search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
    X

    வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு

    • பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

    இந்த நிலையில் பயணிகளில் வரவேற்பை தொடர்ந்து ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06035) செப்டம்பர் 23-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் எர்ணா குளத்தில் இருந்து பிற்பகல் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று அடையும்.

    மறுமார்க்கமாக வேளா ங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06036) செப்டம்பர் 24-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என்று திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது

    Next Story
    ×