search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passport"

    • கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.
    • நாட்டில் டிசம்பர் 2வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

    நாட்டில் 9.6 கோடி பேரிடமும், தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடமும் பாஸ்போர்ட் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

    கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சிறப்பு முகாமில் கையாளப்பட உள்ளது.
    • இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை :

    பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே, பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் செயல்படுகிறது.

    1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்த 4 பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் கையாளப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டின் கனியம்பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர் மிதுன் பாபு. இவர் சமீபத்தில் தான் வாங்கிய பாஸ்போர்ட்டை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.

    சில தினங்களுக்குப் பிறகு அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்தது. அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்தப் பார்சலில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டு மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார்.
    இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் அமேசான் மூலம் எப்படி வந்தது என்பது தெரியாமல் அவர் குழம்பினார்.

    இதுகுறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டார். அங்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை.

    இதனால் குழம்பிய மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார். அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதை கண்டுபிடித்தார். உடனே அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரம் குறித்து விசாரித்தார். அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரிந்தது.

    விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கிய சலீம், கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புகையில் கவரில் வைத்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்தது தெரிய வந்தது.

    முகமது சலீம் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவரை சோதிக்காத அமேசான் நிறுவனத்தினர் மீண்டும் அந்த பாஸ்போர்ட் கவரை மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக, ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெலிவரி செய்த அமேசான் நிறுவனத்தின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    3 ஆண்டுகளுக்கு பிறகு மு‌ஷரப் துபாயில் இருந்து மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். #PervezMusharraf

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (75). இவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். ஒருவிதமான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    எனவே அவர் பாகிஸ்தான் திரும்பாமல் துபாயிலேயே தங்கியுள்ளார். இதற்கிடையே அவர் மீதான தேசதுரோக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    கடந்த 1-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஆசிப் சயித் கோசா தலைமையிலான பெஞ்ச் மு‌ஷரப்புக்கு எச்சரிக்கை விடுத்தது.

    அவர் கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    எனவே அவர் வருகிற மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார்.

    இந்த தகவலை மு‌ஷரப்பின் வக்கீல் சல்மான் சப்தார் நிருபர்களிடம் தெரிவித்தார். மு‌ஷரப் தனது டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.  #PervezMusharraf

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். #PNBFraud #MehulChoksi #IndianCitizenship
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ்மோடி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. வெளிநாடு தப்பிச்சென்ற அவர்கள் இருவரையும் இந்தியா தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.

    ஆண்டிகுவா நாட்டுக்கு தப்பிச்சென்ற மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர தூதரகம் வழியாகவும், சட்டரீதியாகவும் இந்தியா முயற்சி செய்துவருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்சி கடந்த ஆண்டு ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை பெற்றார். இந்திய குடிமக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறும்போது தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அதன்படி மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.  #PNBFraud #MehulChoksi #IndianCitizenship 
    பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் 12 தபால் நிலையங்களில் விரைவில் புதிய மையங்கள் திறக்கப்படும். விண்ணப்பித்த 6-வது நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார். #Passport
    சென்னை:

    பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே. அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் காவல் துறையின் சரிபார்ப்புக்காக ‘எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ யை கடந்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதற்காக 1,700 ‘கை கணினி’ (டேப்லெட்) வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்ப்பு பணியை காவல்துறை துரிதமாக செய்தது. அதன்பின்னர் தமிழகத்தில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 990 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 63 நாட்கள், திருச்சி புறநகர் 51 நாட்கள், அரியலூர் 48 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு திரும்பி வந்தன.

    பொதுவாக 21 நாட்களுக்கு பிறகு பரிசீலனை செய்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ரூ.50-ம், 21 நாட்களுக்கு முன்பாக பரிசீலனை செய்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு பரிசீலனை கட்டணம் ரூ.150 கட்டணமும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு விரைவான சேவை மூலம் 21 நாட்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் முழு தொகை மாநில அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சராசரியாக விண்ணப்பித்த 6 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் 10 சதவீதம் தமிழகத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் மையம் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.

    இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Passport
    திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #DuraiMurugan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திமுக பொருளாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் பெற்றேன். இந்த பாஸ்போர்ட்டு வருகிற 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

    ஆனால், பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள பக்கங்கள் காலியாகி விட்டதால், புது பாஸ்போர்ட் வழங்க கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டனர்.

    என் மீது ரூ.1.40 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணமும் கூறுகின்றனர். ஆனால், என்னை இந்த வழக்கில் இருந்து கீழ் கோர்ட்டு விடுவித்து விட் டது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டப்படி சரியானது இல்லை. பாஸ்போர்ட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    துரைமுருகன் பாஸ்போர்ட் கேட்டு கொடுக்கும் புதிய விண்ணப்பத்தை 4 வாரத்துக்குள் பரிசீலித்து, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHC #DuraiMurugan
    விசாரணைக்காக பறிமுதல் செய்த பழைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடி கோர்ட்டில் மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார். #Sophia
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா (வயது 28). இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால், சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் மாணவி சார்பில் வக்கீல் அதிசயகுமார் நேற்று காலை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை போலீசார் கடந்த 3-ந் தேதி விசாரணைக்காக எனது பழைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். அதற்கான எந்த அத்தாட்சி சான்றும் தரவில்லை. எனது அமெரிக்க விசா, பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது. ஆகையால் எனது பழைய பாஸ்போர்ட்டை எனக்கு திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    கோர்ட்டில் ஏற்கப்பட்டு உள்ள இந்த மனு வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளதாக வக்கீல் தெரிவித்தார். #Sophia

    லாட்டரி ஊழல் வழக்கில் சிக்கிய கோவையை சேர்ந்த மாட்டினுக்கு தற்காலிக அடிப்படையில் ஓராண்டுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கோவையை சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி அதிபரான இவர், தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பம் செய்தார். ஆனால், அவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மார்ட்டின் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த கோவை போலீஸ் கமி‌ஷனர், ‘மனுதாரர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை அவர் மறைத்துள்ளார்’ என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து இந்த வழக்கில், மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் மத்திய அரசு வக்கீல் என்.ரமேஷ் ஆஜரானார். அவர், ‘கேரளாவில் ரூ.1,400 கோடி லாட்டரி ஊழல் செய்ததாக மார்ட்டின் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கேரளாவில் உள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், இந்த ரூ.1,400 கோடி லாட்டரி ஊழல் தொடர்பாக தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகளின் விவரங்களை மார்ட்டின் தெரிவிக்காமல், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’ என்று கூறினார்.

    இதற்கு மார்ட்டின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். கேரள மாநில அரசு தன் மாநில லாட்டரியை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது.

    அதனால், பூடான் நாட்டு லாட்டரியை விற்பனை செய்ததாக கூறி மார்ட்டினுக்கு எதிராக கேரள மாநில அரசு செயல்பட்டது. ஆனால், மார்ட்டின் தன் மீதான வழக்குகளின் விவரங்களை மறைக்கவில்லை’ என்றார்.

    அப்போது பாஸ்போர்ட் துறை வக்கீல் என்.ரமேஷ், ‘மார்ட்டின் அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ள எர்ணாகுளம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அனுமதிப் பெற்று விண்ணப்பித்தால், தற்காலிக அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்’ என்றார்.

    இதையடுத்து இந்த வழக்கை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று இதுகுறித்து விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி பாஸ்போர்ட் வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
    ஆஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது.
    கோவை:

    தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் ஆஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கூறப்படுகிறது.

    இதை கண்டறிந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால் 22 பேரும் உடனடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் 3 தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

    மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினர் போலியாக தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    தற்போது ஆஸ்திரேலியாவில் தவித்து வரும் மாணவர்கள் விவசாய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாணவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கிய ஏஜென்சிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அசல் சான்றிதழ்களை மாணவர்கள் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு போலி சான்றிதழ்கள் வழங்கியது ஏன்? எவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன? அதில் நடந்த முறைகேடுகள் என்னென்ன? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்-யார்? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.

    குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுவதுண்டு.

    இதையடுத்து பாஸ்போர்ட் சேவையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி தனி கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.

    என்றாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தே பாஸ்போர்ட்டை பெற முடிகிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

    அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின் போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    5 சதவீதம் பேர் ஏஜெண்டு மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். என்றாலும் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர்.

    பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களில் 53 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த வி‌ஷயத்தில் நல்ல அனுபவமே ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
    ஒன் இந்தியா-ஒன் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் எந்தப்பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.
    மதுரை:

    மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் “ஒன் இந்தியா-ஒன் பாஸ்போர்ட்” திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் எந்தப்பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.

    அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்தான் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    உதாரணமாக மதுரையைச் சேர்ந்தவர் பெங்களூரில் பணிபுரிந்தால் அவர் அங்கிருந்தவாறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். போலீஸ் விசாரணை மட்டும் மதுரையில் நடைபெறும். இந்த விசாரணை முடிந்தபிறகு சம்பந்தப்பட்டவரின் பெங்களூர் முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். அதே போன்று பாஸ்போர்ட் விசாரணையும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    கிரிமினல் குற்றவாளிகள் மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை அவசியம் இல்லை.

    செல்போனில் “எம்.பாஸ்போர்ட் சேவா” என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக பாஸ்போர்ட் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நேரம், தேதி ஆகியவற்றை விண்ணப்பதாரர்களே முடிவு செய்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Passport
    ×