search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bio toilet"

    • இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது
    • கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் நலமுடன் வாழ வேண்டி நடப்போம் நலம் பெறுவோம் என்பதனை வலியுறுத்தி 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி கடலூரில் டவுன் ஹாலில் இருந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று மீண்டும் டவுன் ஹாலில் வந்த முடிவடைவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது . வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் நடந்து சென்றனர்.

    நடந்து செல்லும் பொதுமக்கள் அமர்வதற்கு சிமெண்ட் நாற்காலிகள், குடிநீர், பயோ கழிவறை, தற்காலிக நிழற்குடை போன்றவற்றை அமைத்திரு ந்தனர். மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நடந்து செல்பவர்களுக்கு உற்சாகப்படுத்தும் நோக்கில் கலை நிகழ்ச்சிகளும் நடனமும் நடைபெற்றது. பொதுமக்கள் சில்வர் கடற்கரையில் இருந்து மிகுந்த ஆசுவாசமாக குளிர்ந்த காற்றில் பொதுமக்கள் ரம்மியமான காட்சிகளை பார்த்தப்படி ஒருவரு க்கொருவர் ஆனந்தமாக பேசிக்கொண்டு சென்றதன் மூலம் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வோடு சென்றனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மாநகர திமுக செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி அகஸ்டின் பிரபாகரன், ஹேமலதா சுந்தரமூர்த்தி, ஆராமுது, சசிகலா ஜெயசீலன், சுதா அரங்கநாதன், பாலசுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் போலீசாருக்கு நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டுள்ளது. #Biotoilet
    கோவை:

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார் ரோட்டின் நடுவே காலை முதல் இரவு வரை பணியாற்ற வேண்டும்.

    அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண் போலீசார் அதிகமாக சிரமப்படுகிறார்கள்.

    இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க கோவையில் போக்குவரத்து போலீசாருக்கு ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. அவினாசி சாலையில் அரசு மருத்துவ கல்லூரி சிக்னலில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் போலீசாருக்கு நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டுள்ளது. டைடல் பார்க்கில் உள்ள சில நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதை வடிவமைத்து தந்துள்ளனர். இதன் மொத்த செலவு ரூ.1.25 லட்சம் ஆகும்.

    வாகன புகையில் இருந்து போலீசார் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் கண்ணாடி அறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி அறையில் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடலாம். இரவு நேரங்களிலும் லைட் உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இதே போன்று நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #Biotoilet
    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் ‘பயோ- கழிப்பறை’ (தண்ணீர் அதிகம் தேவை இல்லை) வசதி கொண்டு வரப்படும் என்று ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.
    சென்னை:

    இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை சார்பில் சர்வதேச ரெயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழா சென்னை ஐ.சி.எப்.-ல் உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

    விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதன்சு மணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் ஆர்.தினேஷ், ரெயில் போக்குவரத்து தலைவர் சி.பி.சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    சர்வதேச ரெயில் தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஐ.சி.எப். தயாரிக்கும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார்.

    கண்காட்சி குறித்த புத்தகத்தையும், ஐ.சி.எப்-ல் புதிதாக தயாரிக்கப்படும் நவீன ரெயில் பெட்டிகள் குறித்த கையேட்டினையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    1955-ம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை, ரெயில் பெட்டி தயாரிப்பில் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் காலங்களில் பல வளர்ச்சி திட்டங்கள் ரெயில்வே துறையில் கையாளப்பட இருக்கின்றன. அந்தவகையில் 2022-ம் ஆண்டில் ஆமதாபாத்-மும்பை இடையே அதிவேக ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

    இரட்டை ரெயில் பாதைகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட இருக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ எனும் நவீன விரைவு திட்டம் ரெயில்வேயில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரெயில் சேவை இன்னும் வளர்ச்சி அடையும்.

    வருகிற 2022-ம் ஆண்டு 130 மெகாவாட் காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் திறனில் இயங்கும் ‘அதி நவீன சோலார் ரெயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக ரெயில்வே துறை சாத்தியமாகி வருகிறது. வரும் ஆண்டுகளில் அந்த விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கண்காட்சி அரங்கை ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரெயில் பயணத்தின்போது பயணிகளுக்கு ஒரு புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவத்தை தரக்கூடிய நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் கவனத்துடன் கையாளுகிறது. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளன. அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த கண்காட்சி அமைந்திருக்கிறது. உலகளவில் திறமையான வல்லுனர்கள் ஏராளமானோர், தங்கள் படைப்புகளை இங்கே காட்சிப்படுத்தி உள்ளனர். எனவே நவீன யுக்திகளை கையாண்டு ஒரு ‘மாடர்ன் ரெயில்வே’ திட்டத்தை விரைவில் ஏற்படுத்துவோம்.

    சென்னை மெட்ரோ ரெயில் பெட்டிகளை ஐ.சி.எப். இதுவரை தயாரித்தது இல்லை. ஆனாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதற்காக உலகின் 9 முன்னணி நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் இருக்கும் வகையில் அதிநவீன சென்சார் உள்ளடங்கிய புதிய தொழில்நுட்ப வசதி கையாளப்பட்டு வருகிறது. இதற்கான சோதனைகள் செகந்திராபாத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் தொழில்துறை மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டில் ரெயில்வே புதிய அத்தியாயம் படைக்கும்.

    ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் திட்ட அளவீடு சார்ந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் 14 பெட்டிகளுக்கான திட்ட விவர அறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதி காலக்கெடுவை தற்போது கணக்கிட முடியாது.

    கடந்த நிதி ஆண்டில் மட்டும் 3 ஆயிரத்து 500 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலும் எல்.எச்.பி. ரக பெட்டிகள் என்பது சிறப்பம்சமாகும். வருங்காலங்களில் தேவைக்கேற்ப இது அதிகப்படுத்தப்படும்.

    பயோ கழிப்பறை வசதி பயணிகளிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதுடன், சுற்றுச்சூழல் சார் அக்கறையிலும் தனித்துவம் பெறுகிறது. அந்தவகையில் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும் பயோ கழிப்பறை வசதி பொருத்தப்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×