search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trichy railway employee"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    ரெயில்வே தொழிற்சங்க மான எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. துணைப்பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீர சேகரன் தலைமை தாங்கினார். 

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாற்றியமைக்க வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, ஆர்.ஏ.சி. 1980 முறைப்படி அகவிலைப்படியை உயர்த்தி 1.1.2016 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

    20 ஆண்டுகள் பணி காலத்திற்கு பிறகு ஊதிய உயர்வு வழங்க நிபந்தனை விதிக்க கூடாது, மத்திய அமைச்சரவை குழு உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    ×