search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Staff Struggle"

    புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி மேலாண் இயக்குனரை அறையில் பூட்டி ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    தங்களுக்கான மாத சம்பளத்தை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாப்ஸ்கோ ஊழியர் சங்கத்தின் சார்பில் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி இன்று தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் துறையின் மேலாண் இயக்குனர் அறைக்குள் வைத்து பூட்டு போட்டு பூட்டினர். பின்னர், அலுவலக அறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை முதல் கையெழுத்து போட்டு விட்டு வேலை செய்யாமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறினர். #tamilnews
    ×