     
    படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #SundarC

    திரைத்துறை பிரபலங்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டாதாக குற்றம்சாட்டியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தனது பட்டியலில் மேலும் சிலர் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks
    சென்னை:

    தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரைத்துறையில் சிலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக கூறி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இன்று வெளியிட்டுள்ள பதிவில், விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தந்தி டிவிக்கு  அளித்த பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-

    நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம். சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை.



    சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சினிமாத் துறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும்.

    கேள்வி - மேலும் யாருடைய பெயர்களையாவது வெளியிட நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?

    பதில்- ஆம், எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்.

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #TamilLeaks

    தமிழ் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். #SriReddy #Vishal
    சென்னை:

    தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.

    அதன்படி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரை வெளியிட்டு தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த வரிசையில் நேற்று ராகவா லாரன்சையும் இணைத்துள்ளார்.

    மூன்று முக்கிய நபர்களின் பெயர்களை ஸ்ரீ ரெட்டி அம்பலப்படுத்தியது, தமிழ் திரையுலகை கதிகலங்கச் செய்துள்ளது. இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.



    இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Vishal

    ×