search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள்.

    சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

    • நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றசாட்டு.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சன்னமங்கலம், பனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 நபர்கள் சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிபிசிஎல் அலுவலகத்திற்குள் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பணி தர மறுப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    மேலும் இதற்கு நிறுவன அதிகாரிகளே காரணம் என்றும்,இதனால் வேலையில்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி இந்த போராட்டத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும்

    சிபிசிஎல் பொது மேலாளர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸ் இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×