search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai district"

    • மதுரை மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா இன்று பொறுப்பேற்றார்.
    • தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர்.

    மதுரை

    தமிழக அரசு அண்மை யில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட கலெக்ட ராக இருந்த அனீஷ் சேகர் இடமாற்றம் செய்யப்பட்டு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

    வணிக வரித்துறை இணை கமிஷனராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டார். அவர் இன்று மதுரை கலெக்டர் அலுவல கத்தில் கோப்பில் கையெ ழுத்திட்டு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண் டார்.

    தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம் பட்டியை சேர்ந்த சங்கீதா, தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று, 2016 -ம் ஆண்டு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றார். அதன்பின் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

    மதுரை மாவட்ட கலெக்டராக சந்திரலேகா 1984-85-ம் ஆண்டிலும், கிரிஜா வைத்தியநாதன் 1991-92-ம் ஆண்டிலும் பணிபுரிந்துள்ளனர். தற்போது மாவட்டத்தின் 3-வது பெண் கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. -மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரை

    மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் அவர்கள் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

    எனவே மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது.

    அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரையில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. #Summer
    மதுரை:

    தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

    அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.

    புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.

    மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.

    வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
     
    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுரை மாவட்டத்தில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. #JactoGeo #Strike
    மதுரை:

    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு எச்சரித்தும் இன்றும் அவர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 2 ஆயிரத்து 279 உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் மட்டும் 11 ஆயிரத்து 756 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 855 அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது வேலைநிறுத்தம் காரணமாக இதில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. ஆசிரிய-ஆசிரியைகள் வராததால் மாணவ-மாணவிகளின் வருகையும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மேலும் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிகிறது.   #JactoGeo #Strike
    அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #JallikattuOrder
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.

    அவ்வகையில் அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி 15-ம் தேதி மதுரை - அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். #JallikattuOrder
    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது.

    இதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கொட்டும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

    நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. சாலைகளின் பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பஸ் நிலையங்கள் அருகே சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில் நிலையம் முன்பும், அதன் அருகில் உள்ள மேலவெளி வீதி சாலையிலும் தண்ணீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.

    போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இது போல் மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    தத்தனேரி மற்றும் மணிநகரம் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கியது. அதே போன்று திருப்பரங்குன்றம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியது.

    மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றினர். ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன.

    மதுரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிட்டம்பட்டி-57 மி.மீ.

    கள்ளந்திரி-95 மி.மீ.

    தனியாமங்கலம்-69 மி.மீ.

    மேலூர்-53 மி.மீ.

    சாத்தையாறு-57 மி.மீ.

    வாடிப்பட்டி-35 மி.மீ.

    திருமங்கலம்-35 மி.மீ.

    உசிலம்பட்டி-7 மி.மீ.

    மதுரை தெற்கு-19 மி.மீ.

    தல்லாகுளம்-56 மி.மீ.

    விரகனூர்-15 மி.மீ.

    விமான நிலையம்-15 மி.மீ.

    இடையபட்டி-12 மி.மீ.

    புலிப்பட்டி-44 மி.மீ.

    சோழவந்தான்-36 மி.மீ.

    மேட்டுப்பட்டி-42 மி.மீ.

    குப்பனம்பட்டி-6 மி.மீ.

    கள்ளிக்குடி-9 மி.மீ.

    பேரையூர்-4 மி.மீ.

    டி.ஆண்டிப்பட்டி-33 மி.மீ.

    மதுரை மாவட்டத்தில் 694 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 35 மில்லி மீட்டர் சராசரி ஆகும்.

    ×