என் மலர்
நீங்கள் தேடியது "tag 114915"
நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும். நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும் பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது 2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.
எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.
பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.
இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
மதுரையில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. #Summer
மதுரை:
தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.
புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.
மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.
வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.
புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.
மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.
வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். #DeltaDistricts #Fog
திருச்சி:
தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சியளித்தது.
இதற்கிடையே மாலை நேரம் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. நள்ளிரவில் கடுமையாக பனி தாக்கியது. மேலும் இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.
மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர்.
இந்த மூடு பனி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் காணப்பட்டது. #DeltaDistricts #Fog
தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.
கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சியளித்தது.
இதற்கிடையே மாலை நேரம் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. நள்ளிரவில் கடுமையாக பனி தாக்கியது. மேலும் இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.
மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர்.
இந்த மூடு பனி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் காணப்பட்டது. #DeltaDistricts #Fog
ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஊட்டி:
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டியில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைசீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2-வது சீசன் அக்டோபர், நவம்பர் மாதங்களாகும். இதுபோன்ற சீசன் காலத்தை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் வருகிறார்கள். ஆனால் அந்த வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஊட்டியில் அதிகளவில் ஆட்டோக்கள் இயங்குவதால், பல இடங்களில் ஆட்டோ நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி நகரில் குதிரை, பசு, எருமை, ஆடு போன்ற கால்நடைகள் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, புளுமவுண்டன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும் போதும், சாலையோரத்தில் ஊட்டியின் சீதோஷ்ண காலநிலையை ரசித்தபடி நடைபாதையில் நடந்து செல்லும் போதும் கால்நடைகள் வேகமாக துரத்தி வந்து தாக்குகிறது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை உண்பதற்காக, சிலர் தங்களது கால்நடைகளை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். குதிரைகள் சாலைகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பயந்து ஓடும் போது வாகனங்கள், தடுப்பு கம்பிகளில் எதிர்பாராதவிதமாக மோதி சாலையோரத்தில் உள்ள குழிகளில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இரவில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு ஓடி வந்தது. இதனை கண்டு பயந்து ஒரு பெண் பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அதேபோல் தலைகுந்தா பகுதியில் குதிரை திடீரென ஓடி வந்ததில், மினி பஸ் டிரைவர் காயம் அடைந்தார். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முதியவரை தாக்கியதால், காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே கால்நடைகள் திடீரென செல்வதால், சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.
கடந்த வாரம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சுப்ரியா என்ற சுற்றுலா பயணி தனது குடும்பத்தினருடன் ஊட்டி சேரிங்கிராசில் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மிரண்டு ஓடி வந்த தோடர் வளர்ப்பு எருமைகளில் ஒன்று சுப்ரியாவை முட்டி தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் ஊட்டியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் ஊட்டியை சுற்றி பார்க்க வருபவர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு ஆஸ்பத்திரிக்கும், சொந்த ஊர்களுக்கும் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அப்போதைய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை கண்டறிந்து, அவைகளுக்கு உரிமம் பெறவும், சாலைகளில் கால் நடை கள் சுற்றித்திரியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், இந்த திட்டம் அதிகாரிகள் இடமாறி சென்றதால் செயல்படுத்தாமல் கைவிடப்பட்டு உள்ளது. தற்போது கால்நடைகள் ஊட்டி நகரில் சுற்றித்திரிவதால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டி நகர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. ஊட்டியில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைசீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 2-வது சீசன் அக்டோபர், நவம்பர் மாதங்களாகும். இதுபோன்ற சீசன் காலத்தை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் வருகிறார்கள். ஆனால் அந்த வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஊட்டியில் அதிகளவில் ஆட்டோக்கள் இயங்குவதால், பல இடங்களில் ஆட்டோ நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி நகரில் குதிரை, பசு, எருமை, ஆடு போன்ற கால்நடைகள் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலை, புளுமவுண்டன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் செல்லும் போதும், சாலையோரத்தில் ஊட்டியின் சீதோஷ்ண காலநிலையை ரசித்தபடி நடைபாதையில் நடந்து செல்லும் போதும் கால்நடைகள் வேகமாக துரத்தி வந்து தாக்குகிறது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை உண்பதற்காக, சிலர் தங்களது கால்நடைகளை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். குதிரைகள் சாலைகளில் தாறுமாறாக ஓடி சுற்றுலா பயணிகளை உதைப்பதும், கடிப்பதும் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் பயந்து ஓடும் போது வாகனங்கள், தடுப்பு கம்பிகளில் எதிர்பாராதவிதமாக மோதி சாலையோரத்தில் உள்ள குழிகளில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இரவில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டு ஓடி வந்தது. இதனை கண்டு பயந்து ஒரு பெண் பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவர் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அதேபோல் தலைகுந்தா பகுதியில் குதிரை திடீரென ஓடி வந்ததில், மினி பஸ் டிரைவர் காயம் அடைந்தார். ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முதியவரை தாக்கியதால், காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே கால்நடைகள் திடீரென செல்வதால், சிலர் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.
கடந்த வாரம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சுப்ரியா என்ற சுற்றுலா பயணி தனது குடும்பத்தினருடன் ஊட்டி சேரிங்கிராசில் சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மிரண்டு ஓடி வந்த தோடர் வளர்ப்பு எருமைகளில் ஒன்று சுப்ரியாவை முட்டி தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் ஊட்டியில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் ஊட்டியை சுற்றி பார்க்க வருபவர்கள் தங்களது திட்டத்தை கைவிட்டு ஆஸ்பத்திரிக்கும், சொந்த ஊர்களுக்கும் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அப்போதைய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை கண்டறிந்து, அவைகளுக்கு உரிமம் பெறவும், சாலைகளில் கால் நடை கள் சுற்றித்திரியாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், இந்த திட்டம் அதிகாரிகள் இடமாறி சென்றதால் செயல்படுத்தாமல் கைவிடப்பட்டு உள்ளது. தற்போது கால்நடைகள் ஊட்டி நகரில் சுற்றித்திரிவதால் பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டி நகர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






