search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negotiation"

    • இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் சில தினங்களுக்கு முன்பு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் . கடலூர் புதுநகர் போலீசார் உரிய அனுமதியில்லாமல் கொடி கம்பம் வைக்க கூடாது என தெரிவித்தனர். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது. ஏற்கனவே இருந்த இடத்தில் கொடி கம்பம் புதியதாக வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிமெண்ட் கட்டை கட்டி கொடிக்கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக கூறி அதிரடியாக கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடி கம்பம் அகற்றியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் நிர்வாகிகள் மத்தியில் பரவியதால்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.

    உடனடியாக மீண்டும் இன்று காலை புதிதாக கொடி கம்பம் வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரண்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.

    • பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாச மாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார்.
    • தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வசந்த் (27). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாசமாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது செல்போனை நண்பர் தினேசிடம் (27) அடமானம் வைத்துள்ளார். நேற்று தினேஷ் செல்போனை எடுத்து பார்த்த போது தனது கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமா சித்தரித்து வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே இத்தகவல் வீரசோழபுரம் கிராமத்தில் காட்டுத்தீயாய் பரவியது. உடனே திரண்டு வந்த பெண்கள் தினேசிடம் போனை பிடுங்கி அதிலிருந்த புகைப்படங்களை பார்த்து கொந்தளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தும் வசந்த் கிராமத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக போலீசாார் வசந்த் இருக்கும் இடத்தை கண்டறிந்து முரார்பாளையம் அருகே அவரை கைது செய்தனர்.

    ஆனால் வசந்தை தங்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி கிராம மக்கள் 300பேர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கைது செய்த வசந்தை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலை மறியல் கைவடுவதாக தெரிவித்தனர். இதனிடையே கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட னர். தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வசந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர் தினேஷையும் போலீசார் கைது செய்தனர். ரவியை தேடி வருகின்றனர். ரவி குடும்பத்திற்கும் தினேஷ் குடும்பத்திற்கும் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் வசந்த் குடும்பத்தை பழிவாங்க ரவி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது தெரிய வந்தது.

    • பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    திருக்குவளை ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வம் , திருக்குவளை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.

    இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
    • இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சரகம் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் சிறு விவசாயிகள் அனுபவித்து வரும் நத்தம் இடத்தை வேறொருவர் நபர்களுக்கு சிட்டா அடங்கல் வழங்கி நில அபகரிப்பு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அம்மாபேட்டை விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழுவின் சார்பில் உண்ணாவிரதபோராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

    இதுகுறித்து பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் பூங்கொடி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மகாபிரபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தர்மராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் சின்னராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கொத்தங்குடி கிராமத்தில் முறைகேடாக வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது.
    • குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 136 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    இதுதவிர 34 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில் காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி பெற கடுமையாக போராடினர். பலர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அதில் மந்திரிகளை சந்திக்க முடியவில்லை என்றும், தொகுதி வளர்ச்சி குறித்து பேச முடியவில்லை என்றும் பரபரப்பான குற்றச் சாட்டுகளை தெரிவித்து இருந்தனர். அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த சில எம்.எல்.ஏ.க்கள் அது பா.ஜ.க.வின் சதிவேலை என்று தெரிவித்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது கருத்து வேறுபாடுகளை களைந்து பணியாற்றுமாறும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவுக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் சிலரை மீண்டும் காங்கிரசில் இணைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில் காங்கிரசை சேர்ந்த பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம்), எஸ்.டி.சோமசேகர் (யஸ்வந்த்பூர்) மற்றும் சிவராம் ஹெப்பர் (எல்லாபூர்) ஆகியோர் அடங்குவர்.

    இதேபோல் ஜனதாதளத்தை சேர்ந்த கே.கோபாலையா (மகாலட்சுமி லேஅவுட்), தொட்ட நாகவுட் பாட்டீல் (குஷ்டகி) ஆகிய 6 பேர் ஆபரேசன் தாமரை மூலம் பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் சிலர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த நிலையில் அடுத்து ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு அவர்கள் மீண்டும் காங்கிரசில் இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே காங்கிரசில் 50-க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள நிலையில் பா.ஜனதாவிலிருந்து வந்தால் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைப்பது மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் பா.ஜனதாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் காங்கிரசில் இணைந்தால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனதா தளத்திற்கு பலமான சவாலாக இருக்கும் யஸ்வந்த்பூர் போன்ற தொகுதிகளில் போட்டியிடுவது அபாயகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசில் சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல் கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரியன் கார்கே கூறும்போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் சேர விரும்பினால் நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்களின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

    2019-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்திலிருந்து விலகி சென்றவர்களை அதேபாணியில் காங்கிரஸ் மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இணையலாமா, வேண்டாமா என்ற இரட்டை நிலைப்பாட்டில இருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பொதுமக்கள் அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர்

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த தீர்த்தக்குளம் பூந்தோட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடம்  அறநிலையத்துறைக்கு சொந்தம் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு சொந்தம் என கூறிவருகின்றனர். இந்நிலையில் இங்கு குடியிருப்பவர்களில் 15 பேர் அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தவில்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 15 வீடுகளை காலி செய்ய அறநிலையத் துறை அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் இன்று பூந்தோட்டத்திற்கு வந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்து அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அர்ஜூனன் எம்.எல்.ஏ., அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். மேலும், அறநிலையத் துறைக்கு இந்த இடம் சொந்தம் என்றால் அதற்குரிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து பூந்தோட்டம் பகுதிக்கு அ.தி.மு.க.வினர் குவிந்தனர். அனைவரும் அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அர்ஜூனன் எம்.எல்.ஏ. மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
    • வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் ஈரோடு கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை மற்றும் 240-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நடைபெறும் வார ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வார சந்தை நடைபெறுகிறது.

    கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வார சந்தைக்கு வருவது வழக்கம்.

    சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2019 வருடம் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு மார்க்கெட் பகுதி அருகே ரூ.54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 262 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி சார்பில் பொது ஏலத்தில் கடைகள் விட முடிவு செய்யப்பட்டது. மேலும் வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    நாங்கள் இந்த பகுதியில் சுமார் 45 வருடமாக ஜவுளிக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்து கிறோம். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் 262 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடத்தில் கடைகளை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது ஏலத்தில் கடைகளை ஏலத்தில் விடகூடாது மாறாக ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து விட வேண்டும். அதேபோன்று வைப்பு நிதி தொகை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    மேலும் தற்போது நாங்கள் கொடுக்கும் வாடகையை 12 மாத வைப்பு நிதியாக செலுத்த தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றசாட்டு.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சன்னமங்கலம், பனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 நபர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிபிசிஎல் அலுவலகத்திற்குள் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    மேலும் இதற்கு நிறுவன அதிகாரிகளே காரணம் என்றும்,இதனால் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி இந்த போராட்டத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும்

    சிபிசிஎல் பொது மேலாளர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸ் இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • விருத்தாசலத்தில் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மருங்கூர், காவனூர், வல்லியம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்புகளை மஞ்சள் நோய் தாக்கியதால், கரும்பு வளர்ச்சி அடையாமல் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கரும்பு முற்றிலும் அழிவதற்குள், தங்களது கரும்புகளை வெட்டி தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புகளை லாரிகள் மற்றும் டிராக்டர்களில் இருந்து இறக்க கூடாது என்று கூறி விவசாயிகளை தடுத்தனர். இதனால் கரும்புகள் கடந்த 3 நாட்களாக வெயிலால் வாகனங்களில் இருந்தே காய்ந்து வருகிறது. மேலும் அறுவடை செய்யாத நோய் தாக்கிய கரும்புகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர், கரும்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை பின்னர் விவசாயிகளின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காத அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து, அலுவலகத்தின் முன்பக்க, பின்பக்க உள்ள கதவுகளை பூட்டி சீல் வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலகத்தின் பூட்டை திறந்து அலுவலர்களை விடுவித்தனர். இந்நிலையில் இன்று காலை விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிகாரிகளை அலுவலகத்திற்குள் சிறை வைத்து பூட்டிய விவசாயிகளான ராஜ வன்னியன் (வயது 47), செல்வ வளவன் (37), ராஜீவ் காந்தி (47) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு பகுதி நேர அங்காடி - பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது
    • போராட்டம் எதிரொலி நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையை அடுத்த செம்பாட்டூர் பகுதிக்கு பகுதிநேர அங்காடி, பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் சி.ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் எஸ்.பெருமாள் ஆகியோர் உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.சுமார் ஒரு மணிநேரமாக நீடித்த போராட்டத்தை அடுத்து புதுக்கோட்டை வட்டாட்சியர் எஸ்.விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பழனிவேல், ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தா பரமசிவம் உள்ளிட்டோர் சங்கத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு விரைவாக பகுதிநேர அங்காடி திறப்பது, வரும் திங்கள் கிழமை முதல் செம்பாட்டூர் வழியாக தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்திற்கு காலையும், மாலையும் அரசு நகரப் பேருந்து இயக்குவது, செம்பாட்டூர் சிவன்கோவில் அருகில் உள்ள பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டிக்குப் பதிலாக புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பது, குடிநீர்த் தேவைக்காக புதிய ஆழ்துளைக்கிணறு அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

    • பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.

    இதனைத் தொடரந்து இப்பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய் துறையை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது,

    பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தகாத சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமூக நிலைக்கு கொண்டு வர இரு பிரிவினருக்கான அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் உமா தலை மையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    பின்னர் ஜேடர் பாளையம் அருகே எம்.குன்னத்தூர் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான விளைநிலங்களை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

    அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதியில் சந்தே கப்படும்படியான நபர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் அறியப்பட்டால் உடனடியாக 94981 81340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

    மேலும், இதுபோன்று 2 சமுதாய பிரிவினருக்கு இடையேயான பிரச்ச னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்ப டுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சி) அசோக்குமார், ஆகியோர் உட்பட காவல் துறையினர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • துறையூரில் நரிக்குறவ பழங்குடியின மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது
    • அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் என அறிவித்ததால் அமைதி பேச்சு வார்த்தை

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் வசிக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வனஜா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரிக்குறவர் இன மக்களின் முக்கிய கோரிக்கையான கழிவறை கட்டிடம் சரி செய்வதற்கு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும், நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் 124 குடும்பங்களில் 56 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும், மேலும் அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய தார் சாலை அமைக்க வரும் நிதி ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு சாலை மறியல் செய்யப் போவதை கைவிடுவதாக அறிவித்தனர். இக்கூட்டத்தில் காவல்துறை ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் நரிக்குறவர் இன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×