search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகனுக்கு பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
    X

    துரைமுருகனுக்கு பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

    திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பாஸ்போர்ட்டு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #DuraiMurugan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், திமுக பொருளாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் பெற்றேன். இந்த பாஸ்போர்ட்டு வருகிற 2023-ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

    ஆனால், பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள பக்கங்கள் காலியாகி விட்டதால், புது பாஸ்போர்ட் வழங்க கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன். ஆனால், எனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்து விட்டனர்.

    என் மீது ரூ.1.40 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணமும் கூறுகின்றனர். ஆனால், என்னை இந்த வழக்கில் இருந்து கீழ் கோர்ட்டு விடுவித்து விட் டது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டப்படி சரியானது இல்லை. பாஸ்போர்ட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    துரைமுருகன் பாஸ்போர்ட் கேட்டு கொடுக்கும் புதிய விண்ணப்பத்தை 4 வாரத்துக்குள் பரிசீலித்து, அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHC #DuraiMurugan
    Next Story
    ×