search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat"

    • ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் வசதி வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
    • பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சாயல்குடி

    கடலாடி ஒன்றியம் ஒப்பிலான் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அப்துல் ஹக்கீம். இவர் தனது மக்கள் பணி குறித்து கூறியதாவது:-

    மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், இந்தப்பகுதி மாவட்ட கவுன்சிலருமான வேலுச்சாமியின் நிதியில் இருந்து ஒப்பிலான் ஒத்தவீடு வரை சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. அழக்குடி கிராமத்திற்கு தார்ச்சாலை, ஒப்பிலான் கிராமத்தில் இருந்து அழக்குடி மற்றும் ஒப்பிலான் ஒத்த வீடு வரை பைப் லைன் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தில் வாலிநோக்கம் சாலை முதல் ஒப்பிலான் தபால் நிலையம் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வாலிநோக்கம் சாலையில் இருந்து ஒப்பிலான் ரசூல் தெரு வரை சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. ஒப்பிலான் கிராமம் முழுவ தும் பைப் லைன் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பிலான் பள்ளிவாசல் முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    ஒப்பிலான் கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவ தற்கு 700 மரக்கன்றுகள் நட்டு மினி பாரஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நான் எனது சொந்த நிதியில் ஒப்பிலான் கிராமத்தில் பழுதடைந்து இருந்த மின் கம்பங்களை மாற்றி 24 புதிய மின் கம்பங்கள் அமைத்து பொது மக்களுக்கு மின்சார பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கி தந்துள்ளேன்.

    மேலும் ஒப்பிலான் ஊராட்சிக்கு கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி தரும் பட்சத்தில் கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்வேன்.

    ஒப்பிலான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இது வரை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படவில்லை. ஆகையால் கடுகு சந்தை கிராமத்தில் இருந்து ஒப்பிலான்- வாலிநோக்கம் சாலை வழியாக புதியதாக பைப் லைன் அமைத்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஒப்பி லான் ஊராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒப்பிலான் ஊராட்சி முழுவதும் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை, ஒப்பிலான் கிரா மத்தில் புதியதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும். அரசு இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பிலான் மற்றும் ஒத்த வீடு கிராமங்களில் இடியும் நிலையல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றி விட்டு ஒப்பிலான் கிராமத்திற்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஒத்த வீடு கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒப்பிலான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும். வாலிநோக்கம்-ஒப்பிலான் சாலையில் இருந்து ஒப்பிலான் கடற்கரை செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டும்.

    ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒத்தப்பனை மாடசாமி கோவில் செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். பிள்ளையார்கோவில் பகுதியில் இருந்து ஒப்பிலான் கண்மாய் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செம்பனூர் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட செம்பனூர் ஊராட்சியில் உள்ள நாச்சியப்பன் செட்டியார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கினார். இதையடுத்த அந்த இடத்தில் 2020-21-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதி திட்டத்தின்படி ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ 7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதனை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பிரவீனா, கல்லல் ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செம்பனூர் அரசு பள்ளியில்12, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

    • மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
    • கைது செய்த 8 பேரை போலீசார் விடுவித்தனர்.

    சீர்காழி:

    மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கடந்த வாரம் புத்தூரில் சாலைமறியல் போரா ட்டத்தில் ஈடுப்பட்டபோது 9 ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் கைது செய்து,

    அன்று மாலை 8பேரை விடுவித்தனர்.

    இதனிடையே ஊராட்சி தலைவர் நேதாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் புளிய ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மீது போட ப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு சாமுவே ல்ராஜ் கண்டன உரையாற்றினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் தொண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது  கூட்டத்திற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னையா, ஒன்றியகவுன்சிலர்கள் கோமதி பிரபாகரன், இந்து மதி வெற்றிவேல், மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் அமிர்தம் அரி கிருஷ்ணன் அனை வரை யும் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தொடக்க உரை யாற்றினார். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செய லாளரும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான்கலந்து கொண்டு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், அவைத்தலைவர் ஏழுமலை, பொருளாளர்பெருமாள், துணை செயலாளர்கள் ராஜலிங்கம், மணிமேகலை ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள்துரை திரு நாவுக்கரசு, ரவிச்சந்திரன், முன்னாள் பொருளாளர் தமிழரசன், பிரபாகரன், நீர் பெருத்தகரம் கோபால கிருஷ்ணன் மற்றும்ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப் பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஒன்றிய துணை செய லாளர் ஞானமூர்த்தி நன்றி கூறினார்.

    • சக்கரக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என தலைவர் யாழினி புஷ்பவள்ளி தெரிவித்தார்.
    • ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் சக்கரக்கோட்டை ஊராட்சி யில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதன் தலைவரும். முதுகலை என்ஜினீயரிங் பட்டதாரியுமான யாழினி புஷ்பவள்ளி கூறியதாவது:-

    ராமநாதபுரம மாவட்டத்திலேயே அதிக குடியிருப்புகளை கொண்ட, அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதியாக சக்கரக்கோட்டை ஊராட்சி உள்ளது. ஒரு நக ராட்சிக்கு இணையான மக் கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற நான் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.

    ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலை வசதி ஏற்படுத்தப் படும். பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு புதிதாக சாலை உருவாக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக் டர் பிரவீன்குமார், ஊராட்சி களின் உதவி இயக்குனர் பரமசிவம், யூனியன் ஆணை யாளர்கள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன்.

    இவ்வளவு அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஒரு சாலை பணி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. சாலை வசதியில்லாத பகுதிகளுக்கு முதல் கட்டமாக மெட்டல் சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.சக்கரக் கோட்டை ஊராட்சிக்கு சாலை பணிகளுக்கு கூடுத லாக நிதி ஒதுக்கீடு வழங்கு மாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

    சேதுநகர், நேருநகர்-1, 2-வது தெருக்களில் தார் சாலை, நேருநகர்-சேட் இப் ராகிம் நகர் இணைப்பு சாலை ரூ.16 லட்சத்தில், திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தொகுதி நிதியில் ரூ.5 லட்சத்தில் மகாசக்தி நகரில் சாலை, வாணி கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது.

    சிவஞானபுரத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்படுத்தும் வகையில் ரூ.78 லட்சத்தில் மகால், 5 இடங்களில் பேவர்பிளாக் சாலைகள், கலை அரங்கம், காரிக்கூட்டம் இந்திரா நகரில் மயான சாலை, சின்டெக்ஸ்தொட்டி, சக்கரக்கோட்டையில் ரூ.22 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடி நீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்படும்.

    போக்குவரத்து நகர், மணி நகர், தென்றல் நகர், ஆதம் நகர், முல்லை நகர், தமிழ் நகர் பகுதிகளில் ஏராளமான புதிய மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதி செய்யப் பட்டுள்ளது. ஊராட்சி முழுவதும் குடிநீர் பைப் லைன்கள் விரிவாக்கம் செய்து குடிநீர் வினியோகிக் கப்படுகிறது. மேலவாணியில் செயல்படாமல் இருந்த நீர் தேக்க தொட்டி பயன்பாட் டிற்கு கொண்டுவரப்பட்டு பைப்லைன் அமைத்து காரிக் கூட்டம், வாணி, சக்கரக்கோட்டை, தவ்ஹீத் நகர் பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மஞ்சன மாரியம்மன் நகரில் ஜவஜீவன் திட்டத்தில் 300 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    சிவஞானபுரத்தில் இருந்து ரெயில்வே தண்ட வாளம் வழியாக சக்கரக் கோட்டை முனி யசாமி கோவில் வழியாக தரவை பகுதி வரை ரூ.60 லட் சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிமுடிவடையும் இடத்தில் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை மறுசு ழற்சி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. பாரதிநகர் தெற்கு பகுதியில் மக்கும் குப்பைகள் அனைத் தும் திடக்கழிவு மேலாண்மை செய்து திரவ இயற்கை உரம் தயாரித்து ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சாயத்து தலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் வளைய பூக்குளம் ஊராட்சியில் 53 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்க ளுக்கான குடிநீர் தேவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

    இதில் கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி பேசுகையில், கமுதி யூனியனில் குடிநீர் தேவைக்கான ஆய்வுக் கூட்டம் நடத்திய கலெக்டரை பாராட்டு கிறேன். இந்த யூனியனில் நீர் ஆதாரங்களை தூர்வாரி மழைநீர் கடலில் கலக்காமல் சேமித்தாலே குடிநீர் பிரச்சினை தீரும்.கமுதி பகுதியில் ஆறு, மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார்.

    மேலும் ஊராட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். அனை வரும் காவிரி குடிநீர் திட்டத்தை அதிகாரிகள் முறையாக மராமத்து செய்வ தில்லை என்றும், உடைப்பு ஏற்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதில் பயிற்சி கலெக்டர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, காவிரி குடிநீர் திட்ட பொறியா ளர்கள், கமுதி யூனியன் ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், யூனியன் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தேவர் உள்பட பலரும் தங்களது கருத்து களை தெரிவித்தனர். வளையபூக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நன்றி கூறினார்.

    • முறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள முறையூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்.எம். சுரேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அடிப்படை கட்டமைப்பு-தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கே.வி.வி.டி. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கண்டறியப்பட்டு பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாள்தோறும் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துமாறும் கிராம மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    இதில் சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கதிரேசன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயநிதி குழுவினர், பணித்தள பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
    • திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு காக்காயன்தோப்பு, வீராம்பட்டினம், மணவெளி, நல்லவாடு, அபிஷே கப்பாக்கம், டி. என்.பாளையம் உள்ளிட்ட14 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மே1-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இக் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

    எனவே பொதுமக்கள், மகளிர் குழு, கிராம வளர்ச்சி சங்க உறுப்பினர்கள், இளைஞர்கள் என திரளான பேர் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி 5 ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க பள்ளி பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் தொடக்க கல்வி பயில்வதற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் கோட்டைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2023-24 கல்வியாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதாக மக்கள் உறுதி அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் மற்றும் கோட்டைபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • கும்பகோணம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடம் கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினரும், கும்பகோணம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான அசோக்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.எஸ்.பாலசுப்ரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி லட்சுமி பிரியா, மாவட்ட பிரதிநிதி குணாளன், பேரூராட்சி உறுப்பினர்கள் குணசேகர், இளவரசி ராமலிங்கம், ராதிகா ஜெய்சங்கர், கலா ராமமூர்த்தி மற்றும் செழியன், ஆறு.மதியழகன், யூசுப், கோபால் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுஇடத்தில்  1.5 ஏக்கர் பொது இடத்தை ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள  மதுரை வீரன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இடத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருந்தது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீண்டும்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டுமென  அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இந்த போராட்டத்தில்  தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் கண்ணையன், அரசம்பாளையம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் அ.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 1200-க்கும் மேற்பட்டோர் பணி  செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கும் பணி கடந்த மாதத்தில் முடிவடைந்த நிலையில் பணிபுரிபவர்களுக்கு புதிய அட்டை வழங்க  ஊராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வந்தனர்.  மேலும், ரூ.1000  கட்டினால் மட்டுமே உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த   200- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊராட்சி   மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி  போலீசார்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இப்பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட  அதிகாரிகளோ, ஊராட்சி தலைவரோ நேரில் வரவில்லை.  அதுமட்டுமல்லாமல் இந்த ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாதது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது. 

     4 மணி நேரத்துக்குப் பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி தள  பொறுப்பாளர்களை வைத்து புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் கூறியதாவது:-

     அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு ஊராட்சி செயலர் இல்லாததால் இப்பகுதியில் நடைபெறும் ஊராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது எனவும், ஏற்கனவே ஜல் ஜீவன் குடிநீர் குழாய் இணைப்பு பெறப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் வருவதில்லை எனவும், இது குறித்து ஒன்றிய ஆணையாளரிடம்  தெரிவித்தால், அவர் தலைவர் சொல்படி கேளுங்கள் என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்
    ×