search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers"

    • பேராவூரணியில் இரவு ஒரு நிமிடம் நின்று சென்றது.
    • அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வழியாக சென்ற திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, துணைச் செயலாளர் கௌதமன், பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க நிர்வாகிகள் பாரதி நடராஜன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

    திருநெல்வேலியில் இருந்து (வண்டி எண் 06004) தாம்பரத்திற்கு நேற்று மாலை 3.40 மணியளவில் சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்பட்டது.

    இந்த ரயில் பேராவூரணியில் இரவு.9.30மணிக்கு 1 நிமிடம் நின்று சென்றது. இதில் 35 பயணிகள் சென்னைக்கு பயணம் செய்தனர். 23 பயணிகள் முன்பதிவு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது குறித்து வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி ராஜேந்திரன் கூறியதாவது, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலில் பேராவூரணியில் இருந்து 35 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

    எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் சென்னை மற்றும் செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் பேராவூரணியில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என கூறினார்.

    • பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

    இந்த நிலையில் பயணிகளில் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06035) செப்டம்பர் 23-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று அடையும்.

    மறுமார்க்கமாக வேளா ங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06036) செப்டம்பர் 24-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என்று திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது

    • தற்பொழுது இரு மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும்.
    • அந்தியோதயா விரைவு ரெயில், சீர்காழியில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

    கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் ஒரு வழி மார்க்கமாக நின்று சென்று கொண்டிருந்த ஐந்து ரெயில்கள் இரு வழி மார்க்கமாக நின்று செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ராமலிங்கம் எம்.பி,யுடன் நான் திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தோம்.

    இதன் பிரதிபலனாக தற்பொழுது இரு வழி மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும் என ரெயில்வே மேலாளர் ஹரிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் நகலை ரயில் உபயோ கிப்பாளர்கள் சங்கத்தினர் பெற்றுவந்துள்ளனர்.

    இனிவரும் காலங்களில் சீர்காழியில் நிற்காமல் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், சீர்காழியில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் இதற்கு முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன், செயலாளர் மார்க்ஸ் பிரியன், பொருளாளர் முஸ்தபா நந்தகுமார், ரயில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகசண்முகம், தி.மு.க நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் துரை, நவக்கிரக சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
    • பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை உள்ளதா? எனவும் ஆய்வு நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில்களில் தினமும் சராசரியாக 2.5 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இதில் 30 முதல் 35 சதவீதம் பெண் பயணிகள் பயணிக்கின்றனர்.

    அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் பயணிக்கின்றனர்.

    மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி உள்ளது. அதனை மேம்படுத்துவது குறித்து நிர்வாகம் ஒரு களஆய்வை நடத்த திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

    பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு எந்த பகுதியில் தேவை, இன்னும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண்களின் பாதுகாப்பு குறித்து கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஆய்வு தொடங்கப்பட்டது. 30 ஆயிரம் பெண்களிடம் பாதுகாப்பு குறித்து கருத்து கேட்கப்படுகிறது. இதுவரையில் 1,500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கணக்கெடுப்பு அவசியமானது.

    பெண்களுக்கு தனி பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டிகளில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது. ஆண்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கிறார்களா? ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் ராக்கிங், கேலி கிண்டல், துன்புறுத்தல் எதுவும் சந்தித்தீர்களா என்பது குறித்த கேள்வி கேட்கப்படுகிறது.

    பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை உள்ளதா? எனவும் ஆய்வு நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியாளர்கள் எந்தெந்த பகுதிக்கு அதிகப்படுத்த வேண்டும்.

    பாதுகாப்பு குறைவான இடங்கள் எவை? என்பது பற்றி பெண்களிடம் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பயணிகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.
    • பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி என்ற பயனர் டுவிட்டரில், 'ஆர்ஐபி மனிதநேயம், புனே ரெயில் நிலையம்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் நடைமேடையில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.

    இதனால் ஒரு வாலிபர், முதியவர் உள்ளிட்ட பயணிகள் பதறி போய் எழுந்து பார்க்கின்றனர். அப்போது அந்த போலீஸ்காரர் எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் போலீஸ்காரரின் நடவடிக்கையை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர். நடை மேடையை ஆக்கிரமித்து பயணிகள் தூங்கியதால் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என கூறப்பட்டாலும் அவரது நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்தனர். பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது. இதற்கிடையே சம்பவம் தொடர்பாக புனே ரெயில்வே கோட்ட மேலாளர் இந்து துபே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நடை மேடையில் தூங்குவது என்பது நடந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். அதற்காக போலீஸ்காரரின் செயல் சரியானதல்ல. அவரிடம் பயணிகளை மரியாதையுடன் நடத்தும் படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம் என கூறியுள்ளார்.

    • பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது.
    • பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    உடுமலை:

    அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடுமலை கிளை சார்பில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் அரசு பஸ்கள் பராமரிப்பில் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அவை பழுதடைந்து ஆங்காங்கே திடீரென நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் நாள்தோறும் பயனடைந்து வருகின்றோம். ஆனால் உடுமலை கிளையில் அரசு பஸ்கள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் அவை ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் தக்க தருணத்தில் தேவை மற்றும் சேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு அமராவதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கொங்கலக்குறிச்சிக்கு அருகே திடீரென பழுதாகி நின்று விட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் பரிதவித்து போயினர். பின்னர் ஒரு வழியாக நீண்ட நேரத்துக்கு பிறகு மாற்று பஸ் பிடித்து வீடுகளுக்கு சென்றனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அதே போன்று கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் கிராமங்களுக்கு முறையாக இயக்காமல் திடீரென நிறுத்தி விடுகிறார்கள்.

    குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த பின்பு தான் பஸ்கள் கிராமங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி வேண்டுமென்றே தட்டிக் கழித்து வருகின்றனர்.

    இதனால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரெயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள்.
    • அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, இருக்கை வசதி, எதிர்கரையில் மழையின் நனையாமல் பயணிகள் நின்று செல்ல நிழற்குடை வசதி என எதுவும் இல்லை.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை- திருச்செந்தூர் ரெயில் பாதையில் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் மிக முக்கிய ரெயில் நிலையமாகும். இந்த நிலையத்தின் அருகில் 2 பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. கருங்குளம் யூனியன் அலுவலகம், சுமார் 42 கிராம மக்கள் கூடும் பாரம்பரிய மிக்க வாரச்சந்தை, தபால் அலுவலகம், கல்வி நிலையங்கள், கால்நடை மருத்துவமனை உள்பட பல அலுவலகங்கள் உள்ளன.

    செய்துங்கநல்லூரை சுற்றி தென்திருப்பதி என கருதப்படும் கருங்குளம் வெங்கடசலாபதி கோவில், தென்சிதம்பரம் என போற்றப்படும் செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் கோவில், தென் திருவரங்கம் எனப்படும் ரெங்கராஜ பெருமாள் கோவில், தென் சீர்காழி எனப்படும் கொங்கராயகுறிச்சி கோவில், தென் காசி எனப்படும் முறப்பநாடு சிவன் கோவில், நவலிங்கபுரங்களான வல்லநாடு, கொங்கராயகுறிச்சி, தெற்குகாரசேரி சிவன் கோவில்களும் உள்ளன.

    இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தான் செல்ல வேண்டியது உள்ளது.

    மேலும் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் 3 பிளாட்பார்ம் கொண்டது. இதில் 2 பிளாட்பார்ம் உள்ளது. இங்கு ஒரு நாளில் 3 முறை கிராசிங் ரெயில் நின்று செல்கிறது. ஆனால் 2-வது பிளாட் பார்மில் எந்தவொரு வசதியும் இல்லை. ரெயில் புல் முளைத்து கிடக்கிறது. தெருவிளக்கு இல்லை. குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதியும் உள்ளது. எதிர் பக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் சுந்தரபாண்டிய சாஸ்தா கோவிலுக்கு தினமும் பக்தர்களும், மாணவ -மாணவிகளும் வந்து செல்கின்றனர். போதிய வசதி இல்லாத காரணத்தினால் இவர்கள் ரெயிலை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் போக்குவரத்தினை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்த ரெயில் நிலையத்தில் கிராசிங் நேரத்தில் எதிர் பிளாட்பார்ம் போவதற்கு வசதி இல்லை. எனவே ரெயிலை பல சமயங்களில் விட்டு விடும் நிலை உள்ளது. எனவே ஒரு ஓவர் பிரிட்ச் இருந்தால் மக்கள் எறி மறு பிளாட்பார்ம் செல்ல ஏதுவாக இருக்கும்.

    வருங்காலத்தில் தண்டவாளத்தினை உயர்த்த ஏற்பாடு நடைபெற உள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் மிக முக்கிய ரெயில் நிலையமாக மாறி விட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் உள்பட வளர்ந்து வரும் நகரத்தில் இருந்து கூட அவர்கள் நெல்லை சந்திப்பில் ரெயிலில் முன்பதிவு செய்வதை விட, செய்துங்கநல்லூர் சென்று பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இதனால் தினமும் 10 ஆயிரத்துக்கு மேல் வசூல் ஆகிறது. ஆனால் அடுத்த கட்டமாக அடிப்படை வசதி இன்றி ரெயில் நிலையம் உள்ளது. எதிர்பிளாட்பார்மில் அடிக்கடி கிராசிங் ரெயில் நிற்கிறது. ஆனால் அங்கு விளக்கு வசதி, பிளாட்பார்ம் இல்லாமல் முள் முளைத்து கிடக்கிறது. எனவே இரவில் இறங்கி நிற்கும் போது பாம்பு போன்ற விஷசந்துகள் கிடக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அடிப்படை வசதியான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, இருக்கை வசதி, எதிர்கரையில் மழையின் நனையாமல் பயணிகள் நின்று செல்ல நிழற்குடை வசதி என எதுவும் இல்லை. முக்கிய ரெயில் நிலையமாக கருதப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பிளாட்பார்மை கடக்க ஓவர் பிரிட்ஜ் அமைத்து தர வேண்டும். தென்னக ரெயில்வேயில் திருச்செந்தூர் ரெயில் பாதை வசூலில் 10 இடத்துக்குள் உள்ளது. அதுபோலவே செய்துங்கநல்லூர் ெரயில் நிலையமும் வசூலில் முன்னணி வகித்து வருகிறது. ஆனால் ஆன்மிகத்தலங்கள் இந்த நிலையத்தினை சுற்றி இருந்தும் கூட, ஆன்மிகத்திற்காக திருச்செந்தூர் - பழனியை இணைக்க உருவாக்கப்பட்ட பாலக்காடு ரெயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்வது இல்லை. எனவே அடிப்படை வசதியை செய்து, பாலக்காடு ரெயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    தற்போது ஒலிபெருக்கி மூலம் ரெயில் வரும் நேரத்தினை அறிவிக்கும் வசதி, மின்சார ரெயிலுக்காக செய்துங்கநல்லூரில் துணை மின் நிலையம் என பல்வேறு வசதி இருந்தும் கூட பாலக்காடு ரெயில் நிற்காமல் செல்வதும், அடிப்படை வசதி இல்லாமல் இருப்பது இந்த பகுதி பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாலக்காடு ரெயிலை இந்த கிராசிங் ரெயில் நிலையத்தில் நிறுத்தி, அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலெக்டர் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

    திருச்செந்தூர் -பழனி ரெயில் ஆரம்ப காலத்தில் செய்துங்கநல்லூரில் நின்று தான் சென்றது. அதன் பிறகு கொரோனா காலத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா காலத்திற்கு பிறகு அனைத்து ரெயிலும் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் நின்று சென்றது.

    இதற்கிடையில் பழனி ரெயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது செய்துங்கநல்லூரில் இந்த ரெயில் நிற்கவில்லை. எனவேசெய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர்பார்வதி நாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. செய்துங்கநல்லூர் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு காலகட்டத்தில் இந்த போராட்டம் முற்றுகை போராட்டமாக உருவெடுத்தது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்களை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்ய திட்டமிட்டனர்.

    அப்போது பொதுமக்களுக்கும், போலீசுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், வியாபாரிகள் சங்கத்தினர், முஸ்லீம் அமைப்புகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட கலெக்டர் தலையீட்டு செய்துங்கநல்லூரில் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கான முயற்சியும் எடுத்தார். ஆனால் தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் தொடர்ந்து செய்துங்கநல்லூர் மக்கள் ரெயில்வே நிர்வாகத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதல், தங்களுடைய போனில் ஸ்டேட்ஸ் வைத்தல் என போராட்டம் நடத்தினர்.

    இந்த வேளையில் மீண்டும் மதுரை ரெயில்வே மேலாளருக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் செய்துங்கநல்லூரில் மக்கள் நலன் கருதி ரெயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த வாரம் இந்த கடிதம் மதுரை தென்னக ரெயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே விரைவில் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரெயில் நின்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    • இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு, 

    ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் பயணி–களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், சுரேந்திரகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை சாலை போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த–தாக 5 ஆட்டோக்கள், உரிமம், தகுதி சான்று, காப்புரிமை சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்கள் என 8 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுபோல ஷேர் ஆட்டோக்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்தது, சீருடை இன்றி வாகனத்தை ஓட்டியது போன்ற காரணத்துக்காக, 7 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்ப–ட்டதாக வடடார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது.
    • கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் அவதி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    வேகத்தடை

    பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் அருகே பஸ் வந்த போது சாலையின் நடுவே இருந்த வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது.

    அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வழியே பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் ஆலங்குளம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று பஸ்கள் இல்லாததால் வெகு நேரம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தின் முன்பு காத்திருந்தனர்.

    இதில் பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் மிகவும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். இது குறித்து தென்காசி பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1½மணி நேரத்திற்கு பின்னர் வந்த மாற்று பஸ் ஆனது பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை நோக்கி சென்றது.

    சமீப காலமாக அரசு பஸ்களில் ஏற்படும் பழுதுகளை முறையாக சரிசெய்யாமலும், பராமரிப்பு பணியை மேற்கொள்ளாமலும் சம்பந்தப்பட்ட பணிமனை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நெல்லை- தென்காசி இடையே இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருவதாகவும் மழை காலங்களில் பஸ் முழுவதும் தண்ணீர் ஒழுகுவதால் குடையுடனையே பயணிகள் பயணம் செய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    • ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
    • பெட்டிகள் நிற்கும் இடத்தை அடையாளம் காணும் வகையில் உள்ள டிஜிட்டல் போர்டு வசதி ஏற்படுத்தவில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ராம நாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படு கின்றன.

    ஆனால் இங்கு பெட்டிகள் நிற்கும் இடத்தை அடையாளம் காணும் வகையில் உள்ள டிஜிட்டல் போர்டு வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் பயணிகள் ரெயில் வந்து நிற்கும் நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளை கண்டுபிடிக்க பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    பயணிகள் சுலபமாக தங்களுக்கான பெட்டியில் ஏறும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை வசதியை ஏற்படுத்தி தர ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். பொதுமக்கள் பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கி ன்றனர். குறிப்பாக வயதான வர்கள், பெண்கள் பய ணிக்க ரெயில் பயணமே சிறந்ததாக உள்ளது. ரெயில் பயணத்தில் டிக்கெட் கட்டணமும் குறைவாக இருப்பதால் நடுத்தர மக்கள் பெரிதும் பயன் படுத்தி வருகின்றனர்.

    குடும்பத்துடன் வெளியூர் சென்று வரலாம் என நினைத்து வருபவர்களுக்கு ரெயில் நிலையங்களில் பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் பதட்டத்துடன் இருக்க வேண்டி உள்ளது. முதியோர்கள் பெட்டி நிற்கும் இடத்தை சரியாக அடையாளம் காண முடியவில்லை. எனவே பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட பெட்டி இங்கு தான் நிற்கும் என்பதை தெளிவாக காட்டும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவ ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

    எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

     பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
    மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம் செய்ததால் ரூ. 25 ஆயிரத்து 751 கட்டணம் வசூல் ஆனது
    மதுரை

    மதுரை- தேனி இடையே முதன்முதலாக முன்பதிவற்ற பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.  மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்று பயணம் செய்தனர். இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு கிடைத்த கட்டண வசூல் ரூ.14ஆயிரத்து 940 ஆகும்.

    அடுத்தபடியாக வடபழஞ்சியில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.1,590 கிடைத்துள்ளது. 
     
    இேதபோல் உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள், ரூ.3,270 கட்டணம் செலுத்தி பயணம் செய்து உள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூ. 1,950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். 

    எனவே மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற முன்பதிவற்ற பயணிகள்ரெயிலில் மொத்தம் 574 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.21,750 கிடைத்துள்ளது.

    இதேபோல் தேனியில் இருந்து மதுரைக்கு வந்த ரெயிலில் 377 பேர் பயணம் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து 213 பயணிகள் பயணம் செய்ததன் மூலம் ரூ.7,476, கிடைத்துள்ளது. உசிலம்பட்டியில் இருந்து 44 பயணிகள் மூலம் ரூ.1,320 கிடைத்து உள்ளது. 

    மதுரை- தேனி இடையேயான பயணிகள் ரெயிலில் நேற்று மட்டும் ஓட்டுமொத்தமாக 634 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் 
    ரூ. 25,751 கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

    ×