search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI"

    இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. #ENGvWI

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்தது. இது புதிய சாதனையாகும். ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் புதிய சாதனை நிகழ்த்தியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் 12 சிக்சர்களும், பிராவோ 4 சிக்சர்களும், ஆஸ்தரே நர்ஸ் 3 சிக்சர்களும், கேப்பெல், ஹோப், ஹெட்மயர், தேவேந்திர பிஷூ தலா ஒரு சிக்சரும் அடித்தனர். #ENGvWI
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 361 ரன் இலக்கை எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது ஒருநாள் போட்டி வரலாற்றில் 3-வது சிறந்த சேசிங் சாதனையாகும். #ENGvWI

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் 361 ரன் இலக்கை எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் வெற்றிகரமான சேசிங்கில் 3-வது சிறந்த சாதனையாகும்.

    2006-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன் இலக்கை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதே முதல் சாதனையாகும். 2016-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 372 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது 2-வது நிலையாகும். #ENGvWI
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேசன்ராய், ஜோரூட் ஆகியோரது சதத்தால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ENGvWI
    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்தது.

    கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 129 பந்தில் 3 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் 135 ரன் குவித்தார். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். ஹோப் 64 ரன்னும், டாரன் பிராவோ 40 ரன்னும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ், ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட்டும் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இங்கிலாந்து அணி 361 ரன் இலக்கை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றது. அந்த அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர், ஜேசன்ராய், ஜோரூட் ஆகியோரது சதத்தால் இந்த வெற்றி எளிதில் கிடைத்தது.



    ஜேசன் ராய் 85 பந்தில் 123 ரன்னும் (15 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோரூட் 97 பந்தில் 102 ரன்னும் (9 பவுண்டரி) கேப்டன் மார்கன் 51 பந்தில் 65 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஹோல்டர் 2 விக்கெட்டும், தேவேந்திர பிஷூ, தாமஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நாளை (22-ந்தேதி) நடக்கிறது. #ENGvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

    இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஆடினார். அதன் பிறகு அவர் உலக கோப்பையில் தான் விளையாட உள்ளார். உலக கோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இது அவருக்கு 5-வது உலக கோப்பை ஆகும்.

    கிறிஸ் கெய்ல் 284 ஒரு நாள் போட்டியில் விளையாடி 9727 ரன் எடுத்துள்ளார். சராசரி 37.12 ஆகும். 23 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன் குவித்துள்ளார்.

    10 ஆயிரம் ரன்னை தொட கெய்லுக்கு இன்னும் 273 ரன் தேவையாகும். லாராவின் சாதனையை முறியடிக்க 677 ரன்கள் தேவை. இந்த இரண்டு சாதனைகளில் ஒன்றை அவர் உலக கோப்பையில் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கெய்ல் கடைசியாக 2014-ம் ஆண்டு டெஸ்டில் விளையாடினார். 103 டெஸ்டில் விளையாடி 7214 ரன் எடுத்து இருந்தார்.  #ChrisGayle #ChrisGayleRetire #ODIs #ICCWorldCup2019
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் ஆடி வரும் இந்திய துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். #NZvIND #TeamIndia
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



    இந்தியா தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டானார். #NZvIND #TeamIndia
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. #NZvIND
    பேலூரில்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை மவுண்ட் மன்கன்யில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சமி, சாகல், குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் புவனேஸ்வர் குமார், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஆகியோரும் உள்ளனர்.

    பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்த்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் மீதான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது.

    இதையடுத்து ஹர்த்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு புறப்பட்டு இந்திய அணியுடன் இணைகிறார். ஆனால் நாளைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

    முதல் போட்டியில் வெற்றி பெற்றால்தால் இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கும். ஆனால் நியூசிலாந்து திடீரென எழுச்சி பெற கூடிய அணியாகும். இதனால் இந்தியா கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம்.

    நாளைய போட்டியிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் வில்லியம்சஸ் தவிர மற்ற வீரர்கள் முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.

    இதனை சரி செய்ய அந்த அணி வீரர்கள் முயற்சிப்பார்கள். நாளைய ஆட்டத்தில் தோற்றால் நியூசிலாந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும். இதனால் வெற்றி பெற கடினமாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvIND
    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர் என இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    புதுடெல்லி:

    இரண்டு உலக கோப்பையை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்ந்தவர் டோனி.

    2007-ம் ஆண்டு அறிமுக 20 ஓவர் உலககோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலககோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணியின் 3 நிலைக்கு கேப்டனாக ஜொலித்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் மட்டும் ஆடி வந்தார்.

    கடந்த ஆண்டு அவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் உலககோப்பை அணியில் அவர் தேவையா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால் இந்த ஆண்டு டோனியின் தொடக்கமே அமர்களமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற டோனியின் ‘பேட்டிங்’ முக்கிய பங்கு வகித்தது.

    3 ஆட்டத்திலும் சேர்த்து 192 ரன்கள் குவித்தார். மூன்றிலும் அரைசதம் எடுத்து முத்திரை பதித்தார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் அவர் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

    உலககோப்பை அணியில் அவர் இடம் பெறுவதை யாராலும் இனி தடுக்க இயலாது.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் இன்னும் உலகின் சிறந்த வீரராக டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர். டோனி ஆட்டத்தை முடிக்கும் திறமையில் இருக்கும் போது யாராலும் தடுக்க இயலாது.

    அவரது ஷாட்டுகள் மிகவும் அதிரடியாக இருக்கும். அவர் தனது தந்திரமான ஆட்டத்தை சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கையாள்வதை பலமுறை நிரூபித்துவிட்டார்.



    ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 6-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்வார். ஆனால் அவரையும் விட சிறந்தவராக டோனி இருக்கிறார்.

    பெவன் பவுண்டரி மூலம் தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார். டோனி சிக்கர் மூலம் ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற வைப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுக்க ஓடுவதில் டோனி வல்லவர். 37 வயதிலும் அவரால் ரன் எடுக்க வேகமாக ஓட முடிகிறது. ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டம் மேம்பட்டு இருப்பதற்கு 20 ஓவர் போட்டியில் ஆடுவது காரணம். புள்ளி விவரப்படி டோனி தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் உலகின் சிறந்த வீரர்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெறுகிறது. #AUSvIND #ViratKohli #MSDhoni
    மெல்போர்ன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டுவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நாளை (18-ந்தேதி) நடக்கிறது.

    கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 299 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.

    தமிழக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆவாரா? என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் ரன்களை வாரி கொடுத்தார். இதனால் அவர் இடத்தில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.



    பேட்டிங்கில் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல மிடில் ஆர்டர் வரிசையில் தினேஷ் கார்த்திக் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    பந்து வீச்சில் புவனேஷ் வர்குமார், முகமது‌ஷமி நல்ல நிலையில் உள்ளனர். குல்தீப் யாதவ் பந்து வீச்சு சுமாராக இருப்பதால் அவர் இடத்தில் யசுவேந்திர சாஹல் இடம் பெறலாம்.

    டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போலவே ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    பேட்டிங், மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் ஷான்மார்ஷ், ஹேண்ட்ஸ் கோம், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ் ஆகியோரும், பந்து வீச்சில் ரிச்சர்ட்சன், பெகரன்டார்ப் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டெஸ்ட் தொடரை இழந்த மாதிரி ஒரு நாள் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக அந்த அணி வெற்றிக்கு கடுமையாக போராடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது போட்டியாகும். இதுவரை நடந்த 130 போட்டியில் இந்தியா 46-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. சோனிசிக்ஸ், சோனி டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  #AUSvIND #ViratKohli #MSDhoni
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த கவுதம் காம்பீர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #Gambhir #GautamGambhirRetires #GautamGambhir
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்தார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

    கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கவுதம் காம்பிருக்கு கடந்த சில வருடங்களாக சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.



    இந்நிலையில் இன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 37 வயதாகும் கவுதம் காம்பீர் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார்.
    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. #PAKvNZ #NZvPAK
    துபாய்:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. பாபர் ஆசம் 92 ரன்னும், பஹர்ஜமான் 65 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 60 ரன்னும் எடுத்தனர். பெர்குசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. #PAKvNZ #NZvPAK
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆஸ்திரேலியா மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. #AUSvSA
    ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் மூன்று ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    பெங்களூருவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் அக்டோபர் 1-ந்தேதி நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு சோதனைக் காலமாக அமைந்தது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடைபெற்றார்கள்.

    அதன்பின் ஆஸ்திரேலியா ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.



    இதன்மூலம் தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் போட்டியில் தோல்வியைச் சந்தித்து ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமான சாதனைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை இதேபோல் தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால் இதுபோன்ற மோசமான தோல்வியாக அது இல்லை.

    இது ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது மிகக்குறைந்த ஸ்கோராகும்.

    முதல் 10 ஓவரான பவர்பிளேயில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2001-ல் இருந்து சொந்த மைதானத்தில் மிகக்குறைந்த ஸ்கோரை (முதலில் பேட்டிங்) பதிவு செய்துள்ளது. 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக 15 ரன்கள் எடுத்திருந்தது.

    2018-ல் 11 போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகவும் மோசமான வருடம் இதுதான்.
    ×