என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் புதுப்பாளையத்தில் அகற்றப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கொடி கம்பத்தை மீண்டும் வைத்ததால் பரபரப்பு
- இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் சில தினங்களுக்கு முன்பு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் . கடலூர் புதுநகர் போலீசார் உரிய அனுமதியில்லாமல் கொடி கம்பம் வைக்க கூடாது என தெரிவித்தனர். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கொடி கம்பம் இருந்து வந்தது. ஏற்கனவே இருந்த இடத்தில் கொடி கம்பம் புதியதாக வைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிமெண்ட் கட்டை கட்டி கொடிக்கம்பம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக கூறி அதிரடியாக கொடிக்கம்பத்தை அகற்றினார்கள். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கொடி கம்பம் அகற்றியதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் நிர்வாகிகள் மத்தியில் பரவியதால்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டனர்.
உடனடியாக மீண்டும் இன்று காலை புதிதாக கொடி கம்பம் வைத்தனர். இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரண்டு உள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்