search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salary"

    • திருவெண்ணை நல்லூர் அருகே சம்பளம் கேட்ட பெண் கட்டிட தொழிலாளி தாக்கப்பட்டார்.
    • பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார்

    விழுப்புரம்:

    திருவள்ளூர் அருகே சித்தலிங்க மடம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாஞ்சாலி (வயது27) இவர் கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் பார்த்தசாரதி என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதனிடையே பாஞ்சாலி நேற்று மாலை பார்த்தசாரதியிடம் சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் மருமகள் உள்ளிட்டோர் பாஞ்சாலியை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்தனர். இதனை தடுக்க சென்ற மற்றொரு தொழிலாளியையும் அவர்கள் அடித்தனர். இது குறித்து பாஞ்சாலி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.
    • தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர்.

    திருப்பூர் :

    ஊரடங்கில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை நிரப்ப இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது. திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 142 மையங்கள் திறக்க அரசு நிர்ணயித்தது. தற்போது வரை 7 ஆயிரத்து 255 மையங்கள் திறக்கப்பட்டு விட்டன. இதன்கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, பள்ளிகளின் நேரம் போக மாலை 5மணி முதல் 7மணி வரை தன்னார்வலர்கள் வழியே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர், வாரத்துக்கு குறைந்தது 6மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் போன்ற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதங்களாக இவர்களில் பலர் பணியில் இருந்து விலகிவருகின்றனர். சுமார் 170க்கும் மேற்பட்ட மையங்களில் தன்னார்வலர்கள் இல்லை.

    இது குறித்து தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், இத்திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.அறிவுறுத்தியபடி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்கான சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச் மாத சம்பளமே மே மாதம்தான் கிடைத்தது.இதன்காரணமாகவும் தன்னார்வலர் சிலர் விலகிவிட்டனர். கோடை விடுமுறையில் பயிற்சி நடக்கவில்லை. அதற்கு சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.

    இந்த மையங்களில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த, ரீடிங் மராத்தான் போட்டி ஜூன் 1-ந்தேதி துவங்கி 12-ந் தேதி வரை நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செல்போன் செயலி மூலம் மாணவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளை வாசிக்க வைக்க வேண்டும்.அதிக வார்த்தைகள் வாசித்ததன் அடிப்படையில் மாவட்டம், ஒன்றியம் வாரியாக ரேங்க் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் 6 கோடியே 82 லட்சம் சொற்களை சரியாக வாசித்து முதலிடம் பிடித்தது.திருப்பூரில்ஊத்துக்குளி வட்டாரம் 413 வட்டாரங்களில் மாநில அளவில் 92வது இடத்தில் இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 974 செல்போன்களில் இருந்து 1.52 லட்சம் நிமிடங்களில் 76 லட்சம் சொற்கள் சரியாக வாசிக்கப்பட்டுள்ளன.ரீடிங் மராத்தானில் திருப்பூர் பின்தங்க தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணமாக இருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தன்னார்வலர்கள் பலர் உயர்கல்விக்காகவும், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் வெளியூர் சென்று விட்டனர். தன்னார்வலர் சிலரின் தகவல்கள் முறையாக கல்வித்துறைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க தாமதிக்கிறது. தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் சரிசெய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். #GajaStorm #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395 ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹர்மந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.



    இதே போன்று, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி ஆகியோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினர். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் செயலாளர் விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் ஆகியோர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 74 லட்சத்து 62 ஆயிரத்து 221 ரூபாய்க்கான காசோலையை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களுடன் வக்கீல்கள் ஆர்.பாலசுப்பிரமணியா, சி.பரமசிவம், வினோத் கன்னா, சியாமளா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

    ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்த சந்திப்பின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் இளமஞ்சி பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர். 
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.
    வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நேரம், சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.

    சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது. சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள்.

    இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம் மாறி வேலையில் சேரமாட்டார்கள்.

    இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும். ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.

    அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
    சம்பள பணத்தை வீட்டுக்கு கொடுக்காத மகனை தந்தை திட்டியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    கவுண்டம்பாளையம்:

    மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சந்திரன். இவரது மகன் பாலாஜி (வயது 24). இவர் கோவை வெள்ளகிணர் பிரிவு வன்னி நகரில் தங்கி தண்ணீர் லாரி ஓட்டி வந்தார்.

    சமீபத்தில் வாங்கிய சம்பளம் அனைத்துக்கும் புதுத்துணி வாங்கினார். இதை அறிந்த அவரது தந்தை உனது தாய் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். அவருக்கு மருந்து, மாத்திரைக்கு கூட பணம் அனுப்பாமல் சம்பளம் முழுவதும் துணியே வாங்கினால் எப்படி என்று சத்தம்போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று ஜி.என். மில்ஸ் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு லாரியிலேயே வி‌ஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பாலாஜி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட பாலாஜிக்கு திருமணமாகவில்லை.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    ரெயில்வே தொழிற்சங்க மான எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. துணைப்பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீர சேகரன் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாற்றியமைக்க வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, ஆர்.ஏ.சி. 1980 முறைப்படி அகவிலைப்படியை உயர்த்தி 1.1.2016 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    20 ஆண்டுகள் பணி காலத்திற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்க நிபந்தனை விதிக்க கூடாது, மத்திய அமைச்சரவை குழு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி மேலாண் இயக்குனரை அறையில் பூட்டி ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    தங்களுக்கான மாத சம்பளத்தை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தின் சார்பில் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி இன்று தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் துறையின் மேலாண் இயக்குனர் அறைக்குள் வைத்து பூட்டு போட்டு பூட்டினர். பின்னர், அலுவலக அறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை முதல் கையெழுத்து போட்டு விட்டு வேலை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறினர். #tamilnews
    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று புதுவை சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

    மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என அதிரடியாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

    அதோடு விசாரணையின்போது நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட மன்றத்துக்குள் செயல்பட அனுமதிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்தை ஏற்ற சபாநாயகர் வைத்திலிங்கம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் கடந்த 2-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தின் எதிர் பார்ப்புக்கு இணங்க நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

    மேலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

     நியமன எம்.எல்.ஏ. சாமிநாதனுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் செப்டம்பர் 11-ந் தேதி வரை மட்டுமே தகுதி உள்ளதாக குறிப்பிட்டுள்ள காட்சி.

    அதே நேரத்தில், பா.ஜனதாவின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அடையாள அட்டை, கார் பாஸ் போன்றவை அளிக்கப்பட்டு உள்ளது. இவை வருகிற 11-ந் தேதி வரை தகுதியுடையதாக அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க சட்டசபை செயலகம் பட்டியல் அனுப்பி உள்ளது.

    இதில் பா.ஜனதாவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஆகஸ்டு மாத சம்பளம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைக்காது என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து சட்டசபை செயலகத்தில் கேட்டபோது, நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு மீண்டும் வருகிற 11 -ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இறுதி தீர்ப்பு வந்தபிறகே சம்பளம், சலுகைகள் குறித்து முடிவு எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் சாமி நாதனிடம் கேட்டபோது, தற்போதைய நிலையில் சம்பளம் முக்கியமில்லை. ஏற்கனவே வருகை பதிவேடு மற்றும் சட்டசபை ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

    ஏற்கனவே கூறியபடி எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்து விட்டோம். உச்ச நீதிமன்றமும் எங்களுக்கு நல்லதொரு தீர்ப்பை நிச்சயமாக வழங்கும் என கூறினார்.   #NominatedMLAs #PondicherryAssembly
    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி கிருஷ்ணகிரி அரசு டாக்டர்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி அரசு டாக்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக கடந்த 1-ந் முதல் 3-ந் தேதி வரை கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடந்த 20-ந் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் கிருஷ்ணகிரியில் ஊர்வலம் நடந்தது. இதற்கு அனைத்து மருத்துவர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கிய ஊர்வலம் காந்தி சாலை, டி.பி. ரோடு வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு முடிந்தது. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். 

    இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

    வருகிற 27-ந் தேதி முதல் அனைத்து விதமான திறனாய்வு கூட்டங்களையும் புறக்கணித்து, அனைத்து சிறப்பு திட்டங்களுக்கான நிர்வாக பணிகளை புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு கண்டு கொள்ளாத பட்சத்தில், வரும் செப்டம்பர் 12-ந் தேதி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவும், 21-ந் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இதில், டாக்டர்கள் கைலாஷ், சதீஷ், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். #KeralaFlood #VenkaiahNaidu
    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கேரள வெள்ள சேதம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மூத்த அதிகாரிகள், வெங்கையா நாயுடுவின் செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார்.



    அவருடைய ஒரு மாத சம்பளம் ரூ.4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடிவு செய்துள்ளனர். #KeralaFlood #VenkaiahNaidu
    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க கோரி நாளை தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம் என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிகளில் தர்ணா போராட்டம் நடைபெறும். தொடர்ந்து வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும். வருகிற 27-ந் தேதி முதல் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழக அரசு சார்பில் நடக்கும் அனைத்து விதமான ஆய்வுக்கூட்டங்களும் புறக்கணிக்கப்படும். 

    தொடர்ந்து செப்டம்பர் 12-ந் தேதி சென்னையில் அனைத்து மருத்துவர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டு கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும். அதன்பிறகும் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால் செப்டம்பர் 21-ந் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகளில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அப்போது முக்கியமான அறுவை சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்ள நாங்களே ஒரு மருத்துவக்குழுவை ஏற்படுத்தி நோயாளிகள் பாதிக்காத வகையில் போராட்டம் முன்னெடுத்து செல்லப்படும். எங்களது போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில கவர்னர், முதல்-அமைச்சர் இடையிலான மோதல் அவர்கள் வகிக்கும் பதவிகளின் மாண்பை சீர்குலைத்து வருகிறது. சட்டமன்ற நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை இருவரும் உருவாக்கியுள்ளனர்.

    அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்களின் தான்தோன்றித்தனமான செயல்களால் மக்களிடத்தில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவரை முடித்து வைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கான நிதிகள் விவாதிக்கப்பட்டபோது கவர்னர் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை முன்வைத்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளிப்பது என்பது நேர்மறையான செயலாகும்.

    கவர்னரின் செயலை பெரிதுபடுத்தாமல் சட்டமன்றத்தை மறுபடியும் கூட்டி இறுதி செய்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் தேவையான நிதி இருந்தும் ஜுலை மாதம் சம்பளத்தை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும். நிதிமசோதா தாமதத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை? என்றும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். நிதி ஒதுக்க மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கும் போது பல்வேறு நிபந்தனைகளை கவர்னர் விதித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்க அனுமதி உள்ளதா? இது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். கவர்னர் தன்னுடைய மாண்புகளை மறந்து அதிகார போதையில் செயல்பட்டு வருகிறார். புதுவை சட்டமன்ற வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கரும்புள்ளி.

    கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார். 31-ந் தேதிக்குள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் மீது தவறு இருந்தால் மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பபெற வேண்டும். இந்த அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் நடந்து வரும் வேலையில் எதிர்கட்சி தலைவரான ரங்கசாமி அமைதியாக இருப்பது சரியல்ல.

    முதுகெலும்பு உள்ள அரசாக இருந்தால் கவர்னர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பலாம். நாங்கள் அதை ஆதரிக்க தயார். மின் மீட்டர் புகார் தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. நான் அங்கு சென்று அவர்களிடம் முகாமை முதலில் தலைமை அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று கூறினேன்.

    வீடு வீடாக சென்று ரீடிங் எடுப்பது போல் மீண்டும் வீடு வீடாக சென்று கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரி முகாமை நிறுத்தியுள்ளேன். மின்துறையின் இந்த செயல் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகும். ஒருசிலரின் லாபத்திற்காக இதுபோன்ற மின் மீட்டரை பொறுத்தியுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×