என் மலர்
நீங்கள் தேடியது "tag 219768"
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வ ரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில குழு உறுப்பினர் பொண்ணுத்தாய் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட முடுவார்பட்டி ஊராட்சியில் வடக்கு பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும், தினசரி பழ மார்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் நியமனம், குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும். பழுதடைந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் பிச்சை நன்றி கூறினார்.
நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும். நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும் பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது 2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.
எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.
பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.
இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
சேலம் வழியாக செல்லும் 8 ரெயில்களில் கூடுதலாக 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டன.
சேலம்:
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம்
ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.
அந்த வகையில் சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியாக செல்லும் கீழ்கண்ட 8 ரெயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22638) நேற்று முதலும், சென்னை சென்ட்ரல் -மங்களூர் சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22637) நாளை மறுதினம் முதலும், சென்னை சென்ட்ரல்-மங்களூர் சென்ட்ரல் ரெயிலில் (12601) இன்று முதலும், மங்களூர் சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரெயிலில் (12602) நாளை முதலும், திருவனந்தபுரம்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22641) இன்று முதலும், ஷாலிமர்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22642) வருகிற 5-ந் தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16317) நாளை முதலும், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோத்ரா - கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16318) வருகிற 6- ந் தேதி முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் ‘பயோ- கழிப்பறை’ (தண்ணீர் அதிகம் தேவை இல்லை) வசதி கொண்டு வரப்படும் என்று ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.
சென்னை:
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை சார்பில் சர்வதேச ரெயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழா சென்னை ஐ.சி.எப்.-ல் உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதன்சு மணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் ஆர்.தினேஷ், ரெயில் போக்குவரத்து தலைவர் சி.பி.சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கண்காட்சி குறித்த புத்தகத்தையும், ஐ.சி.எப்-ல் புதிதாக தயாரிக்கப்படும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
1955-ம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை, ரெயில் பெட்டி தயாரிப்பில் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் காலங்களில் பல வளர்ச்சி திட்டங்கள் ரெயில்வே துறையில் கையாளப்பட இருக்கின்றன. அந்தவகையில் 2022-ம் ஆண்டில் ஆமதாபாத்-மும்பை இடையே அதிவேக ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இரட்டை ரெயில் பாதைகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட இருக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ எனும் நவீன விரைவு திட்டம் ரெயில்வேயில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரெயில் சேவை இன்னும் வளர்ச்சி அடையும்.
வருகிற 2022-ம் ஆண்டு 130 மெகாவாட் காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் திறனில் இயங்கும் ‘அதி நவீன சோலார் ரெயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக ரெயில்வே துறை சாத்தியமாகி வருகிறது. வரும் ஆண்டுகளில் அந்த விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி அரங்கை ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவத்தை தரக்கூடிய நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் கவனத்துடன் கையாளுகிறது. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளன. அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த கண்காட்சி அமைந்திருக்கிறது. உலகளவில் திறமையான வல்லுனர்கள் ஏராளமானோர், தங்கள் படைப்புகளை இங்கே காட்சிப்படுத்தி உள்ளனர். எனவே நவீன யுக்திகளை கையாண்டு ஒரு ‘மாடர்ன் ரெயில்வே’ திட்டத்தை விரைவில் ஏற்படுத்துவோம்.
சென்னை மெட்ரோ ரெயில் பெட்டிகளை ஐ.சி.எப். இதுவரை தயாரித்தது இல்லை. ஆனாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்காக உலகின் 9 முன்னணி நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வகையில் அதிநவீன சென்சார் உள்ளடங்கிய புதிய தொழில்நுட்ப வசதி கையாளப்பட்டு வருகிறது. இதற்கான சோதனைகள் செகந்திராபாத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டில் ரெயில்வே புதிய அத்தியாயம் படைக்கும்.
ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் திட்ட அளவீடு சார்ந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் 14 பெட்டிகளுக்கான திட்ட விவர அறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதி காலக்கெடுவை தற்போது கணக்கிட முடியாது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலும் எல்.எச்.பி. ரக பெட்டிகள் என்பது சிறப்பம்சமாகும். வருங்காலங்களில் தேவைக்கேற்ப இது அதிகப்படுத்தப்படும்.
பயோ கழிப்பறை வசதி பயணிகளிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதுடன், சுற்றுச்சூழல் சார் அக்கறையிலும் தனித்துவம் பெறுகிறது. அந்தவகையில் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் பயோ கழிப்பறை வசதி பொருத்தப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை சார்பில் சர்வதேச ரெயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழா சென்னை ஐ.சி.எப்.-ல் உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதன்சு மணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் ஆர்.தினேஷ், ரெயில் போக்குவரத்து தலைவர் சி.பி.சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சர்வதேச ரெயில் தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஐ.சி.எப். தயாரிக்கும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.
கண்காட்சி குறித்த புத்தகத்தையும், ஐ.சி.எப்-ல் புதிதாக தயாரிக்கப்படும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
1955-ம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை, ரெயில் பெட்டி தயாரிப்பில் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் காலங்களில் பல வளர்ச்சி திட்டங்கள் ரெயில்வே துறையில் கையாளப்பட இருக்கின்றன. அந்தவகையில் 2022-ம் ஆண்டில் ஆமதாபாத்-மும்பை இடையே அதிவேக ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இரட்டை ரெயில் பாதைகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட இருக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ எனும் நவீன விரைவு திட்டம் ரெயில்வேயில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரெயில் சேவை இன்னும் வளர்ச்சி அடையும்.
வருகிற 2022-ம் ஆண்டு 130 மெகாவாட் காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் திறனில் இயங்கும் ‘அதி நவீன சோலார் ரெயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக ரெயில்வே துறை சாத்தியமாகி வருகிறது. வரும் ஆண்டுகளில் அந்த விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி அரங்கை ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவத்தை தரக்கூடிய நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் கவனத்துடன் கையாளுகிறது. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளன. அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த கண்காட்சி அமைந்திருக்கிறது. உலகளவில் திறமையான வல்லுனர்கள் ஏராளமானோர், தங்கள் படைப்புகளை இங்கே காட்சிப்படுத்தி உள்ளனர். எனவே நவீன யுக்திகளை கையாண்டு ஒரு ‘மாடர்ன் ரெயில்வே’ திட்டத்தை விரைவில் ஏற்படுத்துவோம்.
சென்னை மெட்ரோ ரெயில் பெட்டிகளை ஐ.சி.எப். இதுவரை தயாரித்தது இல்லை. ஆனாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்காக உலகின் 9 முன்னணி நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வகையில் அதிநவீன சென்சார் உள்ளடங்கிய புதிய தொழில்நுட்ப வசதி கையாளப்பட்டு வருகிறது. இதற்கான சோதனைகள் செகந்திராபாத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டில் ரெயில்வே புதிய அத்தியாயம் படைக்கும்.
ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் திட்ட அளவீடு சார்ந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் 14 பெட்டிகளுக்கான திட்ட விவர அறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதி காலக்கெடுவை தற்போது கணக்கிட முடியாது.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலும் எல்.எச்.பி. ரக பெட்டிகள் என்பது சிறப்பம்சமாகும். வருங்காலங்களில் தேவைக்கேற்ப இது அதிகப்படுத்தப்படும்.
பயோ கழிப்பறை வசதி பயணிகளிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதுடன், சுற்றுச்சூழல் சார் அக்கறையிலும் தனித்துவம் பெறுகிறது. அந்தவகையில் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் பயோ கழிப்பறை வசதி பொருத்தப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






