என் மலர்
செய்திகள்

பாஸ்போர்ட் பெறுவதற்கு 46 சதவீதம் இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் - சர்வேயில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுவதுண்டு.
இதையடுத்து பாஸ்போர்ட் சேவையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி தனி கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.
என்றாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தே பாஸ்போர்ட்டை பெற முடிகிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின் போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
5 சதவீதம் பேர் ஏஜெண்டு மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். என்றாலும் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களில் 53 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த விஷயத்தில் நல்ல அனுபவமே ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுவதுண்டு.
இதையடுத்து பாஸ்போர்ட் சேவையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி தனி கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.
என்றாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தே பாஸ்போர்ட்டை பெற முடிகிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின் போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
5 சதவீதம் பேர் ஏஜெண்டு மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். என்றாலும் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர்.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களில் 53 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த விஷயத்தில் நல்ல அனுபவமே ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
Next Story