search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abandoned"

    • அகல ெரயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
    • மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    மதுரை- தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

    விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

    விருதுநகர் ெரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இந்தநிகழ்ச்சியில் பேசிய அவர் திட்டப்பணிகளை பற்றி பேசுவதை விட எதிர்கட்சிகளை பற்றி குற்றம் காட்டுவதையே நோக்கமாக கொண்டி ருந்தார்.

    ெரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு தற்போது ரூ. 7 கோடி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்ட பணிகளை பற்றி தங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என்றும் அதிகா ரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக விருது நகர் ெரயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ெரயில் பாதை திட்டப் பணியை மத்திய ெரயில்வே அமைச்சகம் கைவிட முடிவு செய்துவிட்டது. இது பற்றி கோட்ட ெரயில்வே அதிகாரியிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தகவல் இல்லை என கூறுகின்றார்.

    எனவே இதுகுறித்து தென் மாவட்ட எம்.பி.க்கள் அனைவரும் மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து இத்திட்டத்தை கைவிடக் கூடாது என்றும் தொடர்ந்து மேற்கொண்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முறையி டுவோம். அத்துடன் எழுத்துப்பூர்வமாகவும் மனு கொடுக்க உள்ளோம்.

    ராகுல்காந்தி நாடாளு மன்ற விவாதத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது என்பதில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் உறுதியாக உள்ளனர். எனினும் இதுகுறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவகுரு நாதன், மீனாட்சி சுந்தரம், வக்கீல் சீனிவாசன் ஆகி யோர் உடனிருந்தனர்.

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. #PAKvNZ #NZvPAK
    துபாய்:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. பாபர் ஆசம் 92 ரன்னும், பஹர்ஜமான் 65 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 60 ரன்னும் எடுத்தனர். பெர்குசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. #PAKvNZ #NZvPAK
    பிள்ளைகளால் கைவிடப்பட்ட பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். #GeetaKapoor #RIP
    மும்பை:

    ‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார்.



    இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த நடிகைக்கு திரைத்துறையினர் சிலர் உதவி செய்தனர். பின்னர் அவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு நேற்று உடல்நிலை சரியல்லாமல் போனது. இதையடுத்து அவர் கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நடிகை கீதா கபூருக்கு வயது 57.  #GeetaKapoor #RIP
    ×