search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி சந்தை"

    • பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
    • வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் பகுதிகளில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

    இந்த வாரச்சந்தைக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    சாதாரண நாட்களில் நடைபெறும் வாரச்சந்தையில் ரூ.2 கோடி ரூபாய்க்கும், பண்டிகை காலங்களில் நடைபெறும் ரூ.5 கோடி ரூபாய் வரையிலும் வர்த்தகம் நடைபெறும். வெளி மாநில வியாபாரிகள் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை எடுத்து வந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ந் தேதி முதல் அமலுக்கு வந்ததால் ரூ.50 ஆயிரம் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு கூடிய வார ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வெளி மாநில வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இன்று வார ஜவுளி சந்தை நடைபெறும் நாளில் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இதற்கு அஞ்சி வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக சிறு குறு வியாபாரிகள் ரொக்க பணத்திற்கு உரிய ஆவணங்கள் எடுத்து வருவதில் சிரமம் உள்ளதால், இரவு நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

    இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், சில்லரை வர்த்தகம் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது. வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவித்த வியாபாரிகள். இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும், வியாபாரிகளுக்கு தேர்தல் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி ஜவுளி விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
    • சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் திங்கள் மாலை முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரள, தெலு ங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு இங்கு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை மந்தமாக நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடி த்துள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவாக வந்திருந்தனர்.நேற்று இரவு முழுவதும் விடிய விடிய ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    மழை பெய்தாலும் மழையை பொறுப்படுத்தாமல் வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை மொத்தம் கொள்முதல் விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    குழந்தைகளுக்கான ஜவுளி துணி விற்பனைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைபோல் பெண்களுக்கான காட்டன் சுடிதார் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆண்களுக்கான பேண்ட், சட்டை, வேஷ்டி விற்பனையும் விறு விறுப்பாக நடந்தது.

    இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும் போது,

    கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினை காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி கடந்த வாரம் முதல் ஜவுளி விற்பனை ஓரளவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த வாரம் ஜவுளி வார சந்தை நேற்று மாலை கூடியது. இரவில் விடிய விடிய வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது. பெட் சீட்டுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன.

    இந்த ஆண்டு தீபாவளியொட்டி புதிய டிசைன்களில் ஜவுளி ரகங்கள் அதிகம் வந்துள்ளது. இதனால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் சாலையின் இருபுறம் சிறு சிறு ஜவுளி கடைகள் போடப் பட்டிருந்தன. அதிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேப்போல் சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம், பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஜவுளிக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கும் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    • கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
    • தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டன. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகளும், 730 வார சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மாத வாடகையாக ரூ. 31,500-ம், வாய்ப்புத்தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படாமலேயே உள்ளது.

    இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர்.

    இதையடுத்து சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பகுதியில் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு 86 கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் முதல் பழைய இடத்தில் மீண்டும் ஜவுளி சந்தை முழுமையாக செயல்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
    • வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் ஈரோடு கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை மற்றும் 240-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நடைபெறும் வார ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வார சந்தை நடைபெறுகிறது.

    கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வார சந்தைக்கு வருவது வழக்கம்.

    சாதாரண நாட்களில் ரூ.2 முதல் 3 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரையும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2019 வருடம் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டு மார்க்கெட் பகுதி அருகே ரூ.54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் மொத்தம் 262 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகத்தில் ஜவுளி சந்தை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி சார்பில் பொது ஏலத்தில் கடைகள் விட முடிவு செய்யப்பட்டது. மேலும் வைப்பு தொகையாக ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதற்கு ஜவுளி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-

    நாங்கள் இந்த பகுதியில் சுமார் 45 வருடமாக ஜவுளிக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்து கிறோம். இந்நிலையில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் 262 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடத்தில் கடைகளை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது ஏலத்தில் கடைகளை ஏலத்தில் விடகூடாது மாறாக ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து விட வேண்டும். அதேபோன்று வைப்பு நிதி தொகை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    மேலும் தற்போது நாங்கள் கொடுக்கும் வாடகையை 12 மாத வைப்பு நிதியாக செலுத்த தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடந்தது. இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது. இன்று நடந்த ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
    • ஆடி மாதம் முழுவதும் கோவிலில் விசேஷம் உள்ளதால் காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள், சேலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆடிப்பண்டிகையை யொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரம் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது. குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது.

    வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது. கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

    ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் ஆடி மாதம் முழுவதும் கோவிலில் விசேஷம் உள்ளதால் காட்டன் துணிகள், காவி வேஷ்டி, சட்டைகள், துண்டுகள், சேலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×