search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில் ஆர்ப்பாட்டம்
    X

    சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சீர்காழியில் ஆர்ப்பாட்டம்

    • மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
    • கைது செய்த 8 பேரை போலீசார் விடுவித்தனர்.

    சீர்காழி:

    மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கடந்த வாரம் புத்தூரில் சாலைமறியல் போரா ட்டத்தில் ஈடுப்பட்டபோது 9 ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் கைது செய்து,

    அன்று மாலை 8பேரை விடுவித்தனர்.

    இதனிடையே ஊராட்சி தலைவர் நேதாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் புளிய ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மீது போட ப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு சாமுவே ல்ராஜ் கண்டன உரையாற்றினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×