என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pondicherry"
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே மழைக்கான அறிகுறியுடன் ரம்மியமான சூழல் காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரையிலும் மழை பெய்யவில்லை.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஆணைக்காரன் சத்திரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சிதம்பரம், சேத்தியாதோப்பு, ராமநாதபுரத்தில் தலா 3 செ.மீ., ராமேசுவரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார் கோவில், மன்னார்குடி, சென்னை விமான நிலையம், சீர்காழி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், நெய்வேலியில் தலா 2 செ.மீ., குடவாசல், வலங்கைமான், வானூர், நன்னிலம், நீடாமங்கலம், நாகை, மயிலாடுதுறை, வந்தவாசி, திருச்செந்தூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம், பாபநாசம், உத்திரமேரூர், ஆலங்குடி, திருவாடானையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. #Rain #TN #Pondicherry
புதுச்சேரி பெரியார்நகர் சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மனைவி வனஜா(50). இவர்களுக்கு வெங்கடேஸ்வரி, ஹேமலதா, தீபாவதி(23) என 3 மகள்கள் உள்ளனர். இதில் வெங்கடேஸ்வரி, ஹேமலதா ஆகிய 2 பேருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
தீபாவதி மாலத்தீவில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் புதுவை திரும்பினார். தற்போது புதுவை மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தனர்.
அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் பாலகிருஷ்ணன் சண்டை போடுவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. இதனை வழக்கமான சண்டை தான் என அருகில் இருந்தவர்கள் கருதினர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலகிருஷ்ணன் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், வீட்டுக்குள் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியதை பார்த்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் அந்த வீட்டின் கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கதவின் பூட்டை உடைந்து உள்ளே சென்று பார்த்ததில் பாலகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பூட்டப்பட்டு கிடந்த மற்றொரு அறையின் கதவின் அடிப்பகுதி வழியாக ரத்தம் வெளியே வந்து உறைந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கதவை திறந்து பார்த்தனர். அங்கு வனஜாவும், தீபாவதியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கட்டையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமானோர் அந்த வீட்டின் முன் கூடினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு காணப்பட்டது.
போலீஸ் விசாரணையில் மகள் தீபாவதிக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதும், இதனால் ஆத்திரமடைந்து மனைவி, மகளை கொலை செய்துவிட்டு பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மனைவி, மகளை கொலை செய்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று காலை முதல் வெயில் அதிகம் இல்லாமல் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 4 மணியளவில் லேசாக சாரலுடன் மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு இந்த மழை நீடித்தது. மாலை 6½ மணியளவில் பலத்த மழை கொட்டியது. சுமார் ½ மணி நேரம் இது நீடித்தது.அதன்பிறகு தூறலாக மாறியது. தொடர்ந்து மேகமூட்டமாகவே இருந்தது. இதனால் நகர் பகுதி குளிர்ச்சியாக காணப்பட்டது.
புறநகர் பகுதியான வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர், அரியாங்குப்பம், பாகூர், காலாப்பட்டு, வானூர் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
4, 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம். நாளை முதல் அநேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rain #TN
வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அரபிக் கடலுக்கு சென்று விட்டது.
அதன் பிறகு தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.
மழை படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம்-புதுவையில் வறண்ட வானிலை நிலவுகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வியட்நாம், தாய்லாந்தையொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு பரவிவருகிறது.
தொடர்ந்து மேற்கு திசை நோக்கி காற்று விசுவதால் அந்தமான் கடல் பகுதியில் 2 நாளில் மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கடற்கரை பகுதி வரை பரவுகிறது.
இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிறது.
சென்னையை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழையானது சராசரி அளவைக் காட்டிலும் 47 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. சென்னையில் இந்த சீசனில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவான 60 செ.மீ.க்கு பதில் 32 செ.மீ. மட்டுமே பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் முடிய இருக்கிறது. இனிவரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இடைவெளிவிட்டு மீண்டும் மழை பெய்யும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தர்மபுரி, கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில நேரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 30.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. நாளை வெப்பம் மேலும் அதிகரித்து 31டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRains
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரளா மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்ல கேரளா போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். இதனால் ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கத்தை விட குறைந்துள்ளது.
சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்தும் 26-ந்தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்தப்படும் என பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், ஐயப்ப சேவா சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டம் உள்நோக்கம் கொண்டது, தேவையற்றது என்றும், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பந்த் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். பந்த் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
முதல்-அமைச்சர் நாராயணசாமியும் புதுவையில் பந்த் போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. கேரளா மாநிலத்தில்தான் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்.
இந்த பந்த் போராட்டத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். மேலும் சட்ட ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று மாலை பெரியார் சிலை அருகில் இருந்து பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஊர்வலம் சென்றனர்.
அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் கொடுத்தபடி நகர பகுதி முழுவதும் சுற்றி வலம் வந்தனர்.
முழு அடைப்பு குறித்து சாமிநாதன் கூறியதாவது:-
இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். போராட்டத்திற்காக வணிகர் சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர், மீனவர்கள், தொழிலாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்தும், கடிதம் மூலமாகவும் ஆதரவு கேட்டுள்ளோம். பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காது. தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்காது. இதற்கு முன் புதுவையில் ஆளும் கட்சி தரப்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தேவையற்ற விஷயங்களுக்குக்கூட பந்த் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது, பெரும்பான்மை மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் போராட்டம். இதனால் பந்த் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaIssue #BJP #Bandh
கஜா புயல் கரையை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று கூறியதாவது:-
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை (18-ந்தேதி) மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. அதன் பிறகு 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்யும். நாளைய தினம் மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.
மீனவர்கள் 18, 19-ந்தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 19, 20-ந்தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார். #Storm #Rain
புதுவை கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கஜா புயல் காரணமாக காரைக்கால் பிராந்தியத்தில் 15-ந் தேதி மாலை முதல் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. பலத்த மழை பெய்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. பாதுகாப்பு கருதி, துண்டிக்கப்பட்ட மின் வினியோகம் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
இன்று இரவுக்குள் மின் வினியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரங்களை அப்புறப்படுத்தும் பணி முடிந்து சாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
காரைக்கால் பகுதியில் 2 கர்ப்பிணி பெண்கள் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குடிநீர் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.
பாதிப்புகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் காரைக்காலில் முகாமிட்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
புதுவை பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை காலை வரை பெய்துள்ளது. இதன் காரணமாக கீழே விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த புயலால் புதுவை பிராந்தியத்தில் 46.00 மி.மீ. காரைக்கால் பிராந்தியத்தில் 54.00 மி.மீ. அளவுக்கும் மழை பெய்துள்ளது. புதுவையில் 2 பேரும், காரைக்காலில் ஒருவரும் காயம் அடைந்துள்ளனர்.
கஜா புயலால் புதுவை மாநிலத்தில் 1,445 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4857 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்களில் 5358 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
முழுமையான பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றன. பாதிப்புகளை சரிசெய்ய புதுவை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaCyclone #Cyclone #Rain
வங்க கடலில் உருவான கஜா புயல் 15-ந்தேதி வட தமிழகத்தில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி வரை பலத்த காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய்த்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது.
புயல் பாதிப்பு பகுதிகளை துல்லியமாக கணித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் கூறியதாவது:-
கஜா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை மற்றும் கடலோர மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், பயிற்சி பெற்ற போலீசார் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள முதல் நிலை மீட்பாளர்கள் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.
மழை பாதிப்பு குறித்து அறிந்து விரைந்து செயல்பட ‘டி.என்.ஸ்மார்ட்’ என்ற புதிய மொபைல் ஆப் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன் 2016-ல் வர்தா புயல் தாக்கிய போது கடலூர் மாவட்டத்தில் அதிகம் சேதம் ஏற்பட்டது. எனவே இந்த முறை கடலூர் மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து மீட்பு படையினர் தயாராக வைக்கப்படுகிறார்கள்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது:-
கஜா புயல் நெருங்கி வருவதையொட்டி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ள சேதத்தை தடுக்க படகுகள் மற்றும் மீட்பு படையினர் 1400 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒன்றியம், நகராட்சிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவர்.
அவர்களுக்கு தேவையான உணவு சமைத்து வழங்க சத்துணவு ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மின்சாரம் தடைப்பட்டால் கூட்டுகுடிநீர் வழங்க ஜெனரேட்டர், டீசல் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் நெருங்கும் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்கள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மரங்கள் விழும் போது அதை அப்புறப்படுத்த எந்திர வாள், பொக்லைன் எந்திரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் முன்எச்சரிக்கை பணிகளை கவனிக்க கடலூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சப்-கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கிராம வளர்ச்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் அந்தந்த கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் சப்-கலெக்டர்கள் மேற்பார்வையிடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் கடல் இன்று அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
ரெட்டியார்குப்பம், அனுமந்தை குப்பம், கீழ்குத்துபட்டு குப்பம், உள்பட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை .
மீன்பிடி படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அத்துடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த மீன்பிடிக்க தடை தொடரும். புயல் குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். #Gaja #Storm #ChennaiRain #RedAlert
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது. இது இலங்கை சூட்டிய பெயர் ஆகும்.
இந்த புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக கடலில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
சென்னை மற்றும் வட தமிழகத்தில் 14-ந்தேதியில் இருந்து மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன் பிறகு உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை வடதமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. #Gaja #Storm #ChennaiRain #RedAlert
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி மீனாகுமாரி (வயது 35). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீனாகுமாரி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதற்கிடையே அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மீனாகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே மீனாகுமாரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் அவரது உடலை ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்