search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைதி பேச்சு வார்த்தை
    X

    அமைதி பேச்சு வார்த்தை

    • துறையூரில் நரிக்குறவ பழங்குடியின மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது
    • அடிப்படை வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் என அறிவித்ததால் அமைதி பேச்சு வார்த்தை

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் வசிக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வனஜா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரிக்குறவர் இன மக்களின் முக்கிய கோரிக்கையான கழிவறை கட்டிடம் சரி செய்வதற்கு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும், நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் 124 குடும்பங்களில் 56 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும், மேலும் அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய தார் சாலை அமைக்க வரும் நிதி ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு சாலை மறியல் செய்யப் போவதை கைவிடுவதாக அறிவித்தனர். இக்கூட்டத்தில் காவல்துறை ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் நரிக்குறவர் இன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×